Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதிநிதித்துவத்தை சிதைக்கும் முயற்சிக்கு எதிராக தமிழ் மக்கள் ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டும்

Featured Replies

பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சிதறடிக்கும் முயற்சிக்கு எதிராக எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் தமது வாக்குப்பலத்தை வெளிப்படுத்துவதே காலத்தின் கட்டாய தேவையென்ற கருத்தை அரசியல் அவதானிகள் முன்வைத்திருக்கின்றனர்.

பொதுத் தேர்தலுக்கு இன்னமும் மூன்று தினங்களே முழுமையாக இருக்கும் நிலையில், தமிழ் மக்களை நன்றாகச் சிந்தித்து வாக்களிப்பதற்கான கருத்துகள் அரசியல் அவதானிகளிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளன.இலங்கைத் தமிழர்களின் பாரம்பரியமான பிரதேசமான வட,கிழக்கு மாகாணங்களின் 5 தேர்தல் மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையான அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டு உக்கிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற நிலையில், வகைதொகையின்றி கட்சிகளும் குழுக்களும் போட்டியிடுவதற்கான "ஜனநாயக உரிமை%27க்குள் புதைந்திருக்கும் மறைமுகமான இரகசியத் திட்டப் பின்னணி குறித்து தமிழ் வாக்காளர்கள் விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாண வாக்காளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத் தேவை குறித்த கருத்துகள் இந்த அவதானிகளிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் என்றுமே இல்லாதளவுக்கு அரசியல் சூனியப் பிரதேசத்திற்குள் தள்ளிவிடப்பட்டு, தவித்துக் கொண்டிருக்கும் மக்களை ஒரே அணியில் ஒன்று திரட்டி, ஜனநாயக ரீதியில் தமது அடிப்படை உரிமைகளுக்காக ஒன்றுபட்டு குரலெழுப்பக்கூடிய அரசியல் அணியொன்றை ஏற்படுத்திக்கொள்ள எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் சிறு "துரும்பாக%27உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள அவதானிகள் அந்த அணியைத் தெரிவு செய்வதே தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு உதவும் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.

இலங்கைத் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக குரல்கொடுக்க வல்ல சக்திகளை ஓரங்கட்டும் முயற்சியைப் பேரினவாத சக்திகள் என்றுமில்லாதளவுக்கு ஆக்ரோசத்துடன் முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், அந்தப் பேரினவாத சக்திகளுக்கு தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சந்தர்ப்பவாத சக்திகள் சில விலைபோயிருக்கின்றன. இதனைத் தமிழ் மக்கள் தெளிவாக அடையாளம் கண்டுகொண்டு அவற்றை ஏகோபித்து நிராகரிப்பதுடன், தங்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்றை உருவாக்குவதற்கான அத்திவாரமாக இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தல் விடுக்கப்படுகிறது.

அரசியலமைப்பில் விதந்துரைக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கு இடமளிக்காமல் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் கட்சிகளை தடைசெய்ய வேண்டுமென்ற கருத்துகள் தென்னிலங்கையிலுள்ள கடும்போக்கு சக்திகளால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மூன்று தசாப்த காலமாக நீடித்திருந்த உள்நாட்டு யுத்தமானது இராணுவத் தீர்வினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில், இனப்பிரச்சினையொன்று இங்கு இல்லையென்று பாசாங்கு காட்டும் நடவடிக்கைகள் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டுள்ள சர்வதேச சமூகம் அதிகாரப் பகிர்வு உட்பட தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அதிகார மையத்தை வலியுறுத்தி வருகின்றது. அத்தகையதொரு சூழ்நிலையில், இலங்கைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவமாக எந்தவொரு அரசியல் அணி மேலெழுந்து வரப்போகின்றது என்ற விடயத்தில் பாராளுமன்றத் தேர்தலின் பெறுபேற்றை சர்வதேச சமூகம் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றது.

இந்நிலையில், பல்வேறு அரசியல் குழுக்களாகவும் சுயேச்சைக் குழுக்களாகவும் தேர்தல் களத்தில் குதித்திருப்பவர்களால் தமிழ் மக்களுக்கு அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படும் பலம் வாய்ந்த அரசியல் அணியை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது என்பது சிறுபிள்ளை கூடப் புரிந்துகொள்ளக்கூடிய விடயமென்று சுட்டிக்காட்டும் அரசியல் அவதானியொருவர் தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைச் சிதறடித்து சின்னாபின்னமாக்கி அவர்களை அரசியல் அநாதைகளாக்க கங்கணம் கட்டிச் செயற்படுவோரின் பசப்பு வார்த்தைகளுக்கு எந்தவிதத்திலும் இடமளிக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.

வரலாற்றுப் படிப்பினைகளைப் புரிந்துகொண்டு சுயவிமர்சனங்களுக்கு தங்களை உட்படுத்தி பட்டறிவு பெற்றுள்ள அரசியல்வாதிகளாலேயே தமிழ் மக்களை இன்றைய இக்கட்டான நிலைமையிலிருந்து மீட்பதற்கு உருப்படியாக எதனையாவது செய்யக்கூடியதாகவிருக்கும்.யதார்த்த நிலைமைக்கேற்ப தங்களையும் தாம் சார்ந்த மக்களையும் நெறிப்படுத்தக்கூடிய சிரேஷ்ட அரசியல்வாதிகளை அடையாளங்கண்டு அவர்களைப் பலமான அரசியல் அணியாக உருவாக்குவது குறித்து தமிழ் மக்கள் சிந்திப்பது அவசியமென்றும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல்வேறு அரசியல் குழுக்களாகவும் சுயேச்சைகளாகவும் வட,கிழக்குத் தேர்தல் களத்தில் இறங்கியிருப்போர் உண்மையிலேயே தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைப்பவர்களாகும். இவர்களுக்கு பண, பரிவார பலம் திடீரென எங்கிருந்து அபரிமிதமாகக் கிடைத்தது என்பது குறித்து மக்கள் சிந்திப்பதும் மிகவும் முக்கியமான விடயமாகும்.

வட,கிழக்கிலிருந்து பலம் வாய்ந்த அணியொன்று பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படக்கூடாது என்ற மறைமுக நிகழ்ச்சித் திட்டத்துடன் காய்களை நகர்த்திவிட்டிருக்கும் சக்திகளின் சதி முயற்சிகளை முறியடிக்க தமிழ் மக்கள் உறுதிபூண்டு தேர்தலில் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டுமென்பதே அரசியல் அவதானிகளின் வேண்டுகோளாகக் காணப்படுகிறது

Thinakkural

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.