Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இசையால் நோயினைக் குணப்படுத்தலாம்: ஈழத்தமிழ் ஆய்வாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசையால் நோயினைக் குணப்படுத்தலாம்: ஈழத்தமிழ் ஆய்வாளர்

[ புதன்கிழமை, 02 யூன் 2010, 07:05 GMT ] [புதினப்பலகைக்காக தமிழில் தி.வண்ணமதி ]

உளவளம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உளம்சார் நோய்களுக்கு உட்பட்டவர்களைக் குணமாக்கும் அல்லது இந்த நோய் வராமல் தடுக்கும் ஒரு கருவியாக இசையினைப் பயன்படுத்தமுடியும் என யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆய்வாளர் கூறியுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தியாளர் விபுல் சிவகுமாரன் எழுதியுள்ள செய்திக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"உளவளம் பாதிக்கப்பட்டவர்களைக் குணமாக்குவதற்கு அல்லது இந்த நோய் வராமல் தடுப்பதற்கு இசை உதவும் என்பதற்கான அறிவியல்' ரீதியான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையின் மூத்த விரிவுரியாளர் கலாநிதி எஸ்.தர்சனன் தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயினை இசையால் குணமாக்கும் ஒருவராகவும் இவர் செயலாற்றி வருகிறார்.

இசையின் மீது கொண்ட அதீத காதலின் காரணமாக சிறிலங்காவிலிருந்து தென்னிந்தியாவிற்குப் பயணம்செய்த தர்சனன் தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவாயூரிலுள்ள அரச இசைக்கல்லூரியில் இசை தொடர்பான ஆய்வில் ஈடுட்டிருந்தார்.

'குரலிசை அல்லது வாய்ப்பாட்டின் நோயினைக் குணமாக்கும் தன்மை' என்ற தலைப்பிலமைந்த இவரது ஆய்வுக்கட்டுரைக்காக, தென்னிந்தியாவின் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து தர்சனன் கடந்தமாதம் கலாநிதிப் பட்டத்தினைப் பெற்றிருந்தார். இசைத்துறையில் பாராதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கிய முதலாவது கலாநிதிப் பட்டம் [PhD in music] இதுதான்.

'இவர் பாராட்டத்தக்கதொரு பணியினைச் செய்திருக்கிறார். வாய்மூலப் பரீட்சையிலும் இவர் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றிருக்கிறார்' என திருவாயூர் அரச இசைக் கல்லூரியின் முதல்வர் கலாநிதி உமாமகேஸ்வரி இந்து பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.

தர்சனனது கலாநிதிப் பட்டத்திற்கான இறுதி வாய்மூலத் தேர்வினை நடாத்திய இசை வல்லுநர்களில் திருவாயூர் அரச இசைக் கல்லூரியின் முதல்வர் கலாநிதி உமாமகேஸ்வரி மற்றும் தென்னிந்தியாவின் தமிழ் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஈ. அங்கயற்கண்ணி ஆகியோரும் அடங்குகிறார்கள்.

'எமது இசைக்கல்லூரியினால் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது கலாநிதிப்பட்டமாக இது அமைவதையிட்டு நாம் மகிழ்வடைகிறோம்' என உமா மகேஸ்வரி கூறுகிறார்.

இசைத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்ற தர்சனனுடன் உரையாடியபோது, உண்மையான இசைக் கலைஞனுக்கு -கர்நாடக சங்கீதம்- சமூகத்தில் மதிப்பளிக்கப்படுவதில்லை. ஆனால் நடிகர்களையும் பாடகர்களையுமே இந்தச் சமூகம் மதிக்கிறது என்கிறார்.

'இசையினையும் நாம் பயனுள்ள ஒன்றாக மாற்றலாம் என்பதை நான் மக்களுக்கு நிரூபிக்க விரும்பினேன். ஆதலினால் நோயினைக் குணமாக்குவதில் இசையின் பங்கு தொடர்பாக ஆராய்ச்சி செய்து கலாநிதிப் பட்டம் பெறாமல் நான் சிறிலங்காவிற்குத் திரும்புவதில்லை என்ற உறுதியெடுத்திருந்தேன். எனது இந்த அவா இப்போது நிறைவேறிவிட்டது' என்கிறார் தர்சனன்.

'இசையின் நோயினைக் குணமாக்கும் திறன் முதலில் ஸ்கண்டிநேவிய நாடுகளிலேயே நிரூபிக்கப்பட்டிருந்தது. குறித்ததொரு பிரச்சினையின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு நாம் இசையினைப் பயன்படுத்தலாம். நோயினைக் குணமாக்கும் தன்மை கொண்ட இராகங்களில் 'சுத்த தன்யாசி' இராகம் முதன்மையானது.

இலண்டனிலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இசையினைப் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்திய தர்சனனுக்கு சிறந்த பலன் கிடைத்தது.

உளநலப் பாதிப்படைந்தவர்களையும் உளநோய்க்கு ஆளானவர்களையும் தனித்தானியாகத் தேர்ந்தெடுத்து பொருத்தமான இசையினைப் பயன்படுத்துவதன் ஊடாக அவர்களது நோயினைக் குணப்படுத்தலாம் அல்லது குறித்த ஒருவருக்கு இந்த நோய் வராமல் தடுக்கலாம் என்பதை தர்சனனது கண்டறிதல்கள் உறுதிப்படுத்துகின்றன.

'நான் ஒரு மருத்துவனாகவோ அல்லது பொறியியலாளராகவோதான் வரவேண்டும் என விரும்பிய எனது பெற்றோரின் எண்ணத்திற்கு மாறாக கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் நான் இசையினைப் பிரதான பாடமாகத் தேர்ந்தெடுத்தேன்' என்றார் அவர்.

இதன் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வான தர்சனன் தனது முதலாவது பட்டத்தினைப் பெற்றார். 'முதல்தர மாணவனாக நான் தேர்வாகியிருந்தேன். பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இசை மற்றும் இசைத் தத்துவவியலில் முதுமானிப் பட்டத்தினைப் பெற்றிருந்தேன்' என்றார் அவர்.

http://www.puthinappalakai.com/view.php?20100602101230

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.