Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன் தமிழனாக இல்லை - சீமானின் ஆவேச பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோற்றத்தில் மட்டுமல்ல, சீற்றத்திலும் சீமான் ஒரு புலிதான் என்பதை நிருபித்தது அந்த முதல் கூட்டம்! அவரது 'நாம் தமிழர்' அரசியல் கட்சியின் முதல் பொதுக்கூட்டமல்லவா? 18-5-10 அன்று நடந்த அந்த கூட்டத்தையும் அவரது ஒவ்வொரு அசைவையும் சக அரசியல் கட்சிகளும், உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நன்றாகவே உணர முடிந்தது. நெருப்பை பொட்டலத்தில் கட்டிய மாதிரி தீயாக தகித்துக் கொண்டிருந்தார்கள் திரளாக கூடியிருந்த சீமானின் தம்பிகள்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையைதான் முதல் மேடைக்கு பொருத்தமான இடமாக தேர்வு செய்திருந்தார் சீமான். ஊருக்கு ஒதுக்குபுறமாக மைதானம் இருந்தாலும், அன்றைய தினம் ஊரே அங்குதான் இருந்தது. மாலை நாலு மணிக்கு துவங்கிய பேரணி பெரும் முழக்கங்களுடன் மைதானத்தை வந்தடைந்த போதும் ஏழரை மணி வரை ஊர்வலம் தொடர்ந்து கொண்டிருந்தது!

மேடையின் இருபுறமும் தமிழீழத்திற்காக உயிரை கொடுத்தவர்களும், தமிழறிஞர்களும், வீரர்களும், சில முக்கியமான அரசியல் தலைவர்களும் புகைப்படமாக இருந்தார்கள். (அடடே, அதில் சந்தன வீரப்பன் படமும்...) தியாகி முத்துக்குமாரின் படம் தாங்கிய அந்த மேடையின் எதிரிலேயே அவரது அப்பாவும் அமர்ந்திருந்தார். நாம் தமிழர் கட்சியின் முதல் கொடியையும் அவர்தான் ஏற்றி வைத்தார். முன்னதாக தேனிசை செல்லப்பாவின் இசை நிகழ்ச்சி. "நமது தேசிய தலைவர் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் ஆகியோர் உயிரோடுதான் இருக்கிறார்கள். நமக்கு சிக்னல் வந்து கொண்டுதான் இருக்கிறது. தலைவரது ஆலோசனைபடிதான் சீமான் கட்சி ஆரம்பித்திருக்கிறார்" என்று அவர் சொல்ல சொல்ல, பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம்!

கடைசியாக தொண்டர்களின் உற்சாக கூச்சலுக்கு நடுவே மைக்கை பிடித்தார் சீமான். அந்த மிக நீண்ட சொற்பொழிவில் சில பகுதிகள் மட்டும் இங்கே-

"நாங்கள் கட்சி ஆரம்பித்ததை பலர் விமர்சிக்கலாம்.அதைப்பற்றி கவலைப்படவில்லை. அமைதியான கடல் நல்ல மாலுமிகளை உருவாக்க முடியாது. அதனால் விமர்சனங்களை வரவேற்கிறோம். நாம் தமிழர் இயக்கத்தை நாங்கள் தொடங்கவில்லை; தொடர்கிறோம். ஆதித்தனாரால் தொடங்கப்பட்ட இயக்கம்தான் இது. எந்த தேவைக்காக எந்த நோக்கத்திற்காக இது தொடங்கப்பட்டதோ அது அப்படியே இருக்கிறது. அதனை நிறைவேற்றவே இதனை தொடர்கிறோம். நான் இதற்கு தலைவன் இல்லை. என்றைக்குமே என் தலைவனுக்கு (பிரபாகரன்) நான் தம்பிதான். கட்சி தொடங்குவதற்கு நாங்கள் பணக்காரர்கள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் தமிழ் என்ற இனக்காரர்களாக இருக்கிறோம்.

இதனை செய்ய தமிழன் என்ற தகுதி இருக்கிறது அதனைத்தவிர உண்மையும் நேர்மையும் மக்களுக்காக களமாற்றும் துணிவும் இருக்கிறது. தமிழுக்காக ஒரு கட்சி தமிழனுக்கு தமிழன் ஆட்சி.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற உயர்ந்த நோக்கத்தில்தான் தொடங்கியுள்ளோம். ஈழ விடுதலைக்காக மட்டுமல்ல தமிழன் எங்கு வாழ்ந்தாலும் போராடும் கட்சியாக இருக்கும.

7கோடி தமிழர்கள் வாழும் தேசம் அருகில் நம் கண்முன்னே தாய்நிலம் தரிசாக்கப்பட்டு கிடக்கிறது. இதன் காரணம் என்ன? 1 கோடி சிங்களன் சிங்களனாக இருக்கிறான் 7 கோடி தமிழன் தமிழனாக இல்லை. சாதி தமிழனாக, மத தமிழனாக பிரிந்து கிடக்கிறான். என் இனம் கண்முண்ணே செத்துக்கொண்டிருக்கும்போது என் இனத்தின் எதிரியாக ஜெயலலிதாவும், துரோகியாக கருணாநிதியும் இருக்கிறார்கள்.

ராஜிவ்காந்தி கொலையை மட்டுமே காரணம் சொல்கிறீர்களே, இந்திய ராணுவத்தால் 12000 தமிழ் உயிர்கள் போனதற்கு என்ன சொல்கிறீர்கள்? ஒரு மரணத்திற்கு ஒரு இனத்தின் மரணம் சமமா?

சிங்களனுக்கும் தமிழனுக்கும் மட்டும் யுத்தம் நடந்திருந்தால் ஒரு சிங்களன்கூட உயிரோடு இருந்திருக்கமாட்டான். ஏன் போருக்கே வந்திருக்க மாட்டார்கள். 20 வல்லாதிக்க நாடுகளின் துணையோடுதானே வீழ்த்தினீர்கள்? அப்படியென்றால் உலகத்திலேயே சர்வ வல்லமை படைத்த ராணுவத்தை என் தலைவன் பிரபாகரன்தான் வைத்திருந்தான். தமிழர்களின் விடுதலை போராட்டம் முடிந்தது என்று நினைப்பவர்களே, தமிழ் இனம் இன்னுமும் இத்துப்போகவில்லை செத்து போகவில்லை என்பதை பார் (கூட்டத்தை சுட்டி காட்டுகிறார்) ரத்தம் சிந்தாத யுத்தத்திற்கு நாங்கள் தயாராகிவிட்டோம். உலகத்தில் கடைசி தமிழன் இருக்கும்வரை தமிழின போராட்டம் நிற்காது.

seeman02.jpg

கொஞ்சம் ரத்தம் தாருங்கள் நிறைய சுதந்திரம் தருகிறேன் என்றான் சுபாஷ்சந்திரபோஸ். நாங்கள் நிறைய ரத்தம் சிந்திவிட்டோம் கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள் என்றுதானே கேட்கிறோம். இந்திய தேசம் தமிழனுக்கு ஒரு நன்மையும் செய்துவிடவில்லை. ஒரு கோடி தீமைகள்தான் தந்திருக்கின்றது. ஆட்சி அதிகாரத்தை அடைய அந்த அதிகாரத்தை கருணாநிதியிடமிருந்து பறிக்கும்வரை தமிழர்கள் ஓயக்கூடாது.

பணத்தை நம்பி இந்த இயக்கத்தை தொடங்கவில்லை. இனத்தை நம்பி தொடங்கியுள்ளேன். இனம் சேர்த்தால் பணம் சேரும். உங்கள் முன்னே நிற்கும் சீமான் தலைவன் இல்லை. மூத்தவர்களுக்கு தம்பி; இளைஞர்களுக்கு அண்ணன். என் வருமானத்தை விட்டுவிட்டு இந்த வேலைக்கு வந்தது என் இனமானத்தை காக்க. வீட்டுக்கு வீடு ஒரு போராளியை பெற்றெடுப்போம். பிறகு வீட்டை வென்றெடுப்போம். பிறகு நாட்டை வென்றெடுப்போம். அரசியல் சாக்கடை என்று நினைத்து கற்றவர்கள் ஒதுங்குவதால்தான். கயவ்ர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். எனவே அரசியல் அவசியமாகிறது. எனவே இனி அறிவாயுதம் ஏந்தி அரசியல் களம் காண்போம். தி.மு.கவின் எதிரி அதிமுக அல்ல;அதிமுகவின் எதிரி தி.மு.க அல்ல. இந்த இரு கட்சிகளுக்குமே எதிர் கட்சி நாம் தமிழர் கட்சிதான். சந்தர்ப்பம் வரும்போது நாம் தமிழர் கட்சி தேர்தல் களம் காணும்." என்றார்.

Tamilcinema.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.