Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்கள் உணர்வலைகளும்...

Featured Replies

நாடாளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்கள் உணர்வலைகளும்: செய்திப்பார்வை

நாடாளுமன்றத்துக்கான தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் தேர்தலில் இலங்கையர்கள் இன்று(வியாழக்கிழமை) வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். சிறிலங்கா நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சனவரியில் மீண்டும் அரச தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, தனது சக போட்டியாளரை கைது செய்த பின்னர், தனது அரசியல் மேலாண்மையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இத் தேர்தல் இன்று நடாத்தப்படுகிறது.

இந்தியாவுக்குத் தென்கிழக்காக அமைந்துள்ள இந்நாட்டில் வாக்களிப்பு ஆரம்பமாகிவிட்டதால் நாடு முழுவதிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வாக்களிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். ராஜபக்ச தனது சொந்த கிராமமான மெதமுலன எனும் தென்னிலங்கையில் அமைந்துள்ள கிராமத்தில் வாக்களித்துள்ளார்.

கால் நூற்றாண்டு காலமாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரை கடந்த வருடம் வெற்றி கொண்டமைக்காக, சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாக விளங்குகின்ற ராஜபக்ச அரசியலமைப்பை மாற்றுவதற்காக தனது கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வேண்டி நிற்கிறார்.

225 ஆசனங்களைக் கொண்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 128 ஆசனங்களை வைத்திருக்கும் ராஜபக்ச கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் பெரும் போட்டி இருப்பதாகத் தெரியவில்லை.

எதிக்கட்சிகள் சிதறியுள்ளன. எதிர்க்கட்சிகளின் தோற்கடிக்கப்பட்ட அரச தலைவர் வேட்பாளரும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தவருமாகிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி இருக்கிறார். தனது இராணுவ பதவியைக் கைவிடுவதற்கு முன்பே சட்டத்திற்கு முரணான வகையில் தனது அரசியல் பாதையை தெரிவு செய்ததாகவும் இராணுவ உபகரணங்களைக் கொள்வனவு செய்யும் விதிமுறைகளை மீறியதாகவும் அவர்மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் தலைநகர் கொழும்பில் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றுவதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். மிகப் பெரிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து கட்சி உள் முரண்பாட்டையும் தனது தலைமைத்துவத்துக்கான சவாலையும் எதிர்கொள்கிறார்.

ராஜபக்ச கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாகவும் ஊழலையும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பதவிகளை வழங்குவதை ஊக்குவிப்பதாகவும் குடும்ப ஆட்சியை நிறுவுவதற்கு முயல்வதாகவும் எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. சிறிலங்கா அரசதலைவர் தனது இரண்டாவது பதவிக் காலம் நிறைவடையும் 2017 ஆம் ஆண்டுவரை தொடர்ந்தும் பதவியிலிருக்கும் வகையிலேயே அரசியலமைப்பை மாற்றியமைக்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்றன.

அவரது இரு சகோதரர்களும் ஒரு மகனும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதுடன் உறவினர்கள் முக்கியமான அரச பதவிகளை வகிக்கின்றனர்.

வாக்காளர்களுக்கு இரு தெளிவான தெரிவுகள் இருப்பதாக தேசிய சமாதானப் பேரவையின் செயற்பாட்டாளர் ஜெகான் பெரேரா தெரிவிக்கிறார். ‘தனது வாக்குறுதிகளை மேலும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தைப் பலப்படுத்துவது… அல்லது அனைத்து எதிர்க் கட்சிகளையும் புறக்கணித்து அரசாங்கம் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கிறதா என்பதை ஆராய்தல்.’

முதலாவது தெரிவையே தெரிவு செய்யும்படி பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தனது ஆதரவாளர்களைக் கேட்டுள்ளார். ‘பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவசியமான பலமான நாடாளுமன்றத்தை எங்களுக்குத் தருமாறு நாங்கள் கேட்கிறோம்’, என இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

போர் முடிவடைந்த பின்னர் சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பதே புதிய அரசாங்கம் எதிர்கொள்ள இருக்கும் முக்கியமான பிரச்சினை ஆகும்.

எனினும், போரினால் 200,000 இற்கும் அதிகமானோர் இடம்பெயர்க்கப்பட்ட தமிழ் மக்களுடன் அதிகாரப் பகிர்வு தீர்வு ஒன்று தொடர்பாகப் பேச்சுக்களை நடாத்துவதென்ற தனது வாக்குறுதியை ராஜபக்ச நிறைவேற்ற வேண்டியுள்ளது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய புதியவர்களைத் தெரிவு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக தேர்தல் அமைகிறது. மூன்று தசாப்தங்களாக தமது கொள்கைகளுக்கு எதிரானவர்களை கொலைசெய்தபோதும், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் பலம் வாய்ந்த குரலாக இருந்து வந்தார்கள்.

கடந்த நாடாளுமன்றத்தில் 22 ஆசனங்களைத் தக்கவைத்திருந்த புலிகளின் சார்புக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, அரசாங்கத்திற்கு சார்பானவர்கள், தமிழ்த் தனியரசுக்காக குரல் கொடுப்பவர்கள், தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களுடனான கூட்டாட்சியைக் கோரி நிற்பவர்கள் என மூன்றாகப் பிளவடைந்துள்ளது.

தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கில், வாக்குப் பெட்டிகளுக்கூடாக தமது வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதில் மக்கள் எவரும் நம்பவில்லை.

‘வாக்களிப்பதால் என்ன பயன்?, என்று கேட்கிறார் மானிப்பாயைச் சேர்ந்த 45 வயதுடைய கூலித் தொழிலாளியான சிவஞானம் மகேந்திரன். ‘கடந்த காலங்களிலும் நாங்கள் வாக்களித்துள்ளோம், ஆனால் எதுவும் நடந்துவிடவில்லை. எங்களுக்குக் கிடைத்தவை யாவும் உயிரழிவும் சொத்து அழிவும் இடப்பெயர்வுமே.’

http://www.puthinamnews.com/?p=8289

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.