Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணர்ச்சியின் மீதான அரசியலை கைவிட தயாராகும் கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழநேசன் இணையத்தில் வந்ததாம் உதயனில் வந்திருக்கு கருத்துகளை கருத்துக்களால் வெல்வீர்களா??

page-010.jpg

page-016.jpg

http://uthayan.com/myuthayan/1.1/index.html

பக்கம் 11 & 16

Edited by மோகன்
உதயன் பத்திரிகை விடயம் படமாக இணைக்கப்பட்டுள்ளது.

தமிழர் உரிமைகளை புலிகளுக்கு முன்போ, புலிகளுக்குப் பின்போ, புலிகளின் காலத்திலோ எவரும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. வண்ணன் குகேந்திராவின் முற்பாதி யதார்த்தமானது. பிற்பாதி சார்பானது. கூட்டமைப்பிற்கு அழுத்தங்கள் வெளியிலிருந்து உண்டென்பது தெளிவானது. அதன் காரணமாகத்தான் பலர் அதிலிருந்து விலக்கப்பட்டனர். அதற்கான சரியான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. கூட்டமைப்பின் உணர்ச்சி கரமான அரசியல் கனடிய வானொலியில் வெளிப்படுத்தப்பட்டதுதான். பொறுமையாகப் பதில் சொல்ல முடியாத தலைவர்.

கூட்டமைப்பு சமோயோசிதமாக விலக்கப்பட்டவர்களைக் கையாண்டிருக்க வேண்டும். விலகிச் செல்லாமல் செயற்பாடுடையவர்களாக அவர்களை ஆக்கியிருந்தால் அவர்களின் சாணக்கியம் புகழப்பட்டிருக்கும். தீர்பு அங்குள்ள மக்கள் கையிலுண்டு. களத்திலுள்ள மக்களுக்கு உதவும் கடமை புலத்திலுள்ள தமிழருக்குண்டு.

கூட்டமைப்பு சமோயோசிதமாக விலக்கப்பட்டவர்களைக் கையாண்டிருக்க வேண்டும். விலகிச் செல்லாமல் செயற்பாடுடையவர்களாக அவர்களை ஆக்கியிருந்தால் அவர்களின் சாணக்கியம் புகழப்பட்டிருக்கும். தீர்பு அங்குள்ள மக்கள் கையிலுண்டு. களத்திலுள்ள மக்களுக்கு உதவும் கடமை புலத்திலுள்ள தமிழருக்குண்டு.

கூட்டமைப்பின் பலவீனமான தலைமைத்துவத்தின் விளைவே பிரிவுகளும், வெளியேற்றங்களும்.

களத்திலுள்ள மக்களுக்கு உதவும் கடமை புலத்திலுள்ள தமிழருக்குண்டு.

இந்த உறவை சுயநலத்துக்காக அரசியல்வாதிகள் கேலிபண்ணுவதை தாயகத்தில் வாழும் நாம் அனுமதியோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நலன் எனும் ஒணர்வே இன்றிச் செயற்படும் கூட்டமைப்பிலிருந்து இதைத்தவிர வேறெதனை எதிர்பார்க்கமுடியும்

தேவை கருதி கீழவருவதை இவ்விடுகையிலும் இணைக்கிறேன்.

சம்பந்தன் அவர்கள் திருகுதாளக் கதை சொல்ல வெளிக்கிட்டுட்டார்.

முதலாவது விடையம் இவர்களிடம் இந்தியா சொன்னதாம் பாராளுமன்றத்தேர்த்தலில் நின்று மக்கள் ஆணையைப்பெற்று வாருங்கள், அப்போது நாங்களும் உங்களுடன் ஒத்துழைக்றோம் என. இப்பிடித்தான் எழுபதுகளில சும்மா கிடந்த பொடியளை கூட்டணிக்காரர்கள் உசுப்பிவிட அதுக்குச்சமமாக இந்தியாவும் ஆயுதங்களைக் கொடுத்து சிறீலங்காவுக்கு எதிராகத் தாக்குதல்கள ஆரம்பியுங்கோ மற்ற விடையங்களை நாங்கள் பாத்துக்கொள்கிறோம் எண்டு சொன்னவை இப்ப முள்ளிவாய்காலிலை கொண்டுவந்து மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பினை நடாத்தி தமது முதலாவது பாத்துக்கொள்ளுகிறம் அத்தியாயத்தை முடித்துவைத்திருக்கினம். இதன்மூலம் பத்துலடசத்துக்கும் அதிகமான மக்கள் தமது வாழ்நிலங்களைவிட்டு வெளிநாடுகளில் போய்த் தங்கிவிட்டார்கள் இவர்களில் அனேகர் திரும்பிவரப்போவதில்லை. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மனநோயாளிகளாக்கப்பட்டும் அன்றாட வாழ்விற்கே அல்லாடும் ஒரு இனக்குழுமத்தின் அங்கமாக மாற்றப்பட்டும், பல்வேறு கலாசசாரச்சீர்கேடுகளுக்கு உள்ளாக்கியும், இராணுவப் புலனாய்வுத்துறையால் அடக்கி ஒடுக்கப்பட்டும் தனது சமூகம்சார்ந்து கனவில்கூட சிந்திக்க முடியாதவண்ணம் பயப்பிராந்தியில் வாழப்பழக்கப்படுத்தி மொத்தத்தில் ஈழத்தமிழர்களைக் கையேலாதாவர்களாக மாற்றியாகிவிட்டது. தவிர்ந்து எதிர்காலத்தில் யாராவது முளைத்தெழுந்தால் அவர்களை அடக்குவதற்கும் இன்னுமொரு முள்ளிவாய்க்காலை நாளையோ, நாளைமறுதினமோ அன்றேல் இன்னமொரு முப்பது வருடம் கழித்தோ தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப விரைவபடுத்தியோ அன்றேல் தாமதப்படுத்தியோ நடாத்தி முடிப்பதற்கான களநிலைமைகளை ஆயத்தப்படுத்துவதிலேயே இந்தியா தற்போது தமிழர் கூட்டமைப்பெனும் பெயரில் சிலருக்குக் கொம்புசீவிவிடுகின்றது. சம்பந்தன் ஐயா இதுநல்லதுக்கல்ல. கடந்தகாலத்தில் உங்களைப்போன்றோரது மென்மையான சுயநலம்மிக்க அரசியல் நடவடிக்கையின் மூலமே பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் விரக்தியடைந்து ஆயுதபலத்தின் மூலம் விடுதலையை வென்றிடமுனைந்து இப்போது மீளாப்புதைகுழியில் மாண்டுவிட்டனர். மீணடும் ஆரம்பத்திலிருந்து இனப்பிரச்சனையின் சிக்கல் முடிச்சக்களை அவிழ்கப்போகிறோம் எனக்கூறி மேற்கூறிய மீளாப்புதைகுழியை இன்னமொருக்கால் உருவாக்க வைப்பதே இந்தியாவின் திட்டம். இதுக்குத்தான் சம்பந்தன், சுரெஸ், மாவை போன்றோர் உடந்தையாகவிருக்கிறார்கள்.

இதில் வேடிக்கையான விடையம் என்னவெனில் குச்சவெளியில் உப்புக்கம்பனிக்கு நிலம்கொடுத்தது சுயநிர்ணய உரிமையைப் பாதிக்குதாம்.

அரைகுறை ஒப்பந்தமான இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்மூலம் ஒன்றிணைக்கப்பட்ட வடக்குக்கிழக்கை பிரித்ததைத் தடுக்கவோ அன்றேல் மீண்டும் அதை இணைக்கவோ கொள்கையளவில்கூட ஆதரவு தெரிவிக்காத இந்தியா, முப்பது வருடமாக நாம் தொப்புள்கொடி உறவு எனக்கூறி எமது உரிமைகளை மீட்டிட ஆவனசெய் எனக்கேட்டும், மன்றாடியும் எதுவுமே செய்யாத இந்தியா, ராஜீவ்காந்தியை வேறுபிற தீயசக்திகளுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு ஈழத்தமிழர்தலையில் குற்றம் சுமத்தி, பழவாங்குவதாகக் கூறிப் பாதகம்செய்த இந்தியா, எதிர்காலத்தில் ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல இந்தியாவில் வசிக்கும் தமிழனுக்கும் நன்மைசெய்யம் எனச்சம்பந்தர் கூறினால், கிழவி சாமத்தியப்டுவாள் எனக்கூறுவொரை இழிவாகப்பார்ப்பதுபோல் பார்க்கவேண்டும். இவர்களது இருப்பினையும் தமிழர் இனவிரோத இந்தியாவின் தொடர்பாளர்களையும் வேரடிமண்ணுடன் சாய்க்கவேண்டும்.

தவிர எழுபதுகளில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி எனும் பெரும் அரசியல் இயக்கம் உடும்புக்கறி புகழ் ஆனந்தசங்கரியால் முடக்கப்பட்டுள்ளதே அது முடக்கப்பட்டு பத்து வருடங்களை அண்மிக்கின்றதே அதைமீடபதற்கு இந்த அப்புக்காத்துக் கனவான்கள் ஏதாவது நடவடிக்கைகளை இதுவரை எடுத்தார்களா? ஒப்புக்குச்சப்பாணி நீதிமன்ற அமர்வுகள்மூலம் இழுத்தடித்துக்கொண்டுபோவதற்க்குக் காரணம் ஒருவேளை தமிழர் கூட்டமைப்போ அன்றேல் தமிழரசுக்கட்சியோ தமக்குச் சார்பற்றவர்களது கைகளுக்குப்போய்விட்டால் நீதிமன்ற வாசலில் தூசிபிடித்து நிற்கும் அதில்ஏறிப் பயணம் போகலாம், அப்போது முரண்டுபிடிக்கும் ஆனந்த சங்கரியாரை உடும்பக்கறியுடணோ அன்றேல் இந்தியாவின் அனுசரணையுடணோ சரிக்கட்டிவிடலாம் என்பதே.

சீதை களங்கமற்றவள் என்பது இராமனுக்குத்தெரியும், ஆனால் காலத்தின்கோலம் ராமனே சீதையின் தீக்குளிப்பை ஏற்றுக்கொணடான். ஆனால்; தமிழர் கூட்டமைப்பினர் வெறும்சோரம்போய்விட்டனர் எனும் சந்தேகத்துடன் நின்றுவிடவில்லை அவர்களது அண்மைக்கால நடவடிக்கைகளினால் அது நிரூபிக்கப்பட்டுள்ளது புலத்தில், தேர்த்தலில் தோல்வியெனும் தீக்குளிப்பைச் சந்தித்தேதீரவேண்டும் காரணம் இந்திய ஆதரவு நிலையெனும் களங்கத்தில் ஊறிவிட்டனர். தமிழர்க்கான உரிமைப்போராட்டமென்பது எதிர்வரும் பொதுத்தேர்தலுடன் முடிவடைந்து விடுவதில்லை அதன்பின்பே புதிய பரிணாமத்தைப் பெறப்போகின்றது அதற்கு முந்தைய படிநிலையே தற்போதைய தேர்த்தல்களம். மாறாக, ஈழத்தமிழர்களது வளமான, சுதந்திரமான வாழ்வு அண்மித்துவிட்டது அதுகூட்டமைப்புத் தோல்வியடைந்தால் வீணாகிப்போய்விடப்போகின்றது என்பதெல்லாம் வீண்கதை. இந்தியா எனும் எதிரிக்கு எமது எதிர்ப்பினைத் தெரிவிக்கவேணடுமாகவிருந்தால், அதனது பெயரை உச்சரிக்கும் எவரையுமே நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என இத்தேர்த்தலின்மூலம் உணர்த்துவதற்க்கு தமிழனுக்குக் கிடைதத் சந்தர்ப்பமாக நாம் இத்தேர்த்தலைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதற்காக புலம்பெயர் தேசமெங்கும் மக்கள் ஓரியக்கமாக ஒன்றுசேர்ந்து எமது கருத்துக்களை புலத்திலுள்ள எமதுறவுகளுக்கு அறிவுறுத்துவதன்மூலம் (அனுப்பிய பணத்தையா திருப்பிக்கேட்கப்போறம் இல்லைத்தானே, இதுவரை தீர்மானிக்காது இருப்பவர்கட்கு நாம் ஐடியா கொடுக்கப்போறம் அவ்வளவுதான்) தமிழர் கூட்டமைப்பினை இத்தேர்தலில் தோல்வியடையச் செய்வதன்மூலம் இந்திய நிகழ்ச்சிநிரல் எனும் தாளத்திற்கேற்ப நடனமாடும் இவர்களை தற்காலிகமாகவேனும் ஜனநாயக ரீதியில் தண்டனை வழங்குவோம். மாறாக எமது நிலைப்பாட்டுடன் ஓரளவேனும் ஒத்துவரக்கூடிய, தற்போது தேர்த்தல்களத்தில் நிற்கின்ற அரசியல் இயக்கத்தை அடையாளம் காண்போம்.

இவையெல்லாவற்றிற்கும் மக்கள் மனதில் தெளிவிருந்தால் விடை இலகுவாகக் கிடைத்துவிடும். சலுகைகளுக்காகக் காத்திருக்கும் மனநிலையிருந்தால் குழப்பங்கள்தான் மிஞ்சும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்ச்சி அரசியல விடப்போறினமா அல்லது உணர்ச்சியின் மீதான அரசியலை விடப்போறினமா.

முன்னத விட்டால் முன்னேறலாம். பின்னது கோல்மால் அரசியல்தானே விட்டாலென்ன விடாட்டால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சியின் மீதான அரசியலை கைவிட தயாராகும் கூட்டமைப்பு

அப்படியென்றால் அரசியலுக்கு முழுக்கு என்று அர்த்தப்படுமா?

தமிழ் மக்கள் எப்போதுமே தெளிவாகத்தான் உள்ளனர். மக்களின் விருப்பங்களை அறியாமல் மக்களின் பிரதிநிதிகளாக வரமுனைவோர்களுக்கு தேர்தல் சில பாடங்களைக் கற்பிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.