Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2ஆம்இணைப்பு‐யாழ்ப்பாணம் சமூகச் சீரழிவுகளுக்கு எதிரான கண்டனப்பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது ஏற்பாட்டாளர்களுக்கு உயிர் அச்சறுத்தல் GTN செய்தியாளர்

Featured Replies

2ஆம்இணைப்பு‐யாழ்ப்பாணம் சமூகச் சீரழிவுகளுக்கு எதிரான கண்டனப்பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது ஏற்பாட்டாளர்களுக்கு உயிர் அச்சறுத்தல் GTN செய்தியாளர்

02 May 10 05:51 am (BST)

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள கடத்தல் கப்பம்கோரல் படுகொலை செய்தல் கற்பழித்தல் போன்ற சமூக சீரழிவுகளுக்கு எதிராக இன்று காலை 9 மணிக்கு கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்படவிருந்தது. யாழ் துரையப்பா மைதானத்திற்கு அருகில் உள்ள முனயப்பர் கோவிலின் முன்பாக தொடங்க இருந்த இந்தப் பேரணியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருந்தனர். இன்று காலை குறித்த பேரணிக்கு சென்ற எமது விசேட செய்தியாளர் அங்கு பேரணி தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பிலான செய்தியை தருகிறார்.

யாழில் மக்களை பயத்திற்குள் தள்ளும் குற்றச்செயல்கள் அண்மைக்காலமாக மிக அதிகரித்துச் செல்கின்றன. இது தொடர்பிலான பல் வேறு தரவுகளையும் செய்திகளையும் GTN வாயிலாக வெளிக்கொண்டு வந்தோம். நேற்றைய தினம் மக்கள் சக்தி என்ற அமைப்பு இந்த குற்றச்செயல்களுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்த இருப்பதாக அறிவித்திருந்தது. குறித்த பேரணிக்கு யாழ் சமூகத்திளர் அனைவுரம் அழைக்கப்பட்டிருந்தார்கள். மிக நீணட காலத்திற்கு பின்னர் மனித உரிமைகளுக்காக யாழ் மக்கள் ஒன்று திரளுகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் இந்தப் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பேரணியை ஏற்பாடு செய்த மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர்களுக்கு நள்ளிரவு முதல் கடுமையான அச்சுறுத்தல் தொலைபேசிகள் வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தில் மனைவி, குழந்தைகள் என்று அனைவரும் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச் செயல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமாக இருந்தால் அதை பாதிக்கப்பட்டவரது பிரதேச படையினர் மற்றும் காவல்துறையினர் ஊடாகவே முறைப்பாடு செய்ய வேண்டுமே தவிர இவ்வாறான பேரணிகளில் ஈடுபடுவது அவற்றை நடத்துவது என்பன நாட்டின் அமைதியை குலைக்கும் நடவக்கை என்று குறித்த தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை முதல் மக்கள் பேரணிக்கு வர முடியாதபடி ஏற்பாடு செய்தவர்களால் குறித்த இடங்களுக்கு சென்று அறிவிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை பேரணி நடைபெற இருந்த முனியப்பர் ஆலயத்தில் ஊடகவியளாலர்கள் மட்டுமே நின்று கொண்டிருந்தபொழுது அங்கு வருகை தந்த காவல்துறையினர் மற்றும் படையினர் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு குறிப்பிட்டுள்ளனர். வழமைக்கு மாறாக அந்த இடங்களில் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்த மக்கள் சக்தி என்ற அமைப்பு கந்த நாடாளமன்றத் தேர்தலில் போட்டியிட இருந்த சுயேட்சை அணி ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் தொடரும்

கடத்தல் சம்பவங்களுக்கு எதிராக யாழில் நாளை கண்டனப் பேரணிக்கு மக்கள் சக்தி என்ற அமைப்பு அழைப்பு :

2010‐05‐01 06:51:15

யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் கடத்தப்படல் மற்றும் பாலியல் வல்லுறவு, கப்பம் கோரிக் கடத்தல் போன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை கோட்டை முனியப்பர் ஆலய முன்றலில் இருந்து கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்பட இருக்கின்றது. மக்கள் சக்தி என்ற அமைப்பினால் இக் கண்டனப் பேரணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து மக்கள் சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த மேலும் இபப்டி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறுவர்கள் கடத்தப்படல், யுவதிகள் கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துதல் மற்றும் கப்பம் கோரி கடத்தப்படல் போன்ற சம்பவங்கள் தமிழ் மக்களின் கல்வி உரிமையை பறிக்கப்படும் செயல்களாகவே காண்கின்றோம். இச்செயலானது உடனடியாக நிறுத் தப்படவேண்டும்.

இது ஒரு வகையான மனித உரிமைமீறலும் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகின்றமையாகும். இக் கண்டனப்பேரணியில் இந்து குருமார் ஒன்றியம், கிறிஸ்தவ குருமார் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழக சமூகம், அதிபர், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், கிராம சேவையாளர்கள், மக்கள் பணித் தொண்டர்கள், இளைஞர்கள், யுவதிகள், வர்த்தகர்கள், கடற்தொழிலாளர்கள் சங்கங்கள், விவசாயிகள், பல நோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட்ட அனைவரையும் கலந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கண்டனப் பேரணி மனித உரிமை கள் ஆணைக்குழு, யாழ். செயலகம் மற்றும் யு.என்.எச்.சி.ஆர். அலுவலகம் ஆகியவற் றுக்குச்சென்று அங்கு மகஜர்களும் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=23804&cat=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களுக்கு வோட்டுப்போடவே சக்தியில்ல..... அதுக்குள்ள மக்கள் சக்தி மகேசன் சக்தியெண்டுகொண்டு.... :rolleyes:

  • தொடங்கியவர்

மக்களுக்கு வோட்டுப்போடவே சக்தியில்ல..... அதுக்குள்ள மக்கள் சக்தி மகேசன் சக்தியெண்டுகொண்டு.... :rolleyes:

புலியை சொறியிறதை விட வேறை தொழிலே உங்களுக்கு இல்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தில் இன்று காலை மக்கள் சக்தி என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கடத்தல் காணாமல் போதல் கொலைகள் மற்றும் பயமுறுத்தலகளுக்க எதிராக நடைபெற விருந்த ஊhவலம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.

மககள் சக்தி என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த ஊர்வலத்திற்க்கான அனமதியை படைத்தரப்பு குறிப்பாக பொலிசார் அனுமதி வழங்கி இருந்ததாகவும் இன்று காலை அதறக்கான அனுமதியை பொலிசார் மேலிடத்தின் உத்தரவுக்க அமைவாக மீளப் பெற்றுள்ளதாகவும் ஏற்பாட்டாளரான க.குமாரவேல் ஊடகங்களுக்க தெரிவித்துள்ளார்

காலையில் தனக்கு இனம் தெரியாத நபாகளிடம் இருந்த தொலைபேசி மூலம் கொலை பயமுறுத்தல் விடப்பட்டதுடன் தனது குடும்பத்தவாகளை கடத்தப் போவதாக கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் குறிப்பாக பொலிசார் அனுமதி வழங்காமையாலும் தொடர்ந்து இத்தகைய அச்சுறத்தலகள் விடப்பட்டமையாலும் தாம் இந்தப் ஊர்வலத்தை நிறுத்துவததாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலையில் ஊர்வலம் ஆரம்பமாவதாக இருந்த யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்புறத்தில் அதிக எண்ணிக்கையான பொலிசாரும் மற்றும் இராணுவத்தினர் படைகளின் புலனாய்வாளர்களும் குவிக்கப்பபட்டு இருந்தாhகள்

http://www.pathivu.com

2ஆம்இணைப்பு‐யாழ்ப்பாணம் சமூகச் சீரழிவுகளுக்கு எதிரான கண்டனப்பேரணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது ஏற்பாட்டாளர்களுக்கு உயிர் அச்சறுத்தல் GTN செய்தியாளர்

யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்று வரும் கடத்தல், கொலை, பாலியல்வன்புணர்வு, கப்பம் கோரல் போன்ற குற்றச்செயல்களை கண்டித்து இன்று நடத்தப்படவிருந்த கண்டனப் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ஏற்பாட்டாளர்களுக்கு உயிர் அச்சறுத்தல் .

இப்படி தான் செய்தியின் தலைப்பு அமையவேண்டும்

Edited by விடிவெள்ளி

  • தொடங்கியவர்

யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்று வரும் கடத்தல், கொலை, பாலியல்வன்புணர்வு, கப்பம் கோரல் போன்ற குற்றச்செயல்களை கண்டித்து இன்று நடத்தப்படவிருந்த கண்டனப் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ஏற்பாட்டாளர்களுக்கு உயிர் அச்சறுத்தல் .

இப்படி தான் செய்தியின் தலைப்பு அமையவேண்டும்

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்...???

ஓ... 2ம் இணைப்பு எண்டு இருக்கிறதோ... ?? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.