Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு பொறுப்பேற்க முடியாது: மத்திய அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு பொறுப்பேற்க முடியாது: மத்திய அரசு

ந்திய எல்லைக்கு அப்பால் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டால் அதற்கு இந்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார்.

இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு அத்துமீறி வந்து சிறிலங்க கடற்படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நியாயம் வழங்கக் கோரியும், அதற்குக் காரணமான சிறிலங்க கடற்படையினரை இந்தியாவிற்கு கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரி கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார் தமிழக மனித உரிமைக் கழக்கதின் வழக்கறிஞர் பா. புகழேந்தி.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் எலிப்பு தர்ம ராவ், கே.கே. சசிதரன் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, கொல்லப்பட்ட மீனவர்களின் பட்டியலையும், வழக்கு விவரங்களையும் அளிக்குமாறு கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டது.

அதன்படி, இன்று அந்த விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் எம். இரவீந்திரன், அந்த விவரங்களைப் பார்த்தப் பிறகும் பல குறைகளைக் கூறினார். அதனை‌ப் புகழேந்தி சார்பாக நேர்நின்ற மூத்த வழக்கறிஞர் மு. இராதாகிருஷ்ணன் விளக்கினார்.

சிறிலங்க கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர்களின் சார்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்திய‌த் தண்டனைச் சட்டப் பிரிவு 302, 307 மற்றும் இந்திய ஆயுதச் சட்டப் பிரிவு 25 (1) (ஏ) ஆகியற்றின் கீழ் வழக்கு‌ப் பதிவு செய்யபட்டுள்ளதையும் எடுத்துரைத்தார்.

அதன் பிறகு தனது வாதத்தை துவக்கிய வழக்கறிஞர் இரவீந்திரன், சர்வதேச கடறபரப்பில் கொல்லப்பட்ட மீனவர்களுக்காக இந்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்று கூறிவிட்டு, “அதற்காக இலங்கை மீது போர் தொடுக்கவா முடியும்” என்று ஏளனமாகக் கேட்டார். இது நீதிமன்றத்தில் இருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த வழக்கில் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, 1974, 76ஆம் ஆண்டுகளில் இந்தியா, சிறிலங்கா இடையே போடப்பட்ட கடல் எல்லைப் பிரிவு ஒப்பந்தத்தின் படி, கச்சத் தீவு கடற்பரப்பில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு எந்த உரிமையு‌ம் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய அமைச்சர் இ. அகமது அளித்த பதிலில், கச்சத் தீவு கடற்பரப்பில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளதாக எந்த விவரமும் இல்லை என்று கூறியுள்ளதும் மத்திய அரசு மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மீதான விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

யாஹூ தமிழ்.

சர்வதேச கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு பொறுப்பேற்க முடியாது: மத்திய அரசு

ந்திய எல்லைக்கு அப்பால் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டால் அதற்கு இந்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார்.

இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு அத்துமீறி வந்து சிறிலங்க கடற்படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நியாயம் வழங்கக் கோரியும், அதற்குக் காரணமான சிறிலங்க கடற்படையினரை இந்தியாவிற்கு கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரி கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார் தமிழக மனித உரிமைக் கழக்கதின் வழக்கறிஞர் பா. புகழேந்தி.

அதன் பிறகு தனது வாதத்தை துவக்கிய வழக்கறிஞர் இரவீந்திரன், சர்வதேச கடறபரப்பில் கொல்லப்பட்ட மீனவர்களுக்காக இந்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்று கூறிவிட்டு, “அதற்காக இலங்கை மீது போர் தொடுக்கவா முடியும்” என்று ஏளனமாகக் கேட்டார். இது நீதிமன்றத்தில் இருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த வழக்கில் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, 1974, 76ஆம் ஆண்டுகளில் இந்தியா, சிறிலங்கா இடையே போடப்பட்ட கடல் எல்லைப் பிரிவு ஒப்பந்தத்தின் படி, கச்சத் தீவு கடற்பரப்பில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு எந்த உரிமையு‌ம் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி மீனவர் எல்லை தாண்டி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டால் எகிறிக் குதிப்பவர்கள், தமிழ் நாடு மீனவர்கள் இந்திய எல்லைக்குள் கொலை செய்யப்பட்டாலும் பொறுப்பெடுக்க மாட்டார்களாம்.

தமிழ் நாட்டவர்களுக்கு ஒரே வழிதான் உண்டு - தமிழ் நாடும் இந்தியாவின் எல்லைக்குள் இல்லை என்று அறிவிப்பது தான் அது.

சிங்கள கடற்படைக்கு தவல் கொடுங்கள் எனி வாறவனையெல்லாம் சுட்டுத்தள்ளும்படி.தமிழக அரசு எப்பவும்போல் பேன்பார்க்கப் போய்விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.