Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‐புனர்வாழ்வு திட்டங்களுக்காக குமரன் பத்மநாதன் நிதி திரட்டி வருகின்றார் என்கிறது இலங்கை அரசாங்கம்‐

Featured Replies

‐புனர்வாழ்வு திட்டங்களுக்காக குமரன் பத்மநாதன் நிதி திரட்டி வருகின்றார் என்கிறது இலங்கை அரசாங்கம்‐

27 துரநெ 10 01:49 யஅ (டீளுவு)

வடக்கு கிழக்கு புனர்வாழ்வு திட்டங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குமரன் பத்மநாதனினால் நிதி திரட்டும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று நேற்று மலேசியாவில் நடைபெற்றுள்ளது என இலங்கை அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான மலேசிய வாழ் இலங்கைப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கை நேரப்படி மாலை 4.30 அளவில் இந்த நிதி திரட்டும் கலாச்சார நிகழ்வு நடைபெற்றதாக மலேசியாவிற்கான இலங்கைத் தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச புலம்பெயர் தமிழர்கள் பிளவடைந்திருப்பதாகவும், ஒரு பகுதியினர் குமரன் பத்மநாதனுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கூறிவருகிறது.

குமரன் பத்மநாதனுக்கு விசுவாசமாக செயற்பட்டு வரும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர் எனவும் அரசாங்க ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

மீள் குடியேற்றம்இ புனரமைப்பு, புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு, காயமடைந்த படைவீரர் நலத்திட்டம் போன்றவற்றுக்கான திரட்டப்படும் நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறான நிதி திரட்டும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட பெரும்பான்மையான வர்த்தகர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கையின் அரச சார்பு ஊடகங்கள் கூறுகின்றன.

மலேசியாவின் மக்ஸீஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் உரிமையாளர் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக 35 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளதாக அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட குமரன் பத்மநாதனை வடக்கு புனர்வாழ்வு திட்டங்களில் பங்குபடுத்தி வருகின்றமை தொடர்பில் சில அரசியல் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமது எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

குமரன் பத்மநாதனுடன் மட்டும் புனர்வாழ்வு திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்இ ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளை உதாசீனம் செய்து வருவதாகவும் அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net

Edited by kalaivani

தமிழின படுகொலையாளர் கைகளுக்கு புலம்பெயர் தமிழரின் நிதிகள் போவதை இறுக்கமாக கட்டுப்படுத்த வேண்டும். இது இக்கட்டான இக்காலத்தின் தேவையாக உள்ளது.

சதி வலையில் வீழ்ந்த KP, சிங்கள பயங்கரவாதிகளின் கைதிகளாக இருக்கும் நிலையில், அந்தாளின் வேண்டுகோள்களின் பின்னணிகளை அறிந்து, அனைவரும் புத்திசாலித் தனத்துடன் விலகியிருப்பது தான் அனைவருக்கும் நல்லது.

மீளமுடியாத சிக்கல்களில் உங்களை நீங்களே மாட்டிவிட வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக நிகழ்ச்சிகள் மண்டப செலவுகள் விளையாட்டுப்போட்டிகள் என்று........... செலவுக்கு கேட்கும்போது

குறைந்தது ஆயிரம்ஈரோக்கள் கொடுக்கும் ஒரு நிறுவனம்

இந்தமுறை பல கேள்விகளுக்கும் வேண்டுகோளுக்கும்பின் 50 ஈரோக்களைக்கொடுக்க சம்மதித்துள்ளது

இதுதான் இன்றைய பிரான்சின் நிலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.