Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் காணமற் போகும் ஈழ அகதிகள், போர்க்குற்றச் சாட்சியங்களை மறைக்கும் முயற்சியா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் இடம் பெற்ற இறுதியுத்தத்தில் உயிர்தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளவர்கள் சிலர் காணமற் போயுள்ளதாகத் தெரியவருகிறது.

தமிழகத்தில் ஈழத்தமிழர்களை தங்கவைக்கபட்டுள்ள, அகதிகள் முகாமிலிருந்தே மர்மமான முறையில் இவர்கள் காணமல் போயுள்ளதாக மேலும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்து வைத்தியர் ஒருவர் அண்மையில் இவ்வாறு மர்மமான முறையில் காணமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல விவரங்கள் இவருக்கு தெரிந்திருந்தது எனவும், அதன் காரணமாகவே இவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுவருவதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ் அமைப்புக்கள் இந்தியாவுக்குச் சென்று, அங்கு தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழ் அகதிகளின் சாட்சிகளை பெற்றுவருவதாகவும் சந்தேகித்து, இந்தியப் புலனாய்வுத் துறையினரே இத்தகைய இரகசியக் கடத்தல்களை செய்து வருவதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றங்கள் சாட்சியங்களுடன் சர்வதேச நீதிமன்றுக்கு செல்லுமானால், அதில் இந்திய படைகளின் நடவடிக்கைகளும் அம்பலமாகும் என்ற அச்சத்திலுயே, அத்தகைய போர்க்குற்றச் சாட்சியங்களை வழங்கக் கூடிய மக்களை இரகசியமாக இந்திய உளவுத்துறை கடத்தி வருவதாகமேலும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல்கள் எதுவும் உறுதியாகத் தெரிவிக்கப்படாத பட்சத்திலும், இதற்கான சாத்தியங்கள்உள்ளதை மறுப்பதற்கில்லை என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/5651-2010-03-04-12-22-09

Muthamizh

Chennai

தமிழக அகதிமுகாம்களிலிருந்து போர்க்குற்ற சாட்சிகளை கடத்தும் இந்திய புலனாய்வுத்துறையினர்!!

.வன்னியில் இடம்பெற்ற மனிதப்பேரவலத்திலிருந்து உயிர்தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள போர்க்குற்ற சாட்சிகளை அந்நாட்டு புலனாய்வுத்துறையினர் இரகசியமாக கைது செய்துவருவதாக அங்கிருந்து கிடைத்துள்ள தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இத்னபிரகாரம், தமிழகத்தில் ஈழத்தமிழர்களை தங்கவைத்துள்ள அகதிகள் முகாமிலிருந்து அண்மைக்காலமாக பலர் மர்மமான முறையில் காணமல்போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் புலனாய்வுத்துறையினர் இந்த நடவடிக்கையை திட்டமிட்டு இரகசியமாக மேற்கொண்டுவருவதாகவும் இந்தியாவில் தஞ்சமடைந்த முன்னாள் போராளிகள் பலரும் இவ்வாறு கடத்தி செல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது. புலனாய்வுத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்கள் சிலர் பயன்படுத்தப்பட்டுவருவதால், இறுதிப்போர்க்காலத்தின் பின்னர் தமிழகத்துக்கு வந்த பல ஈழத்தமிழர்கள் இலகுவாக அடையாளம் காணப்படுகின்றனர் என்றும் அறியவருகிறது.

இறுதிப்போரின்போது வன்னியிலிருந்து தப்பி இந்தியா சென்று தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்து வைத்தியர் ஒருவர் அண்மையில் மர்மமான முறையில் இந்திய புலனாய்வுத்துறையினரால் கடத்தி செல்லப்பட்டுள்ளார் என்றும் வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல விவரங்கள் இந்த வைத்தியருக்கு தெரிந்திருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார்கள் என்றும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ் அமைப்புக்கள் இந்தியாவுக்கும் சென்று அங்கு தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழ் அகதிகளின் சாட்சிகளை பெற்றுவருகிறார்கள் என்றும் அந்த அமைப்புக்களிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக சாட்சியளித்தார்களா என்றும் -

அண்மையில் மன்னார் பகுதிக்கு சென்ற சிறிலங்கா இராணுவத்தின் விசேட குழு ஒன்று அப்பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களை மிரட்டிச்சென்றுள்ளதாக இன்னொரு தகவல் தெரிவித்துள்ளது.

வன்னியில் நடைபெற்ற இறுதி போரின்போது இந்திய படையினரின் நேரடி பிரசன்னம் அங்கு காணப்பட்டதால், சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றங்கள் சாட்சியங்களுடன் சர்வதேச நீதிமன்றுக்கு செல்லுமானால், அதில் இந்திய படைகளின் நடவடிக்கைகளும் அம்பலமாகும் என்ற அச்சத்திலேயே இந்தியாவின் புலனாய்வுத்துறையினர் சாட்சிகளை கடத்தும் நடவடிக்கைகயில் ஈடுபட்டுவருகிறார்கள் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி

ஈழநேசன்

தமிழக அகதிமுகாம்களிலிருந்து போர்க்குற்ற சாட்சிகளை கடத்தும் இந்திய புலனாய்வுத்துறையினர்!!

வன்னியில் நடைபெற்ற இறுதி போரின்போது இந்திய படையினரின் நேரடி பிரசன்னம் அங்கு காணப்பட்டதால், சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றங்கள் சாட்சியங்களுடன் சர்வதேச நீதிமன்றுக்கு செல்லுமானால், அதில் இந்திய படைகளின் நடவடிக்கைகளும் அம்பலமாகும் என்ற அச்சத்திலேயே இந்தியாவின் புலனாய்வுத்துறையினர் சாட்சிகளை கடத்தும் நடவடிக்கைகயில் ஈடுபட்டுவருகிறார்கள் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி

ஈழநேசன்

:)அப்போ இறுதிக்கட்ட போரிலிருந்த, அகதி முகாமிலிருந்து வெளியேறிய மக்களுக்கு மாலைக்கண் நோயால் இந்த விடயம் தெரியாது போய்விட்டதோ??? :D

2008/09 களில் ஈழத்தில், 25,000 க்கு மேற்பட்ட வட இந்திய பயங்கரவாதிகள் முன்னின்று 30,000 ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்களை படுகொலை செய்தனர் என்பதற்கு சாட்சிகளும், ஆதாரங்களும் நிறையவே உண்டு. கூட இருந்த சிங்கள இராணுவமே பல சாட்சிகளை வெளிவிட்டுள்ளது. பெரும்பாலான ஆதாரங்கள் மேற்குலக நாடுகளில் பதியப்பட்டுவிட்டதாகவும், பல இடங்களில் பாதுகாகப்பட்டுவிட்டதாகவும் விடயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

தமிழ் நாட்டில் உள்ளவர்களை கடத்துவதால் இந்திய பயங்கரவாதிகள் எதையும் மறைத்துவிடமுடியாது.

:)அப்போ இறுதிக்கட்ட போரிலிருந்த, அகதி முகாமிலிருந்து வெளியேறிய மக்களுக்கு மாலைக்கண் நோயால் இந்த விடயம் தெரியாது போய்விட்டதோ??? :D

எல்லோருக்கும் எல்லாம் தெரியும்

நேரம் வரும்பொழுது எல்லாம் வெளியே வரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.