Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமலை மக்களுக்கு ஒரு வேண்டுகோள்--தமிழ்க் கலாசாரக் கழகம்

Featured Replies

திருமலை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஒடுக்கும் பொறியில் சிக்கியிருக்கும் வேட்பாளர்களை இனம் கண்டு விழிப்புடன் செயற்படுங்கள் என அவுஸ்திரேலிய தமிழ்க் கலாசாரக் கழக செயலாளர் விக்கிரமசிங்கம் விடுத்துள்ள வேண்டுகோளில் தெவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று இலங்கைத் தீவில் தமிழர் பிரதேசங்களை இழந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களாகிய நாங்கள் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்து வரும் தலைமைத்துவத்தைப் பலப்படுத்தும் வகையில் இனங்கண்டு விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும்.

சத்திரப் பிரசித்தி வாய்ந்த திருகோணமலை, சேருவில, மூதூர் தொகுதிகளை உள்ளடக்கிய திருமலை மாவட்டத்தில் 217 வேட் பாளர்கள் போட்டியிடுகின்றமை அரசின் திட்டமிட்ட தமிழ் இன அழிப்பு என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இதில் 17 அரசியல் கட்சிகள் 14 சுயேச்சை குழுக்கள், 31 அணிகளில் அபேட்சகர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். இதில் தமிழ் அபேட்சகர்கள் தொகை அதிகமாக காணப்படுகின்றது. அதிலும் பழைமை வாய்ந்த அரசியல் கட்சிகள் உட்பட பல சுயேச்சைக் குழுக்களை அரசு திட்டமிட்டு நிறுத்தியுள்ளமையை வாக்காளர்கள் விழிப்புணர்வுடன் அவதானிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இருந்த தமிழ் வாக்காளர்கள் தொகையில் பாரிய மாற்றங்களை காணமுடியவில்லை. ஆனால் சிங்கள பெரும்பான்மை யினத்தின் வாக்குகளும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் அதிகத்துள்ளன.

இந்த நிலையில் தமிழ் மக்களின் பழைமை வாய்ந்த கட்சிகளான தமிழ் அரசுக் கட்சியும், த‌மிழ் காங்கிரஸ் கட்சியும் மோதிக் கொள்வதால் மட்டுமல்ல சுயேச்சைக் குழுக்களின் வாக்கு சிதறடிப்பால் தமிழ் மக்களின் திருமலை மாவட்ட பிரதிநிதித்துவம் இழக்கப்படும் நிலை. 2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எமக்கு கிடைத்த பாதகமான சூழலை நாம் மறந்து விடக்கூடாது.

2000ஆம் ஆண்டில் மூன்று தமிழ் அரசியல் கட்சிகள் களமிறங்கியிருந்த வேளையில் எமக்கு கிடைத்த கசப்பான முடிவுகள் இன்று 17 அரசியல் கட்சிகள் கூறு போடுவதுடன் அரச பொறிக்குள் சிக்கியிருக்கும் சுயேச்சைக் குழுக்கள் மறுபுறமிருக்க வாக்குச் சீட்டு அடிக்கணக்கில் நீண்டு வரும் போது வாக்காளர்கள் சிரமத்துக்குள்ளாக்கப்படுகிறார்கள். ஆயினும் திருமலை, அம்பாறை மாவட்ட தமிழ் வாக்காளர்கள் ஒரே அணியில் வாக்களித்தால் மட் டுமே சாதகமான முடிவை எதிர்நோக்கலாம்.

எமது மக்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப் பட வழி வகுக்கலாம். இன்றும் காலம் தாழ்ந்து விடவில்லை. ஆகவே பதவி மோகம், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து தமிழ் இனத்தின் நலன் பேண எமது சத்திர பிரசித்தி வாய்ந்த பாரம்பரிய மாவட்டமான திருகோணமலையின் தமிழர் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுங்கள். ஒரே அணியில் வாக்களியுங்கள்.

http://www.tamilarkal.com/

நானும் திருகோணமலையில் நீண்டகாலம் வசித்து வருகிறேன்.

"தமிழ்க் கலாசாரக் கழகம", "தமிழ் இளைஞர் அமைப்பு" என்ற இல்லாத அமைப்புக்களின் பெயர்களில் கடந்த சிலநாட்களாக வெறும் 3 பேர் அறிக்கை போர் செய்து வருகினம். அவர்கள் பெயரை இங்கு குறிப்பிடுவது அழகல்ல.

  • தொடங்கியவர்

நானும் திருகோணமலையில் நீண்டகாலம் வசித்து வருகிறேன்.

"தமிழ்க் கலாசாரக் கழகம", "தமிழ் இளைஞர் அமைப்பு" என்ற இல்லாத அமைப்புக்களின் பெயர்களில் கடந்த சிலநாட்களாக வெறும் 3 பேர் அறிக்கை போர் செய்து வருகினம். அவர்கள் பெயரை இங்கு குறிப்பிடுவது அழகல்ல.

இது ஒன்றும் பிரான்ஸ் தமிழ் சங்களின் கூட்டமைப்பு,இத்தாலி தமிழ் அமைப்புகள் ,கனேடிய தமிழ் பட்டதாரிகள் என்று சைக்கிளுக்கு வோட் போடச் சொல்லும் ,கிழ்தரமான எதனையும் சொல்ல வில்லை; நேரடியாக தமிழர்களை சைக்கிளுக்கு கீழயோ,இல்லை வீட்டுக்கு கீழயோ ஒன்றிணையச் சொல்றாங்க.....

எனது தனிப்பட்ட கருத்து ,திருமலையில் மக்கள் வீட்டுக்கு கீழே ஒன்று படுவது உத்தமம்.....

தராக்கி

இது ஒன்றும் பிரான்ஸ் தமிழ் சங்களின் கூட்டமைப்பு,இத்தாலி தமிழ் அமைப்புகள் ,கனேடிய தமிழ் பட்டதாரிகள் என்று சைக்கிளுக்கு வோட் போடச் சொல்லும் ,கிழ்தரமான எதனையும் சொல்ல வில்லை; நேரடியாக தமிழர்களை சைக்கிளுக்கு கீழயோ,இல்லை வீட்டுக்கு கீழயோ ஒன்றிணையச் சொல்றாங்க.....

"தமிழ்க் கலாசாரக் கழகம", "தமிழ் இளைஞர் அமைப்பு" ' படைப்பாளிகள் கழகம் ' இவை எல்லாம் மூன்று பேர் தான் சம்பந்தருக்காக மூன்று கேட்டால் அது பொது நோக்கு மற்றவர்கள் கேட்டால் கீழ்த்தரமானது

சம்பந்தருக்காக வேறு எந்த கழகமும் அறிக்கை விடவில்லையே எங்கோ இடிக்கின்றது தராக்கி

தராக்கி

எனது தனிப்பட்ட கருத்து ,திருமலையில் மக்கள் வீட்டுக்கு கீழே ஒன்று படுவது உத்தமம்.....

மரத்திற்கு கீழே ஒன்று பட முடியாதா ? :)

சொதி கேட்பது போல் உள்ளது இப்படி கெஞ்சி மண்றாடி நீங்கள் கேட்பதன் பிண்ணனி தான் என்னவோ ?

Edited by tamilsvoice

எனது தனிப்பட்ட கருத்து ,திருமலையில் மக்கள் வீட்டுக்கு கீழே ஒன்று படுவது உத்தமம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.