Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீர்: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 500 பேரைக் காணவில்லை(காணொளி காட்சிகளுடன்)

Featured Replies

காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் பெய்த பேய் மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு 150-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள மாசு என்ற இடத்தில் பலத்த மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டது.

அந்த பகுதியில் மாச்சேல் மாதா என்ற கோவில் உள்ளது. அங்கு சென்ற 8 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர். அதில் ஒருவர் பலியானார். 7 பேர் காயம் அடைந்தனர்.

காஷ்மீரில் பெய்த பலத்த மழையில் பலியானோரின் எண்ணிக்கை 150ஐ தாண்டிய நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் உட்பட 500 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. காஷ்மீரில் கடந்த 5ம் தேதி சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

வீடுகள் மண்ணில் புதைந்து லே மாவட்டம் முற்றிலும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. மழைக்கு இதுவரை 150 பேர் பலியாகி உள்ளனர். பலர் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணியில் பல்வேறு பாதுகாப்புப் படையினர் உள்ளூர் மக்கள் ஈடுபட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இடிபாடுகளில் சிக்கியிருந்த சிலரை மட்டும் மீட்டனர்.

எனினும், காஷ்மீருக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டினர் 2 பேர் உட்பட 500 பேரை காணவில்லை. அவர்களும் மண்ணில் புதைந்து அல்லது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்குள் யாராவது உயிரோடு சிக்கி இருக்கிறார்களா என்று அறிய மோப்ப நாய்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.

புல்டோசர்கள், ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, டென்ட், கம்பளி, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விமானப் படை வீரர்கள், விமானத்தில் பறந்து சென்று ஆங்காங்கே போட்டு வருகின்றனர். ஸ்ரீநகர் & கார்கில், கார்கில் & லே பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் இந்தோ&திபெத் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கரைந்தது மாடல் கிராமம்

லே மாவட்டத்தில் கடந்த 5ம் தேதி இரவு ‘கிளவுட் பர்ஸ்ட்’ எனப்படும் பனிக்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. லே மாவட்டத்தில் வீடுகள் மண்ணில் கட்டப்பட்டவை. அவை யாவும் மழை வெள்ளத்தில் கரைந்து வீடுகள் புதைந்தன. சில கிராமங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. அவற்றில் ஒன்றுதான் சபூ கிராமம். அந்த கிராமம் இருந்த இடம் இப்போது சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

ஜம்மு&காஷ்மீரில் ‘பிரதமர் மறுசீரமைப்பு திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதற்காக சில கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. லே மாவட்டத்தில் சபூ கிராமத்தை தேர்ந்தெடுத்தனர். இந்த கிராமத்துக்கு சாலை வசதிகள், முறையான குடிநீர் சப்ளை, மின்சார வசதி, சுகாதார திட்டங்கள் செயப்படுத்தப்பட்டன. ஆனால், 5ம் தேதி இரவும், 6ம் தேதியும் பெய்த பனிக்கட்டி மழையில் சபூ கிராமமே தரைமட்டமானது. கிராமம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விட்டது.

ஆங்காங்கே இடிபாடுகளில் வாகனங்கள் நசுங்கி கிடக்கின்றன. எங்கு பார்த்தாலும் கற்குவியல்களே காணப்படுகின்றன. இதுவரை சபூ கிராமத்தில் 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேரடி காணொளி காட்சிகள்:

http://www.youtube.com/watch?v=a96q2kDP4v0&feature=player_embedded#!

http://www.youtube.com/watch?v=LGafsl4n7qM&feature=player_embedded

நன்றி:

http://www.thedipaar.com/news/news.php?id=16922

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.