Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பான்கீமூனின் சீற்றத்தின் பின்னணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பான்கீமூனின் சீற்றத்தின் பின்னணி

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தாம் கடந்த வருடம் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரி விக்கப்பட்டிருந்த விடயங்களில் முன்னேற்றம் ஏற்படா தமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலை வெளியிட்டிருக்கின்றார்.

அவரது இந்த அறிவிப்பு கொழும்புக்கும் ஐ.நா.செயலா ளர் நாயகத்துக்கும் இடையில் முறுகலும், உரசலும் தீவிர மடையத் தொடங்கியுள்ளன என்பதையே கோடிகாட்டு கின்றது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத் தில் இடம்பெற்றவை எனக் கருதப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச யுத்தக் குற்றங்கள் போன்றவை குறித்து விசாரணை நடத்தப்படுவதற்கும்

அவற்றுக்குப் பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கும்

தவறிழைத்தோரை உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிப்பதற்கும்

உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது தான் இந்த முறுகல் நிலைக்கு உரசல் போக்குக்கு பிர தான மூலகாரணம். அது வெளிப்படையாகப் பேசப்படா விட்டாலும் இந்தப் பிணக்கின் பின்புலம் அதுதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த அம்சம்தான்.

இத்தகைய யுத்த காலச் சம்பவங்கள் குறித்து உரிய நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இப்போது ஆலாய்ப் பறந்து, மெழுகாய் உருகும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு, இந்தத் தீவிர நிலைப்பாடு இப்படித் திடீரென வந்திருப்பது அப்படி ஒன்றும் ஆச்சரியப் படத்தக்க விடயமன்று.

"சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பார்கள். அது போல இலங்கை விவகாரத்தில் ஐ.நா. செயலாளர் நாயகத் தின் இத்தகைய திடீர் ஆவேசப் போக்குக்கும் காரணம் இல் லாமல் இல்லை.

இலங்கையில் யுத்தம் மிகத் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் கடந்த ஆண்டின் முற்பகுதியில் இப்படி யெல்லாம் அராஜகம் அரங்கேறுகின்றது, அட்டூழியம் நடக் கின்றது, படுகொலை அத்துமீறல் கணக்கு வழக்கின்றி இடம்பெறுகின்றது என்றெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டே வந்தது. இலங்கையில் இருந்த ஐ.நா.அலுவலகமும், அதன் பேச்சாளரும் கூட இவற்றை உரிய முறையில் ஐ.நா. தலை மைச் செயலகத்துக்குத் தெரியப்படுத்தத் தவறவில்லை என்பது மறைக்கப்பட்ட விவகாரம் அல்ல.

அந்தச் சமயத்திலும் அதன் தொடர்ச்சியாக வந்த காலகட்டத்திலும் விரைந்து காத்திரமான பதில் நடவடிக் கைகளை ஐ.நா.செயலாளர் நாயகம் எடுப்பார் என இலங் கைத் தமிழர்களும், புலம் பெயர் தமிழர்களும், சர்வதேச உலகத்தவர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அந்த எதிர்பார்ப்பை எல்லாம் பொய்யாக்கி, பொறுப்பின்றி நடந்துகொண்டார் செயலாளர் நாயகம்.

உலக நாடுகளின் பொதுமன்றமான ஐ.நாவிடமிருந்து நீதியும், நியாயமும் கிடைக்கும் என்று எதிர்பார்த்த தமிழர் கள் கடைசியில் ஏமாந்துதான் போனார்கள்.

இலங்கை அரசுத் தரப்பின் தீவிர இராணுவ வெறிப் போக் குக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அந்த ஆட்சிப் பீடத் துடன் தோளில் கைபோட்டுக் குசலம் விசாரிக்கும் வகை யில் ஐ.நா. செயலாளர் அப்போது நடந்துகொண்டாரே தவிர, இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை உலக மன்றத் தின் சார்பில் நீதியை, மனுக்குலத்தின் தர்மத்தை நிலை நிறுத்துபவராக அவர் செயற்படவில்லை.

சரி. இப்போதாவது பழையவற்றைக் கிளறி எடுத்துக் கொண்டு நியாயம் கற்பிக்க முயல்பவராக அவர் உருமாற் றம் கொண்டிருக்கின்றார் என்பது வரவேற்கத்தக்கதே. ஆனாலும் அதற்கும் கூட அவரின் உள்நோக்கமும் சுயநல மும்தான் காரணம் என்பது விசனத்துக்குரிய உண்மையாகும்.

2007 ஜனவரியில் ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்கு வந்த பான் கீ மூனின் இந்தப் பதவிக்காலம் அடுத்த ஆண்டு டிசம்பரில் முடிவடைகிறது. அடுத்த பதவிக்கு ஆள் தேடும் படலம் இந்த ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பமா கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வழமையாக ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு வருப வர் ஒவ்வொன்றும் ஐந்து ஆண்டுகளைக் கொண்ட இரண்டு பதவிக்காலத்துக்கு அதாவது பத்து வருடங்களுக்கு பதவியில் நீடிப்பது வழமை.

பான் கீ மூனுக்கு முன்னர் பதவியில் இருந்த கோபி அனான் (கானா), ஜாவீர் பேர்ஸி டி கியூலர் (பெரு), கூர்ட் வால்ட்ஹெய்ம் (ஆஸ்திரியா), ஊதாண்ட் (பர்மா), டாக் ஹமர்ஸ்க் யோல்ட் (சுவீடன்) போன்றோர் இரண்டு பதவிக் காலங்களை அலங்கரித்தார்கள்.

ஆனால் பூட்ரஸ் பூட்ரஸ் காலி (எகிப்து), டிரிஜ்வி லீ (நோர்வே) ஆகியோர் ஒரே ஒரு பதவிக் காலத்துக்கு மட் டும் பதவியில் இருந்தனர்.

பான் கீ மூனுக்கும் அடுத்த பதவிக் காலத்தையும் கைப்பற்றும் ஆசை வந்துவிட்டது. அதனால்தான் இலங்கை விடயத்தில் அவர் இத்தனை சீற்றம் காட்டுகின்றார் எனத் தோன்றுகின்றது.

இந்தப் பதவியில் அடுத்த தடவையும் அவர் தொடர்வ தானால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றி யம் போன்ற மேற்குலகின் ஆதரவுப் பின்புலம் அவருக்கு அவசியம். அது இல்லாமல், பதவியில் தொடரும் அவரது கனவு பலிக்காது.

சர்வதேச விவகாரங்கள் தொடர்பான சர்ச்சைகளில் மேற்குலகு எடுக்கும் நிலைப்பாட்டை வலிமையாக ஆத ரிப்பதன் மூலம் மேற்குலகின் ஆதரவைத் தாம் தக்கவைத்து, அடுத்த தடவைக்கும் பதவிக்கு வரலாம் எனக் கணக்கிடு கின்றார் அவர்.

இலங்கை விடயத்தில் இலங்கை அரசுக்கு எதிராக மேற் குலகு சீறிக்கொண்டிருக்கின்றது. கிழக்கு நாடுகளின் செல் வாக்கைப் பயன்படுத்தி அதனை முறியடிப்பதில் மஹிந்த ரின் ஆட்சி தீவிரமாக இருப்பதும் வெளிப்படை.

இந்தப் பின்னணியிலேயே மேற்குலகு இப்போது சீற்ற முடன் கையாளும் இலங்கை விகாரத்தைத் தமது கையில் எடுத்துக்கொண்டு துள்ளிக் குதிக்கிறார் பான் கீ மூன். அவரின் குடுமி சும்மா ஆடவில்லை.......!

நன்றி - உதயன்இணையம்

சீறுகிறது முன்னொருகாலத்தில் அணிசேரா நாடுகள் என்று கூறப்பட்ட அமைப்பு, சப்பை மூக்கின் அறிக்கைக்கு எதிராக, ரஸ்யா, சீனா, இந்தியா போன்ற கூட்டுகளின் சார்பாக அறிக்கை விட்டுள்ளது.

அதாவது இந்தியனும் சிங்களவனும் தெளிவாக வே உள்ளான்.

http://www.dailymirror.lk/index.php/news/2293-nam-flays-bans-move-on-lanka.html

மொத்தத்தில் பான் கீ மூன் தலைமையிலான ஐ. நா. சபை இனப்படுகொலைக்கும், ஜனநாயக வேடத்தில் உள்ள கொடிய பயங்கரவாதிகளுக்கும், கொள்ளைக் கூட்டத்திற்கும் ஆதரவாக செயற்பட்டுக் கொண்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.