Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதியின் ‘அற’வழியும் மார்க்சிஸ்ட்டுகளின் அசட்டு வழியும் !!

Featured Replies

தானைத்தலைவர், தமிழ்த்தாயின் தலைமகன், முன்னவர், மூத்தவர், முதல்வர் டாக்டர் கலைஞர் மார்க்சிஸ்டுகள் மீது வெறுப்பையும் சத்துணவு ஊழியர்கள் மீது நெருப்பையும் கக்கியிருக்கிறார். பணி நிரந்தரம் கோரி சத்துணவு ஊழியர்கள் அறிவித்த கோட்டை முற்றுகைப் போராட்டம்தான் அவரது வெறுப்புக்கு காரணம்.

“கம்யூனிஸ்டுகள் நடத்தும் கிளர்ச்சி எதுவாயினும் அதற்கு ஒரு போர்க்கள முத்திரையை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள். பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள். அதற்கடுத்து மறியல் என்பார்கள். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகை என்பார்கள்… அவர்கள் வைத்த கொள்ளிதான் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதல், அராஜகம், உயிர்ப்பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரிகிற காட்சியைப் பார்க்கிறோம்…”

“அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக போர்முனைக்கு வாருங்கள் என்று திமுகவோ, திகவோ ஒரு போதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தினாலும் அதற்கான கிளர்ச்சியை அமைதியான முறையில் அறவழியில் நடத்தி பழக்கப்பட்டவர்கள் நாங்கள்” என்று சொல்லியிருக்கிறார் கலைஞர்.

தட்டிக் கேட்க ஆளில்லைன்னா அண்ணன் சண்டப்பிரசண்டன்தான். அறவழி தவிர “பிறவழி” எதுவுமே தெரியாத தலைவரின் வாரிசுக்கு எதற்கு தளபதி பட்டம்? எதற்கு இந்த போர்க்கள முத்திரை? எந்த தலையானங்கனத்தின் செறுவென்ற செழியன் அவர்?

திக வுல இருக்கும் போது அண்ணாத்துரைக்கு பேரும் தளபதி அண்ணாதான். “உங்க தளபதி எங்கய்யா படை நடத்துறாரு?” ன்னு எம்.ஆர்.ராதா அன்று கேலி செய்தார். திக விலிருந்து விலகி திமுக ஆரம்பிச்சதும் “தளபதி” அப்டியே “அறிஞர்” ஆயிட்டாரு. நாளைக்கு ஸ்டாலின் முதல்வர் ஆனதும் அடுத்த தளபதி உதயநிதியாக இருக்கும்.

போராட்டத்துக்கு போர்க்கள முத்திரை குத்துகிறார்களாம் கம்யூனிஸ்டுகள்! அதுவாவது பரவாயில்லை. மத்தியான சாப்பாட்டுக்கப்புறம் 3 மணி நேரம் தூங்கி, வீங்கின மூஞ்சிக்கு ரோஸ் பவுடர் போட்டு, மீசைக்கு மை தடவி, ராத்திரி பொதுக்கூட்டத்துல வந்து வாய்ச்சிலம்பம் ஆடுற அண்ணன், தம்பியெல்லாம், தம் பேருக்கு முன்னால தளபதி, பிரிகேடியர், அவில்தார், சுபேதார்னு எதுனா ஒரு போர்க்கள முத்திரையை குத்திக்கொண்டு திரிகிறார்களே, அறவழி அண்ணன் அதுக்கென்ன சொல்கிறார்?

தம்பி பேரு தளபதியாம் அண்ணன் அஞ்சாநெஞ்சனாம். ஆனா அவுக வழி மட்டும் அறவழியாம். அஞ்சாநெஞ்சன் மதுரையில நடத்தற கட்டப்பஞ்சாயத்தெல்லாம் அறவழியில்தான் நடக்கிறதோ?

திமுகவுக்கு அறவழியத் தவிர “பிறவழி” எதுவும் தெரியாதாம். உடன்பிறப்புகளின் அறவழிப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் இதயம் வெடித்துத்தான் அண்ணன் தா.கிருஷ்ணனும் லீலாவதியும் தற்கொலை செய்து கொண்டார்களோ? மதுரை தினகரன் ஆபீசில் மேயர் தலைமையில் போலீசு அதிகாரிகள் முன்னிலையில் அட்டாக் பாண்டி ஒரு போராட்டம் நடத்தினாரே, அதுவும் கூட அறவழிப் போராட்டம்தானா? அறவழிப் போராட்டத்தின் விளைவாக 3 பேர் உயிர் விட வாய்ப்பில்லை என்பதனால்தான் நீதிதேவன் எல்லோரையும் விடுதலை செய்து விட்டாரோ?

திமுக வின் உட்கட்சி தேர்தல் ஒவ்வொண்ணுலயும் கழக உடன்பிறப்புகள் கையில் தக்கிளியும் பஞ்சும் வைத்துக் கொண்டுதான் திரிகிறார்களோ? திருச்சி கிளைவ் ஆஸ்டல் தாக்குதல், சிம்சன் தொழிலாளிகள் மீதான தாக்குதல், அண்ணாமலைநகர் உதயகுமார் படுகொலையில் தொடங்கி, சமீபத்தில் செட்டிநாட்டரசருக்காக 3 வெளிமாநில மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கொலை செய்யப்பட்டது வரை அத்தனையும் அறவழிப் போராட்டங்கள்தானோ!

“சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் கேட்டு கோட்டையை முற்றுகையிடுவார்கள், நாங்கள் இவர்கள் படைக்கு முரசு கொட்டி வரவேற்பு வழங்க வேண்டுமா?” என்று கேட்கிறார் கருணாநிதி. பதவிப் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு குடும்பத்தோடு சோனியா வீட்டுக்குப் படையெடுத்தாரே தலைவர், அது முற்றுகைப் போராட்டம் இல்லையா?

சன் டிவி, கலைஞர் டிவி, கேபிள் நெட்வொர்க், சினிமா கொட்டகைகள், கலாநிதி, தயாநிதி, உதயநிதி மற்றும் பிற நிதிகளின் சினிமாக் கம்பெனிகள், சிமென்டு கம்பெனிகள், சாராயக் கம்பெனிகள், ரியல் எஸ்டேட், மந்திரி பதவிகள் என்று திருக்குவளைக் குடும்பம் தமிழகத்தையே முற்றுகையிட்டிருக்கிறதே இது முற்றுகையில்லையா?

இதெல்லாம் அற வழியாம். சத்துணவு ஊழியர்களின் போராட்டம் அறம் கொன்ற வழியாம்!

அரசுக்கு எதிராக எப்ப போராட்டம் நடத்தினாலும் அமைதியாக அறவழியில்தான் திமுக போராடுமாம். அதென்னமோ உண்மைதான். அதிகாரத்தில் அம்மா அமர்ந்திருந்த சூழ்நிலையில், அடிவாங்கும் வாய்ப்பு அதிகம் என்பதால் அந்த மாதிரி நேரத்திலெல்லாம் அண்ணன் காட்டும் வழி அறவழிதான். “தலையையே எடுப்பேன்” என்று வேதாந்தி மிரட்டினாலும், “மண்டை போனால் போகட்டும் உடன்பிறப்பே, மகுடம் முக்கியம்” என்று மவுனம் காத்தாரே கலைஞர், அப்பவும் அறவழிப் போராட்டம்தான். அவ்வளவு ஏன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதல் எந்த எடுபட்ட காங்கிரசுக்காரன் கழகத்தலைவரின் முகத்தில் காறித்துப்பினாலும் கலைஞருக்கு கோபம் வராது. அடுத்த தேர்தல் முடியும் வரைக்கும் அண்ணன் வழி அறவழிதான்.

ஆனால், சத்துணவு ஊழியர்கள், மாஞ்சோலைத் தோட்டத்தொழிலாளிகள், ஸ்ரீபெரும்புதூர் மக்கள் போன்ற இளித்தவாயர்கள் போராடும்போது மட்டும் கதை வேறு. பாராளுமன்றத்தில் பேசவே முடியாத அழகிரிக்கு முழு சம்பளம். அவர் முழுநேரப் பணியாளர். அடுப்பு ஊதும் சத்துணவுப் பணியாளருக்கு அரைச் சம்பளம், தொகுப்பூதியம். ஏனென்றால் இவர்கள் பகுதிநேரப் பணியாளர்கள்.

உலக முதலாளிகள் உடல் நோகாமல் வந்து இறங்குவதற்கு இவர்கள் இன்டர்நேசனல் ஏர்போர்ட் கட்டுவார்கள். அதற்காக உள்ளூர் தமிழர்களெல்லாம், மாடு கன்று மரம் மட்டை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பாயைச் சுருட்டிக் கொண்டு “யாதும் ஊரே யாவரும் கேளிர்”னு செம்மஞ்சேரிக்கோ கம்மஞ்சேரிக்கோ கிளம்பிவிடவேண்டும். இல்லாவிட்டால் அடித்து உரித்து விட்டு அப்புறம் அறவழியை வலியுறுத்தி இப்படி ஒரு அறிக்கை விடுவார் கருணாநிதி.

காந்தி நேரு ரேஞ்சில் விமரிசனங்களுக்கு அப்பாற்பட்ட திருவுருவமாக தமிழ்நாடே தன்னைக் கொண்டாடவேண்டும் என்பது முதியவர் கருணாநிதியின் ஆசை. அவர் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் பிம்பத்தின் மீது சத்துணவு ஊழியர் மாதிரி சாதாரண ஆட்கள் லேசாக உரசி விட்டால் போதும், உடனே “எனக்கு இன்னொரு பேரு இருக்கு” என்று பாட்சா கருணாநிதியின் குரல் அவருக்கே தெரியாமல் வெளியே வருகிறது.

பள்ளிப் பிள்ளைகளுக்கு ஒருநாள் சோறு போடத் தவறிய குற்றத்துக்காக நூறுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை தற்காலிகப் பணிநீக்கமும் செய்திருக்கிறார் கருணாநிதி. அப்பனுக்கு சாராயம் ஊற்றிக் கொடுக்கத் தவறினாலும் குற்றம், பிள்ளைக்கு சத்துணவு போடத் தவறினாலும் குற்றம்! மனுநீதிச் சோழன் அரசாட்சியா கொக்கா

இந்தப் போடு போட்ட பிறகாவது மார்க்சிஸ்டுகளுக்கு கோவம் வராதா, கருணாநிதியை நறுக்காக நாலு கேள்வி திருப்பிக் கேட்கமாட்டார்களா என்று ஆவலுடன் நேற்றைய நாளிதழைப் புரட்டினால், கருணாநிதிக்கு தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் மார்க்சிஸ்டு செயலர் இராமகிருஷ்ணன்.

மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளின் வன்முறையை எதிர்த்து மார்க்சிஸ்டு கட்சி போராடிக் கொண்டிருக்கிறதாம். மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் மம்தா பானர்ஜியை கருணாநிதி கண்டிக்கவில்லையாம். போராட்டத்தை கருணாநிதி திசை திருப்புகிறாராம். சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவேண்டுமாம். இதுதான் ராமகிருஷ்ணனின் அறிக்கை.

“முதல்வரின் கருத்து துரதிருஷ்டவசமானது. முதல்வர் இனிமேல் இத்தகைய தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கோவையில் பேசியிருக்கிறார். வலது கம்யூ தலைவர் ஏ.பி.பரதன்.

அடி வாங்கினவன் பேசுகிற பேச்சு மாதிரியா இருக்கிறது? அடடா, எப்பேர்ப்பட்ட அரசியல் நாகரிகம்! இப்படிப்பட்ட அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்கச் சொல்லித்தானே கலைஞர் கரடியாக கத்துகிறார்.

வலது, இடது கட்சிகளின் அணிகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. வாங்க வேண்டிய அடியை வாங்கியாகிவிட்டது. திருப்பி அடிக்க முடியாவிட்டாலும், நச்சென்று நாலு கேள்வியாவது திருப்பிக் கேட்டிருக்கலாம்.

அப்படி ஒரு கோபம் மார்க்சிஸ்டு தலைவர்களுக்கு வந்திருக்காது என்று சொல்ல முடியாது. நிலைமை அவர்களுடைய வாயைக் கட்டியிருக்கிறது. 80 களில் எதைக்கேட்டாலும் வங்கத்தைப் பார் என்பார்கள். இப்போது வேறு எந்தக் கட்சிக்காரனாவது வங்கத்தைப் பார் என்று பேச ஆரம்பித்தால் இவர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கிறது. மேற்கு வங்கத்தில் தொகுப்பூதியம் கொடுத்துக்கொண்டு இங்கே வந்து பணி நிரந்தரம் கேட்கிறாயா என்று மடக்குகிறார் கருணாநிதி. “சிறுதாவூர் சீமாட்டியை முதல்வராக்குவதுதான் உங்கள் நோக்கம்” என்று சீண்டுகிறார். இதுக்கெல்லாம் மார்க்சிஸ்டுகள் ஆமாம்னு சொல்லவும் முடியாது. இல்லைன்னு சொல்லவும் முடியாது. “நாங்கள் மாவோயிஸ்டுகள் அல்ல” என்பது மட்டும்தான் அவர்கள் தைரியமாகச் சொல்ல முடிந்த பதில். அதை சொல்லிவிட்டார் இராமகிருஷ்ணன்.

முன்னர் ஒருமுறை ஜனசக்தி பத்திரிகையின் ஆண்டு விழாவில் பேசிய திரைப்பட இயக்கநர் வி.சேகர், “கருணாநிதி உங்களுக்கெல்லாம் ஏன் ரெண்டு சீட் – ஒரு சீட் கொடுக்கிறார் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு ஒரு கணம் பேச்சை நிறுத்தியிருக்கிறார்.

“இந்தப் புதிருக்குத்தானய்யா விடை தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று மேடையில் இருந்த நல்லகண்ணு முதல் மார்க்சிஸ்டு தலைவர்கள் வரையிலானோர் ஆவலுடன் சேகரின் வாயைப் பாத்திருக்கின்றனர். “ஏன்னா, அரை சீட்டுன்னு ஒண்ணு இல்லை. இருந்தா அதைத்தான் உங்களுக்கு கொடுத்திருப்பார்” என்று சொல்லி சிரித்தாராம் சேகர்.

மேலும் படங்களுக்கு

http://www.thedipaar.com/news/news.php?id=17881

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.