Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கான மோசடி ஆரம்பம்

Featured Replies

மூன்றில் இரண்டு பெரும்பான்மை குறித்து கூறி வருகின்ற அர சாங்கம் தற்போதே அதற்கான மோசடி முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதன் முதற் கட்டமாகவே இம் முறை தேர்தல் வாக்குச் சீட்டுக்கான கடதாசிகளை இந்தியாவிலிருந்து தருவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஐக்கிய தேசிய ன் னணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் குற்றம் சாட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் எமது உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்ததே அரசாங்கம்தான். இப்படி இருக்கையில் வெறுமனே எமது விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று கூறுவதெல்லாம் பம்மாத்து வேலையாகும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பண்டாரநாயக்க பரம்பரையைப் பாதுகாப்பதற்கே பஷில் ராஜபக்ஷ கம்பஹா மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட் டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.

உண்மையாகவே அதனைச் செய்வதற்கு அரசு துணிந்திருக்குமானால் பஷில் ராஜபக் ஷவை அல்ல சந்திரிகாவின் புதல்வரான விமுக்தி குமாரணதுங்கவையே வேட்பாளர் பட்டியலில் இணைத்திருக்க வேண்டும். எனவே இந்த திட்டம் சந்தேகத்துக்குரியதாகும்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து தற்போது பொதுத் தேர்தலும் வந்துவிட்டது. ஜனாதிபதித் தேர்தலின் போது இடம் பெற்ற அநீதிகள் தொடர்பில் முறையான விசாரணை நடத்துவதற்கு பொலிஸாரினால் இன்னும் கூட முடியாதிருக்கின்றமை பாரதூரமானதாகும். பழிவாங்கல், வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் உள்ளிட்ட முறைப்பாடுகள் இதுவரையில் விசா ரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை.

இதனால் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர். இது எமக்கு கவலையளிக்கின்றது. அது மட்டுமல்லாது பாரிய பிரச்சி னையாகவும் இது தொடர்கின்றது. எனவே இவ்வாறான சட்ட விரோத விடயங்கள் தொடர்பில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான பிரதமர் உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மறுபுறத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னல்லிகொட காணாமல் போய் ஒன்றரை மாதங்களும் கடந்து விட்டன. இதுவ ரையில் அவர் தொடர்பில் தகவல் இல்லை. இதேவேளை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அவரது பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது. அப்படியானால் அவர் கடத்தப்பட்டாரா அல்லது எங்கே மறைத்து வைக் கப்பட்டுள்ளார். இல்லாவிட்டால் அவர் கொல்லப்பட்டு விட்டாரா என்பது பாரிய சந்தேகமாகவே இருக்கின்றது.

இவ்வாறான நிலைமைகளால் தான் எமது நாட்டுக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையும் இல்லாது போயுள்ளது. மேலும் எமது நாட்டில் மனிதாபிமான பிரச்சினைகள், அடிப்படை உரிமைப் பிரச்சினைகள், ஜனநாயக விரோ தங்கள் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் சபை இங்கு ஒரு நிபுணர் குழுவை ஸ்தாபிப்ப தற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை நாமும் வெறுக்கிறோம். இருப்பினும் இதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்திருப்பது அரசாங்கம்தான்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வாக்குச் சீட்டுக்களை அச்சடிப்பதற் கென அரசாங்க கடதாசிகளை இந்தியாவி லிருந்து தருவிப்பதற்கு முயற்சிகளை மேற் கொண்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கடதாசியை இறக் குமதி செய்வதற்கான தேவை என்ன இருக் கின்றது என்பது எமது கேள்வியாகும். மேலும் இதற்கான கேள்வி மனுக்கோரல் மேற்கொள்ளப்பட்டதா? அல்லது இந்த கடதாசிகள் எந்த நிறுவனத்திடம் இருந்து வருகின்றது என்பது தொடர்பிலும் எமக்குத் தெரியாது.

சுயாதீனமானதும் மிகவும் நம்பிக்கைக்குரியதுமான நிறுவனத்திடமிருந்தே இந்த மூலப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்பது எமது விருப்பமாகும். வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் குற்றம் சாட்டினார்.

http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=261:2010-03-10-03-32-10&catid=34:2010-02-09-12-34-07&Itemid=53

ஆகா... கா... மயயய

அப்ப சீனாவிடமிருந்து கைக்கு அடிக்கிற மையை இறக்குமதி செய்வாங்கள் ஆக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.