Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்தலைவரின் தாயாரை அழைத்து சென்றது பற்றி சிவாஜிலிங்கத்திடம் விசாரணை...

Featured Replies

தேசியத்தலைவர் திரு.வே. பிரபாகரனின் தாயாரான பார்வதிப் அம்மாவை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் தாம் விசாரிக்கப்படுவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் மேலும் தெரிவித்தாவது:.

நாட்டின் எந்த சட்டதிட்டங்களையும் மீறாத வகையிலேயே நான் பிரபாகரனின் தாயாரை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்றேன். இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களமே அவருக்கு அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டையும் எவ்வித பிரச்சினையுமின்றி வழங்கியது. ஆனால், இன்று பிரபாகனின் தயாரை ஏன் அழைத்துச் சென்றீர்களென்றும் எம்மிடம் ஏன் அனுமதி பெறப்படவில்லையென்றும் விசாரிக்கின்றனர். .

பிரபாகரனின் தாயாரை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுவிட்டு நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்தும் இது தொடர்பில் விசாரிக்கப்பட்டேன். இதன் பின்னர் தற்போது தொலைபேசி ஊடாகவும் தொடர்ந்தும் என்னை விசாரித்து வருகின்றனர். இது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது என்றார். பிரபாகரனின் தாயாரை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் அவா மேலும் கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை தடுப்புக் காவலிலிருந்தபோது மரணமடைந்தார். அவரது பூதவுடலையும் அவரது மனைவியையும் எவ்வித நிபந்தனைகளுமின்றியே அரசாங்கம் என்னிடம் ஒப்படைத்தது. பிரபாகரனின் தந்தையின் மரணத்தின் பின்னர் அவரது தாயாரைத் தொடர்ந்து இலங்கையிலேயே பராமரிப்பதற்கு அவருக்கு நெருக்கமான உறவினர்கள் எவருமில்லை. அத்துடன் அவர் கடந்த பத்து வருட காலமாக பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்..

இதன் காரணமாக அவரை கனடாவிலுள்ள அவரது மகளிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்தேன். இதற்காக பிரபாகரனின் தயாருக்கு அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டும் பெற்றுக் கொள்ளப்பட்டது.:.

இந்த மாதம் 2ஆம் திகதி பிரபாகரனின் தாயாரை வடக்கிலிருந்து கொழும்புக்கு அழைத்து வந்தேன். அவரை அழைத்து வருவதில் கூட எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. 3 ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்த அவரை 5 ஆம் திகதி இரவு சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு நான் இலங்கை திரும்பினேன். :.

அதன் பின்னர் அவர் சிங்கப்பூரிலிருந்து மலேஷியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரியான விநோதினி ராஜேந்திரன் மலேஷியாவுக்கு வந்து தனது தாயாரை பொறுப்பேற்றுள்ளார். பிரபாகரனின் தந்தையின் பூர்வீகம் மலேஷியா என்பதால் அவரது உறவினர்களும் அங்கு இருக்கலாம். பிரபாகரனின் ஏனைய சகோதர, சகோதரிகளும் தற்போது மலேஷியா வந்துள்ளனர். ஆனால், அவரைக் கனடாவுக்கு அழைத்துச் செல்வதில் தற்போது சற்றுச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் கனடாவில் குடியேறுவதற்கான அனுமதியை அந்த நாட்டு அரசாங்கம் சில வேளைகளில் நிராகரிக்கவும் முடியும். இவ்வாறானதொரு நிலையேற்பட்டால் அவரை இந்தியாவுக்கு அனுப்பி இந்தியாவிலுள்ள அவரது இன்னொரு மகளான ஜெகதீஸ்வரி மதியாபரணத்துடன் வாழ வைக்க முடியும். அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்பு வதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டால் மீண்டும் இலங்கைக்கே அழைத்து வரவேண்டிய நிலை யேற்படலாம் என்றார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88

ஒரு இனத்துக்கான மனிதாபிமானப் பணிகள் உடன் விசாரிக்கப்படுகின்றன! தடுக்கப்படுகின்றன!!

அந்த இனத்துக்கெதிரான மனிதாபிமானமற்ற இனப்படுகொலைகள், கடத்தல்கள், கப்பம் பெறுதல், அடக்குமுறைகள், ..... என்றும் விசாரிக்கப்படுவதில்லை! தடுக்கப்படுவதும் இல்லை!!

இது தான் சிங்கள பௌத்த தர்மம்! ஜனநாயகம்!!

சிங்களவர்களின் ஆதரவாளர்களை மட்டும் தான் சிங்கள படையினர் விசாரிப்பார்களோ...???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.