Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடிகட்டிப் பறக்கும் "ராஜ பக்ஷ அண்ட் கோ' !

Featured Replies

மிகப் பலமான ஆளுங்கட்சி, மிகவும் பலவீனமான எதிர்க் கட்சி என்ற நிலையில் புதிய அரசின் நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன. புதிய நாடாளுமன்றின் கன்னி அமர்வில் புதிய சபா நாயகர் தெரிவாகிவிட்டார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரே புதிய சபாநாயகர்.

இதன்மூலம் நாடாளுமன்றின் அன்றாட நிர்வாகக் கட்டுப்பாடுகளும் ராஜபக்ஷ குடும்பத்தின் பிடிக்குள் அழுத்தமாக வீழ்ந்துவிட்டன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் தவறிழைக்கும் போது அல்லது நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைக்கும்போது அதற்கு எதிராக சட்ட ரீதியாக நடவ டிக்கை எடுப்பதற்கு உள்ள ஒரே வாய்ப்பு அவருக்கு எதிராக நாடாளுமன்றம் ஊடாக குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதேயாகும்.

ஜனாதிபதி பிரேம தாஸா பதவியிலிருந்தபோது அத்தகைய முயற்சி ஒன்று அவருக்கு எதிராகக் கிளம்பிய காமினி திஸாநாயக்க, லலித் அத் துலத்முதலி போன்றோரால் கொண்டுவரப்பட்டமை நினைவுகூரத்தக்கது. ஜனநாயகக் கட்டமைப்பில் ஒழுங் கான நீதி முறையான ஆட்சி முறைமையை உறுதி செய் வதற்கான ஏற்பாடுகளுள் குற்ற விசாரணைப் பிரேர ணையைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பும் முக்கியமான தாகும். ஜனநாயக மாண்புகளில் அந்த வசதியும் குறிப் பிடத்தக்கதாகும். அந்தச் செயன்முறையை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டிய நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்திருக்க வேண்டிய பொறுப்பு சபாநாயகருடையதாகும். அந்தப் பதவியும் இப்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் மூத்த சகோதரர் வசமாகிவிட்டது. இனி என்ன? இப்போதே கொடிகட்டிப் பறக்கும் "ராஜ பக்ஷ அண்ட் கோ'வின் குடும்ப ஆட்சி இனி கோபுர உச் சிக்கு உயரப் போகின்றது.

தனது கைப்பிடியில் பலமான நாடாளுமன்றம் சபாநாயகரும், முக்கிய அமைச்சர்களும் தமது சகோதரர்கள் பாதுகாப்பு அமைச்சு தமது மற்றொரு சகோ தரரின் முழுக் கட்டுப்பாட்டில் என்ற இத்யாதி ரத,கஜ, துரக பதாதிகளோடு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இலங்கைத் தீவை ஆட்டிப்படைக் கப்போகின்றது. இத்தனை வலுவான ஆளும் தரப்புக்கு எதிராகத் தப் பிப் பிழைத்திருக்கும் எதிர்த்தரப்போ மிகப் பலவீனமானதாக உள்ளது. அந்தப் பலவீனத்துக்கு மத்தியில் இருக்கும் கொஞ்ச நஞ்சப் பலம் கூட ஆரம்பத்திலேயே சிதறிவிடும் போலத் தோற்றுகின்றது. ஐ.தே.முன்னணியின் கயிற்றைப் பற்றி ஏறி எப்படியாயி னும் எம்.பியாக வேண்டும் என்று துடியாய்த் துடித்த தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் திகாம்பரம், எதிர்பார்த்தபடி தமது கைவரிசையைக் காட்டத் தொடங்கி விட்டார். எம்.பியான முதல்நாளே இவ்வளவு சீக்கிரத்திலேயே அவரது "அந்தர் பல்டி'யைப் பலரும் எதிர்பார்க்க வில்லைத்தான். ஆனால் கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக "ஆயாராம், காயாராம்' பாணியில் ஊசலாடி, அணி மாறிக்கொண்டிருந்த அவர், இப்படித்தான் நடப்பார் என ஊகிப்பது யாருக்கும் கஷ்டமானதாக இருந்திருக்க மாட்டாது. ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, நாடாளுமன்றத்துக்கு வந்த அவர், வந்த முதல் நாளே அரசுப் பக்கம் போய் அமர்வது கஷ்டமானது தான். அவரைச் சேர்க்க வேண்டிய கட்டாயமும் அரசுத் தரப்புக்கு இல்லைத்தான். ஆகவே, இப்போதைக்கு "தனித்துச் செயற்படல்' என்ற கயிறை அவர் விடுத்திருக்கின்றார். அந்தக் கயிறு "அரசுப் பக்கம் பாய்வதாக' விரைவில் உருமாறும் என நம்பலாம். இதேசமயம், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் முரண்டு பிடித் துக்கொண்டு கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றது. இதனால் அக்கட்சியின் சார்பில் கொழும்பில் ஐ.தே.முன்னணி யில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மனோகணேசனின் சகோதரரான பிரபா கணேசனும் ஐக்கிய தேசிய முன்னணி யிலிருந்து வெளியேறும் நிலைமை கருக்கட்டி வருகின்றது. இதேவேளை, மொனறாகலை மாவட்ட வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவ காரம் தொடர்பில் அந்த மாவட்டத்திலிருந்து ஐ.தே. முன்னணியில் தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் மத்துமபண் டார, தமது கட்சியோடு முரண்பட்டிருக்கின்றார். தமது கட்சியின் தலைவர், செயலாளர் ஆகியோருக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் வழக்குக் கூடத் தாக்கல் செய்துள்ளார். எனவே அவரும் எந்நேரத்திலும் அணிமாறும் சூழ் நிலை காணப்படுகின்றது.

தவிரவும், எதிரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் சார்பில் தெரிவான ஓரிரு எம்.பிக்கள் குறித்தும் அரசில் புரசலாக சில செய்திகள் கசியத் தொடங்கியிருக்கின்றன. கடந்த ஞாயிறன்று கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்றக் குழு திருகோணமலையில் முதல் தடவையாகக் கூடிய போது வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் இருவர் அரசுத் தரப்புடன் சேர்ந்து செயற்படவேண்டும் என்று அளவுக்கு அதிகமாக வலியுறுத்திப்பேசினர் என்றும் கூறப்படு கின்றது. அவர்களின் உள்நோக்கம் விளங்காத போதிலும், எதிர்ப்பு அரசியலில் எதிரணி அரசியலில் அவர்கள் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்பது தெளிவாகின்றது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, மஹிந்த அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மை சுலபமாக மிகச் சுலபமாக மிக விரைவில் கிட்டிவிடும் என்பது ஓரளவுக்கு உறுதியாகி வருகின்றது.

  • தொடங்கியவர்

50 வீதமான துறைகளும், சுமார் 60 வீதமான அரச நிறுவனங்களும் ராஜபக்ஸவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது!

அமைச்சரவை நியமிக்கப்படும் போது, அமைச்சுக்களுக்குரிய சுமார் 50 வீதமான துறைகளும், சுமார் 60 வீதமான அரச நிறுவனங்களும் ராஜபக்ஸவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்து அதிகாரபூர்வமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒதுக்கப்பட்ட துறைகள் மற்றும் அரச நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து பார்த்தால் மக்கள் அதனை நன்கு உணர்ந்துகொள்ள முடியும்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என்ற பெயரில் பசில் ராஜபக்ஸ பெரும் எண்ணிக்கையிலான துறைகளை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளார். அத்துடன் அரசியல் அமைப்பில்; தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிகமாக நிதி, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்களை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டில் வைத்துகொண்டுள்ளார்.

http://www.nerudal.com/nerudal.15532.html

அதிர்ஷ்டம் என்பது இதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லெக்சனுக்கு பிறகு நடக்கிறதுகள பாத்தா சரவணபவன் கெதீல கட்சி மாறிடுவார் போல கிடக்கு. சாவசேரி கொலை கேசில உள்ளுக்க போறதுக்கும் சான்சிருக்கு. :D

லெக்சனுக்கு பிறகு நடக்கிறதுகள பாத்தா சரவணபவன் கெதீல கட்சி மாறிடுவார் போல கிடக்கு. சாவசேரி கொலை கேசில உள்ளுக்க போறதுக்கும் சான்சிருக்கு. :D

அப்ப மிச்ச ஆக்கள் என்ன மாதிரி...? இந்தியா சொன்னால் ஒட்டு மொத்தமாய் போகப்போகினம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.