Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்கக்கூடியவரா???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் வணக்கமெங்க!!!

என்ன கனகாலத்திற்கு பிறகு இந்த ஆள் இந்தப்பக்கம் வந்திருக்கென்று நீங்க ஏளனமாக பார்க்கிறது எனக்கு புரியாமலில்லை பாருங்போ, இருந்தாலும் என்ன பண்றது எனக்கென்றும் ஒரு குடும்பம், அலுவல்கள் இருக்கத்தானே செய்யுமெங்க…..

சரி உதெல்லாத்தையும் விட்டிட்டு சொல்ல வந்த விடயத்திற்கு வருவம் பாருங்கோ,

உலகத்திலை எல்லோருக்கும் புரிந்த மொழி இசை, அதுமட்டுமன்றி உலகத்திலை எல்லோரையும் தன்வசமாக இழுத்து வைத்திருப்பதும் இசைதான் பாருங்கோ.

இப்படிப்பட்ட இந்த இசை இன்று பல நாடுகளிலை மருத்துவமாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்பதை அறிந்திருப்போம்..

maestrodesign1.jpg

இவ்வளவு சக்திகொண்ட இந்த இசைபற்றிய சிந்தனை எனக்கு வந்ததும் என்கண் முன் தோன்றுகின்றவர் டானியல் இராசையா என்ற இயற்பெயரைக்கொண்ட இசைஞானி இளையராஜா அவர்கள் தான்.

இன்று எத்தனையோ இசையமைப்பாளர்கள் எங்கள் கண்முன் தோன்றி எத்னையாயிரம், ஆயிரம் பாடல்கள் எங்கள் காதுகளில் விழுந்திருந்தும் இசைஞானியின் பாடல்கள் மட்டும் விழுந்த காதுகளில் இருந்து வெளிவந்ததாக சரித்திரமே இல்லை.

1943 ஆனி 2ம் திகதி தேனி மாவட்டத்திலே பிறந்த இவரின் கலைப்பயணம் தனது பதின்நான்காவது வயதில் பாவலர் வரதராஜனின் இசைக்குழுவிலே சேர்ந்து, தென்னிந்தியா முழுவதும் இசைக்கச்சேரிகள் செய்வதிலேயே பொழுதைக் களித்தார். பின்னர் 70 களில் சென்னைக்கு சென்று அங்கும் ஓர் இசைக்குழுவில் பகுதி நேரமாக வேலை செய்த போதே சித்தார், ஆர்மோனியம் போன்றவாத்தியங்களை திரைஇசைப்பாடல்களில் வாசித்து வந்தார்.

இந்த காலகட்டத்தில் தான் இவருக்கு 1976இல் “அன்னக்கிளி” படத்துக்காக பஞ்சு அருணாச்சலத்தினால் இவர் அறிமுகம் செய்யப்பட்டார். தனது நாற்பது வருடத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பயணத்தில் சுமார் ஆயிரம் படங்களுக்கு மேலாகவும் குறைந்தது ஐயாயிரம் பாடல்களுக்கு மேலாகவும் தமிழ், மலையாளம், கன்னடம், தெழுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் இவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டதாகும்.

இவர் இலண்டன் ரிடினி இசைக் கல்லூரியில் சித்தார் இசைக்கருவியில் டிப்ளோமா படிப்பை முடித்தவர் மட்டும் அல்லாது அதில் தங்கப்பதக்கமும் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர்.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் இசையால் பெருமை தேடித்தந்த பெருமைக்குரியவரின் பாடல்களுக்கு தொடர்ந்தும் எங்களால் கொடுக்கப்படும் மதிப்பிற்கு தகுந்தமாதிரி இசைஞானியை கௌரவிக்கின்றோமா என்றால் இல்லை என்றே தென்படுகின்றது.

இவரை நாம் தமிழர் என்றமுறையில் கௌரவிக்குமுகமாக இவரைப்பற்றி எங்களுக்கு தெரிந்த தகவல்களை பரிமாறி, அறிந்திராத விடயங்களை வெளிக்கொணர்வோம்.

நன்றி,

மு.லிங்கம்

யூன்12, 2010

Edited by வல்வை லிங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை அண்ணா,

இவர் உண்மையிலே ஒரு இசைஞானி தான்.

ஆனாலும் இவர் ஒரு தமிழ்ஞானியாக இல்லாததால் இவரின் புகழ் பாட ஈழத்தமிழர் விரும்பவில்லை.

வாத்தியார்

..........................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.