Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடுமாறும் தேசிய வாதமும் ,பிரதேசவாதமும்--கபில்

Featured Replies

அடுத்த மாதம் நடைபெறப் போகின்ற பொதுத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையப் போகிறது. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் ஆளும்கட்சி மிகவும் பலமானதொரு நிலையில் இருக்கிறது. எதிர்க்கட்சிகளோ பிரிந்து நின்று கோஷம் போடுவதைத் தவிர பெரிதாக எதையும் சாதிக்கும் நிலையில் இல்லை.

வழக்கம் போலவே தேர்தல் முடிவு ஆளும்கட்சிக்கு சார்பாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது.

இந்தக் கட்டத்தில் ஆளும்கட்சி ன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துக்கான போட்டியில் குதித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை.

அதேவேளை, தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்குக் கிடைக்கப் போகின்றது என்ற கேள்வியும் தேர் தலுக்குப் பிறகு ஏற்படப் போகின்ற மாற்றங்கள் எப்படிப்பட்டதாக அமையும் என்ற கேள்வியும் இப் போதே எழத் தொடங்கிவிட்டன.

இந்தத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பிரிந்து நின்று மோதுவதும் அதிகளவிலான சுயேச்சைக் குழுக்கள் வாக்குகளைப் பிரிக்கும் நோக்கில் களமிறங்கியிருப்பதும் முக்கியமான விடயங்கள்.

இதற்கென பணம் கைமாற்றப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதில் எவ்வளவுக்கு உண்மை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் சுயேச்சைகளாகக் களமிறங்கியுள்ள பல பிரபலங்களுக்கும் தமது “உயரம்' என்ன என்பது

தெரியாதிருப்பது தான் வேடிக்கை. நான்கு பேருக்குத் தெரியும் என்பதற்காக ஒரு நாடாளுமன்ற ஆசனத்தைப் பெற்றுவிடும் அளவுக்குச் செல்வாக்கு இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது தான் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

தம்மை சமூகத்தின் வழிகாட்டிகளாக நினைத்துக் கொள்ளும் இவர்கள் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தாம் தமிழ்ச் சமூகத்துக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறோம் என்ற அரசியல் தெளிவு கூட இல்லாதிருக்கின்றனர்.

சுயேச்சைகளாகப் போட்டியிட்டு ஆசனத்தைக் கைப்பற்றும் அளவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவர்கள் யாரும் இல்லை. அதைத் தெந்திருந்தும் போட்டியில் குதித்துள்ளவர்கள் மீது பணத்துக்காக விலை போனவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுவது இயல்பானதே.

அதேவேளை, இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் காணப்படும் பிளவுகள் ஒரு பிறழ்வு நிலையை நோக்கித் தள்ளிச் சென்றிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

தமிழ்த் தேசியம் பேசிய கட்சிகளே ஒன்றுபட்டு நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் மூன்று அணி களாகப் பிளவுபட்டுப் போயுள்ளது. சிவாஜிலிங்கம், சிறிகாந்தா போன்றோர் தனி அணியாக உள்ளனர்.

அவர்கள் தமிழ்த் தேசியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, கூட்டணி சேர்ந்திருப்பது இடதுசாரி அணி ஒன்றுடன். இன்னொரு பக்கம் கஜேந்திரகுமார் தலைமையில் தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் ஒரு அணி போட்டியிடுகிறது. மற்றொரு அணி தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக நிற்கிறது.

தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் தமிழ்க் காங்கிரஸ் எதற்காக திருமலையிலும், யாழ்ப்பாணத்திலும் மட்டும் நிற்கிறது? இதுவா தமிழ்த் தேசியம் என்று கேள்வியை எழுப்புகிறது கூட்டமைப்பு.

அதேவேளை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பெரும்பான்மைக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நியாயப்படுத்திவிடும் என்று கூறியிருப்பது தான் வேடிக்கை.

ஏனென்றால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழருக்கு ஏற்பட்ட பேரழிவுகளுக்குக் காரணமாக இருந்த சரத் பொன்சேகாவை ஆதத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படியொரு நியாயம் கற்பித்திருப்பது வேடிக்கை. தமிழ்த் தேசியம் பேசிய சக்திகள் இப்போது மெல்ல மெல்ல பிரதேசவாதத்தைக் கிளறிவிட்டு அதில் குளிர்காயவும்ற்படு கின்றன. இதை தேர்தல் பிரசாரங்களில் வெளிப்படையாகவே அவதானிக்க முடிகிறது.

இதற்கிடையே பிரதேசவாதம் பேசிய சக்திகளின் நிலையும் மாறத் தொடங்கிவிட்டது.

கிழக்கில் முதலமைச்சர் சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இந்தத் தேர்தலில் வடக்கிலும் போட்டியிடுகிறது. வடக்கில் ஆசனங்களை வெல்ல முடியுமா என்ற நம்பிக்கை அதற்கு இருக்கிறதா அல்லது வாக்குகளைப் பிரிக்க நினைக்கிறதா என்பதெல்லாம் ஒருபுறத்தில் இருக்கட்டும்.ஆனால் இதனூடாக சந்திரகாந்தனின் கட்சி சொல்ல வருகின்ற செய்தியே முக்கியமானது.

தமது கட்சி பிராந்தியக் கட்சி அல்ல என்பதை அந்தக் கட்சி வெளிப்படுத்த விரும்புகிறது.

முன்னதாக கிழக்கு மக்களின் தனித்துவக் கட்சி என்றும் கிழக்கு மக்களின் நலனுக்காக உருவாக் கப்பட்டதே என்றும் கூறப்பட்டு வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தற்போது வடக்கிலும் கால் வைத்திருப்பது பிரதேசவாதம் தோல்வி காண்பதை வெளிப்படுத்துகிறது.

வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை சீரழிப்பதற்காக உருவாக்கி வளர்த்து விடப்பட்டதே பிரதேசவாதம். அதற்கு பிரதான காரணமாக இருந்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்.

ஆனால் அதே கட்சி இப்போது வடக்கிலும் தனது செல்வாக்கைப் பரிசோதிக்க முனைகிறது என்றால் வடக்கு,கிழக்கு என்று தமிழ்த் தேசிய வாதத்தை நோக்கி நகர விரும்புகிறதா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.

இப்படியொரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்க பிரதேசவாதத்துக்குள்ளேயும், தமிழ்த் தேசியவாதத் துக்குள்ளேயும் நின்று அரசியல் நடத்திக் கொண்டிருந்த இன்னொரு தரப்பு இலங்கை என்று பெருந் தேசியவாதம் பேசத் தொடங்கியுள்ளது.

முன்னர் தமிழ்த் தேசியத்தையும் பின்னர் கிழக்குப் பிரதேசவாதத்தையும் வலியுறுத்திய கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பெருந்தேசியவாதத்தை வலியுறுத்த ஆரம்பித்துள்ளார்.

தமிழ்த் தேசியவாதம் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவநாதன் கிஷோர், தங்கேஸ்வ கதிராமன், சதாசிவம் கனகரத்தினம் ஆகியோரும் அதே பெருந்தேசிய வாதத்துக்குள் மூழ்கிப் போயுள்ளனர்.

இன்னொரு புறத்தில் வடக்கு, கிழக்கு என்ற கோட்பாட்டுக்குள் இயங்கிக் கொண்டிருந்த ஈ.பி.டி.பி.

இப்போது ஆளும்கட்சியின் கூட்டணியாக மாறியிருக்கிறது. வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடும் நிலைக்கும் அது வந்து விட்டது.

மொத்தத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியவாதம் இப்போது பிரதேசவாதம் பேச முற்படுகிறது.

பிரதேசவாதம் பேசியோர் தமிழ்த் தேசியவாதம் நோக்கிப் பயணிக்க ற்படுகின்றனர்.

பிரதேசவாத, தமிழ்த் தேசியவாத அரசியல் நடத்தியோர் இலங்கை என்ற பெருந்தேசியவாதத்துக்கு அடிமையாகியுள்ளனர்.

இப்படியான பல பிறழ்வுகள் இப்போது தமிழ்மக்களின் அரசி யலில் நிகழ்ந்துள்ளன.

இந்தப் பிறழ்வுகள் தமிழ் மக்களின் நலனுக்காக நடந்தவையல்ல. தமிழ் அரசியல் தலைமைகளின் நலனுக்காக இடம்பெற்ற பிறழ்வுகளே.

http://www.tamilarkal.com/

Edited by சிறிலிங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.