Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருத்த முடியாத இடத்தில் திருவள்ளுவர் பிறந்த தமிழக சின்னத்திரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருத்த முடியாத இடத்தில் திருவள்ளுவர் பிறந்த தமிழக சின்னத்திரை

July 22, 2010

ஒரு சில பெண்கள் தம்மைத்தாமே கதாநாயகிகளாக கருதிய காலம் போய் வில்லிகளாக கருதும் காலத்திற்குள் நுழைய காரணமாகியிருக்கிறது சின்னத்திரை.

அதிகமான பெண்களை வில்லிகளாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும், பழி வாங்குவோரகவும் காண்பித்து வரும் சின்னத்திரை பெரும் சமுதாய சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. புலம் பெயர் நாடுகளிலும் பெரும் ஒழுக்கக்கேட்டுக்கும் சமுதாய பேரவலத்திற்கும் இந்த தொடர் நாடகங்களே முக்கிய காரணமாக இருப்பதாக பலர் அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகிறார்கள். ஆனால் தமிழக தொலைக்காட்சிகளின் குப்பைகள் தடுக்க முடியாதவாறு புலம் பெயர் வீடுகளில் தொலைக்காட்சி வழியாக கொட்டுப்படுகிறது. சின்னத்திரையால் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு சீரழிவுச் செய்தியை தினமலர் வெளியிட்டுள்ளது. அச்செய்தி வருமாறு.

சென்னை சிறுவன், தந்தையின் கள்ளக் காதலியால் கொல்லப்பட்டு சூட்கேசில் வைத்து நாகப்பட்டினத்தில் வீசப்பட்ட சம்பவத்தில், தன்னை ஏமாற்றிக் கொண்டிருப்பவனை பழிவாங்கும் நோக்கில், சினிமா பாணியில் பூவரசி தனது எண்ணத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

பழிவாங்கும் குணம் எல்லார் மத்தியிலும் இருந்தாலும், அனைவருக்கும் பழிதீர்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி சந்தர்ப்பம் அமைந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாக, பூவரசி என்பவர் தன்னை ஏமாற்றி வந்த காதலனின் மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.இதற்கு அப்பெண்ணின் பழிவாங்கும் குணம் ஒரு காரணமென்றாலும், தற்போது அன்றாடம் “டிவி’க்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நெடுந்தொடர்கள் மற்றும் சில சினிமாக்களும் காரணமாக அமைந்துள்ளன. அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நெடுந்தொடர்கள் பெண்களை வில்லிகளாகவும், கொடூரமான குணம் படைத்தவர்களாகவும், ஒழுக்கக் கேடான உறவு முறைகளையும், கலாசார சீரழிவுகளையுமே முதன்மைப்படுத்தி காட்டி வருகின்றன.

எம்.எஸ்சி., பட்டதாரியான பூவரசி, ராணிப்பேட்டை அருகில் உள்ள திருவலம் கிராமத்தைச் சேர்ந்தவர். சிறு வயது முதலே மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்துள்ளார். பள்ளிப் படிப்பு முடித்து ஆற்காட்டில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்சி., படித்து முடித்த நிலையில், ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போது பெங்களூரைச் சேர்ந்தவரிடம் தனது மனதை பறிகொடுத்துள்ளார்.இந்த விவகாரத்தில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு கடந்த 2006ம் ஆண்டில் சென்னை வந்தார். சென்னையில் வந்து விடுதியில் தங்கியிருந்து வேலை தேடி வந்த நிலையில், எச்.டி.எப்.சி., வங்கியில் வேலை கிடைத்துள்ளது.அப்போது தான், அங்கு மேலதிகாரியாக இருந்த ஜெயக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் மெல்ல காதலாக மாறிய நிலையில், ஜெயக்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் தகவல் தெரியவந்துள்ளது.இருந்தாலும் தனது காதலை பூவரசி விடவில்லை. இதற்கு காரணம் ஜெயக்குமார் திருமணம் செய்து கொள்வதாக கூறிய வாக்குறுதி தான் என கூறப்படுகிறது. இருவரும் நெருங்கிப் பழகியதில் கர்ப்பமடைந்தார் பூவரசி.ஒரு முறை கருவை கலைக்கச் சொன்ன ஜெயக்குமார், மறுமுறை பூவரசி கர்ப்பமடைந்த போதும் கலைக்குமாறு கூறியுள்ளார். அப்போது தான் ஜெயக்குமாரின் உண்மையான குணம் பூவரசிக்கு தெரிந்தது. இருந்தாலும் தன்னை ஏமாற்ற மாட்டார் என முழுமையாக நம்பியுள்ளார். ஜெயக்குமார் தன் குடும்பத்துடன் நிம்மதி, சந்தோஷத்துடன் வாழ்வதற்காக தனது குழந்தையை கொல்லச் செய்துவிட்டாரே என்ற எண்ணம் அவரின் மனதுக்குள் அடிக்கடி சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தான் பணியாற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பூவரசிக்கு வேலை போட்டுக் கொடுத்த ஜெயக்குமார், தொடர்ந்து தனது உடல் இச்சைக்கு மட்டும் பூவரசியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. திருமண ஆசை காட்டியதை அடுத்து, பூவரசியும் இதற்கு ஒத்துழைத்துள்ளார். சமீபத்தில் திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரை, பூவரசி வற்புறுத்திய நிலையில், ஜெயக்குமார், பூவரசியை தனது நிறுவனத்தின் மதுரை கிளைக்கு மாற்றினார். தன்னை திருமணம் செய்யாததுடன், வேறு ஊருக்கும் மாற்றி விட்டாரே என்ற எண்ணம் முழு பகையாகவும், பழிதீர்க்கும் எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.விளைவு, சம்பவத்தன்று தனது மகனை அலுவலகத்திற்கு அழைத்துவந்த ஜெயக்குமாரிடம், அவனை வெளியில் கூட்டிச் செல்வதாக கூறி தனது விடுதி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, ஆதித்யாவுக்கு குளிர்பானம், வடை ஆகியவற்றை வாங்கித் தந்து அவனுடன் சிறிது நேரம் விளையாடிய நிலையில், பூவரசிக்கு பழிவாங்கும் எண்ணம் தலைதூக்கியுள்ளது.

“ஆன்ட்டி…ஆன்ட்டி’ என்று செல்லமாக அழைத்த ஆதித்யாவின் கழுத்தை கயிற்றால் இறுக்கியுள்ளார். ஆதித்யா இறந்துவிட்ட நிலையில், பழி வெறி மேலோங்க அவன் தலையில் கறுப்பு பிளாஸ்டிக் பையை மாட்டி அதன் மேல், நயிலான் கயிற்றை வைத்து மேலும் இறுக்கியுள்ளார்.பின், தன்னிடம் இருந்த பழைய சூட்கேசில் உடலை வைத்துள்ளார். அன்று பிற்பகல் சர்ச்சில் சென்று பாவமன்னிப்பு கேட்ட நிலையில் மனக்குழப்பம், இப்படி அவசரப்பட்டுவிட்டோமே என்ற பயத்தில் மயங்கி விழுந்தார்.இருந்தாலும், போலீஸ் விசாரணையில் ஒன்றுமே அறியாதது போல நடித்துள்ளார். அப்போதுதான் அவருக்கும், ஜெயக்குமாருக்கும் உள்ள கள்ளத் தொடர்பு குறித்த “க்ளூ’ போலீசிற்கு கிடைத்துள்ளது. அது தான் போலீசின் சந்தேகத்திற்கும் வழி வகுத்துள்ளது.

அப்போதே போலீசுக்கு சந்தேகம் தோன்றினாலும், பூவரசி உடல் நிலை சரியில்லாதது போல் நடித்து ஏமாற் றியுள்ளார். மறுநாள் கிடைத்த சந்தர்ப் பத்தை பயன்படுத்தி, சினிமாவில் வருவது போன்று பலரையும் ஏமாற்றி, சிறுவனின் உடலை பஸ்சில் வைத்து நாகை அனுப்பியுள்ளார். பழிவாங்கும் உணர்ச்சியால் தான் அப்படி செய்துவிட்டதாக கூறும் பூவரசி, இந்த விஷயத்தில் ஜெயக் குமாரையும் மாட்டிவிட முயற்சி எடுத்துள்ளார்; ஆனால் முடிய வில்லை. போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தியதில் உண்மை வெளிவந்துள்ளது. மனதிற்குள் வஞ்சம் இருந்தாலும், அடிக்கடி ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றுள்ள பூவரசி, இது குறித்து அவர் மனைவி ஆனந்தியிடம் வெளிக்காட்டவில்லை என கூறப்படுகிறது.சமீபத்தில், சென்னை அடுத்த புழல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவன் தன்னை விட்டு வேறு பெண்களிடம் பழகுவதையும், தனது அழகை விமர்சிப்பதையும் பொறுக்க முடியாமல் அவன் மீது நள்ளிரவில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார். அதே போன்று, பல்லாவரத்தில் மற்றொரு பெண், தன்னை அடிக்கடி குடித்துவிட்டு வந்து துன்புறுத்தி வந்த கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

பழிவாங்கும் உணர்ச்சி பெண்களுக்கு இயல்பா?ஒருவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதற்கு உளவியல் ரீதியான பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆண்களால் பாதிக்கப்படும் பெண்கள் பெரும் பாலும் வெறுப்பு, விரக்தியின் உச்சத்திற்கு செல்லும் போது பழிவாங்கும் உணர்ச்சிக்கு ஆட்படுகின்றனர்.

இதுகுறித்து மனோதத்துவ டாக்டர் ஷாலினி கூறும் போது,”"பழி வாங்கும் உணர்ச்சிக்கு பாலின பாகு பாடு கிடையாது. மனரீதியாக பாதிக் கப்படும் போது அந்த எண்ணம் மேலோங்குகிறது. சமூக விரோத போக்குகள் இதற்கு மூலகாரணமாக இருக்கிறது. பொதுவாக பெண்களிடத்தில் பழிவாங்கும் உணர்ச்சி இருப்பதை மக்கள் அறிவதில்லை. மனச் சிதைவு ஏற்படும் போது புத்தி சரியாக வேலை செய்யாத நிலையில் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன, ” என்றார்.

மனநல ஆலோசகர் பிரபாகரன்: ஆண்களுக்கு தான் அதிகமாக பழிவாங்கும் உணர்ச்சி இருப்பதாக கருத்து இருந்தது. கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பெண்களுக்கு அந்த உணர்ச்சி மேலோங்கியுள்ளது. முன்பெல்லாம் பெண்கள் கலாசாரம் என்ற வளையத்திற்குள் கட்டுப்பட் டிருந்தனர். இப்போது நிலைமை மாறி விட்டது.பெண்கள் எப்போதும் திட்டமிட்டு எதையும் செய்வதில்லை. தான் நிராகரிக்கப்படுகிறோம் என்ற எண்ணம் மேலோங்கும் நேரத்தில் உடனடியாக இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் பெண்களுக்கு அன்பு கிடைக்காமல் இருக்கும் போதும், உரிமை மீது பாதிப்பு ஏற்படும் போதும் இம்மாதிரி பழிவாங்கும் எண்ணம் அதிகரிக்கும்.அன்பு கொண்டவர் தன்னை கொடூரமாக நிராகரிக்கும் போது, பெண்களுக்கு உடனடியாக பழி வாங்கும் எண்ணம் ஏற்பட்டுவிடும்.

http://www.alaikal.com/news/?p=43128

  • 1 month later...

அதிகமான பெண்களை வில்லிகளாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும், பழி வாங்குவோரகவும் காண்பித்து வரும் சின்னத்திரை பெரும் சமுதாய சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. புலம் பெயர் நாடுகளிலும் பெரும் ஒழுக்கக்கேட்டுக்கும் சமுதாய பேரவலத்திற்கும் இந்த தொடர் நாடகங்களே முக்கிய காரணமாக இருப்பதாக பலர் அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகிறார்கள். ஆனால் தமிழக தொலைக்காட்சிகளின் குப்பைகள் தடுக்க முடியாதவாறு புலம் பெயர் வீடுகளில் தொலைக்காட்சி வழியாக கொட்டுப்படுகிறது.

தமிழகத் தொலைக்காட்சித் தொடர்கள் கொட்டும் குப்பைகள், தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் சீரழிவை ஏற்படுத்தவல்லவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.