Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த அரசு குறித்த இந்தியாவின் அச்சமே நிருபமா ராவின் விஜயத்திற்குக் காரணம் என்கிறது சிங்களப் பத்திரிகை

Featured Replies

நாடு கடந்த அரசிற்கு சர்வதேச ரீதியில் கிடைக்கக் கூடிய அங்கீகாரத்தைத் தடுப்பதற்கு உடனடியாக இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதே சிறந்த வழி எனக் கருதும் இந்தியா அதற்காகவே நிருபமா ராவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக லங்காதீப சிங்கள நாளிதழ் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து செயற்படும் வி.ருத்ரகுமாரனின் தலைமையில் எடுக்கப்பட்டு வரும் நாடு கடந்த அரசு குறித்து உன்னிப்பாக அவதானித்து வந்த இந்தியா இந்தக் கட்டமைப்பை தகர்ப்பதற்கு இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமே உகந்த வழியாகக் கருதுவதாகவும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

SOURCE: http://www.eelamweb.com/

மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளே நாடு கடந்த அரசிற்கான யாப்பினை எழுதுவார்கள் என்றும் அவர்களுக்கே இதனை எழுதுவதற்கான மக்கள் ஆணை இருக்குமென்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசின் சர்வதேச இணைப்பாளர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே எழுதப்பட்ட யாப்பை மேலிருந்து திணிப்பதை விட இதுவே பல நாடுகளும் ஏற்றுக் கொண்ட வழமை எனவும் யாப்பை எழுதுவதற்கு சட்ட வல்லுனர்கள் தமது சட்ட நிபுணத்துவத்தை வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசின் கனடாச் செயற்குழுவினர் தமிழ் ஸ்ரார் வானொலியூடாக நடத்திய நிகழ்ச்சிக்கு இன்று இரவு (05.03.2010) வழங்கிய பேட்டியிலேயே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசின் முதலாவது செயலமர்வினை எதிர்வரும் மே மாதம் 17 மற்றும் 19ம் திகதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ் மக்களின் உரிமைப் போரினை நசுக்கி விட்டதாக சென்ற ஆண்டு மே மாதம் 17 மற்றும் 19ம் திகதிகளில் கொக்கரித்த சிங்களப் பேரினவாதத்திற்கு தமிழரின் உரிமைப் போர் முடிவடையவில்லை என்பதை உணர்த்தும் குறியீடாகவே இந்தத் திகதி தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உருத்திரகுமாரன் தெரிவித்தார்.

இதுவரை 5 நாடுகளுக்கான செயற்குழுக்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி நாடுகளுக்கான செயற்குழுக்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த நாடு கடந்த அரசு வெளிநாடுகளில் செயற்படுவதற்கு சட்டரீதியான எந்தச் சிக்கலும் இருக்காது எனத் தெரிவித்த உருத்திரகுமாரன் ஒன்று கூடும் உரிமை ஐநாவின் மனித உரிமை சாசனத்திலேயே உள்ளடக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் அரசியல் ரீதியான அங்கீகாரம் என்பது காலவோட்டத்தில் நாடு கடந்த அரசின் செயற்பாடுகள் மூலமும் தென்னாசியாவின் பூகோள ராஜதந்திர அரசியல் போக்கிலும் தங்கியிருப்பதாகவும் உருத்திரகுமாரன் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசு குறித்து சர்வதேச ராஜதந்திரிகளும் தமது கருத்துக்களைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளதுடன் இது குறித்து கூடிய அக்கறை எடுப்பதையும் நல்ல அறிகுறியாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட உருத்திரகுமாரன் சிங்கள தேசமும் இந்த நாடு கடந்த அரசு குறித்து அச்சமடைந்துள்ளதை அவர்களிடம் இருந்து வரும் அறிக்கைகள் தெளிவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசின் வெற்றி என்பது தமிழர்களின் ஒத்துழைப்பான முயற்சியில் தங்கிருக்கிறது என்பதை வலியுறுத்திய அவர் சிறிய பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் தெளிவு படுத்தினார். அத்துடன் நாடு கடந்த அரசானது ஒவ்வொரு நாடுகளிலும் இயங்கி வரும் அந்தந்த நாடுகளின் தாயகம் சார்ந்த அமைப்புக்களைப் பலவீனப்படுத்தாது எனவும் அனைவரும் ஓரணியில் பயணிக்க வேண்டும் என்றும் உருத்திரகுமாரன் தெரிவித்தார்

கடந்த 2002 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் ஏற்றுக் கொண்ட ஒஸ்லோப் பிரகடனத்தை ஒட்டியே தமது கட்சி அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் இதனடிப்படையிலேயே பேச்சுக்களை நடத்தும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இ. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்தும் திருகோணமலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும் போதே சம்பந்தன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்தை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் உறுப்பினர்களுடன் சேர்ந்து கலந்தாலோசித்து இறுதி முடிவை எடுக்க உள்ளதாகத் தெரிவித்த சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் பூர்வீக ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்துள்ள தாயகத்தில் ஒருமித்த நாடடிற்குள் சமஸ்டி என்ற அடிப்படையில் இந்தத் தீர்வுத் திட்டம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவால் இலங்கையின் இனப்பிரச்சனை விடயத்தில் ஒரு சிறிதளவுதானும் முன்னேற்றத்தைக் கொண்டுவரமுடியாது. கூரையேறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போகமுடியுமா என்பார்கள். தமிழர்கள் தங்களது தேசிய இன அந்தஸ்தைத் தற்போது இழந்து சிறுபான்மையினராக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா என்ன எந்தக் கொம்பனாலும் இலங்கையை வசப்படுத்த முடியாது. மீண்டும் மீண்டும் தமிழருக்குத் தீங்கு செய்து தமிழ்த் தேசியத்தைத் தலையெடுக்கவிடாமற்செய்து சிறுபான்மையினராக வைத்திருந்து எமது பாரம்பரிய தாயகத்தையும் இழக்கப் பண்ணும் துரோகத்தனத்தைத் pர இந்தியா இவ்விடயத்தில் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.