Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய மந்திரிகளின் சொத்துக் கணக்கா? மக்களை ஏமாற்றும் காந்தி கணக்கா?

Featured Replies

உரச, உரச கல்லும் தேயும் என்பதைப் போல் அரசாங்கத்தின் கள்ள மெளனத்தைச் சுட்டிக் காட்டி தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்ததன் விளைவாக ஜனநாயகத்தின் மூலம் நமக்கு இன்னொரு வெற்றி கிடைத்திருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுபாஸ் சந்திரா அகர்வால் என்பவர், "மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்' என, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திற்கு மனு செய்திருந்தார். ஆனால், பிரதமர் அலுவலகம் முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.

"மத்திய அமைச்சர்களின் சொத்துக்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்க முடியாது. இது விதிவிலக்கு பெற்றது' என, கூறியது பிரதமர் அலுவலகம்.

அகர்வால் இந்த விஷயத்தை மத்திய தகவல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். அங்கு பல முறை விசாரணைகள் நடந்தன. மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் வராது என்று சொன்ன பிரதமர் அலுவலகம், பின்பு "அது பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. நீங்கள் அங்கே மனு செய்யுங்கள்" என்று தன் கையை உதறியது.

ஆனால் பாராளுமன்ற அலுவலகமோ, "மத்திய அமைச்சர்கள் மட்டும்தான் என்றால் நீங்கள் பிரதமர் அலுவலகத்திலேயே வாங்கிக் கொள்ளலாம்" என்றது.

கூட்டிக் கழித்துப் பார்த்த மத்திய தகவல் ஆணையம், "மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்களை பெறுவதற்கு, பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் அனுமதி பெற்ற பின்பு பிரதமர் அலுவலகம் அதனை மனுதாரருக்கு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது.

இப்போது திடீரென்று முழித்துக் கொண்ட பாராளுமன்றம், “இதற்கு எங்களின் அனுமதி தேவையில்லை. பிரதமரின் அலுவலகமே மனுதாரருக்கு இதனைத் தனிப்பட்டு வழங்கலாம்” என்று சொல்லி தனது கையைச் சுத்தமாக டெட்டால் போட்டுக் கழுவிக் கொண்டது.

மீண்டும் மனு பிரதமர் அலுவலகத்திற்கு வர... வேறு வழியில்லாமல் மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட ஒப்புதல் அளித்தது. இதன்படி, 400 பக்கங்கள் கொண்ட அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுவும் 2008-2009-ம் வருடத்திற்கான சொத்துப் பட்டியல்தான் இதுவாம். 2010-க்கு அடுத்த வருடம் வரையிலும் காத்திருக்க வேண்டும்..!

பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய அமைச்சர்கள் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், தேர்தலின்போது அளித்த சொத்து பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முதல்வர்யார்..?

இதன்படி பார்த்தால் மத்திய அமைச்சரவையிலேயே அதிகமாக சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான பிரபுல் படேல்தான். இவர் 29.62 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை, வொர்லியில் உள்ள சொத்து, குஜராத்தில் உள்ள நிலம் மற்றும் நகைகள் உள்ளிட்டவை இதில் அடக்கம். இவரது மனைவி வர்ஷா படேல் பெயரில் 37.7 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன. பிரபுல் படேல் பெயரில், ரூ.67 லட்சம் மதிப்புள்ள நகைகளும், அவருடைய மனைவி பெயரில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள நகைகளும், மகன் பெயரில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள நகைகளும் உள்ளன.

ராஜ குடும்பத்துக்கு 2-ம் இடம் :

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் (குவாலியர் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்) மகனுமான ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு இந்த பட்டியலில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. இவருக்கு 26.3 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாலியரில் உள்ள ராணி மகால், வெளிநாட்டு முதலீடு, நகைகள் ஆகியவை இதில் அடக்கம்.

கபில்சிபலிடம் 27 கோடி :

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், சட்ட வல்லுநருமான கபில்சிபலுக்கு 23 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியானா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள விவசாய நிலம், டொயட்டா கொரல்லா, செவர்லேட் உள்ளிட்ட விலை உயர்ந்த கார்கள் ஆகியவை இதில் அடக்கம். இவரது மனைவி பெயரில் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

புது மாப்பிள்ளை சசிதரூர் :

ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி ஏலம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் சிக்கி, மத்திய அமைச்சர் பதவியை இழந்த சசி தரூருக்கு 27 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஒரு பிளாட்டும் இந்த 27 கோடியில் அடக்கம்.

வீரபத்திரசிங்கும் கோடீஸ்வரர்தான்..!

முன்னாள் இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான வீர்பத்ர சிங்கிற்கு 20 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள நிலம், நகைகள் ஆகியவையும் இதில் அடக்கம்.

விவசாய அமைச்சரின் சொத்து :

மத்திய விவசாய மற்றும் உணவுத் துறை அமைச்சர், தேசியவாத காங்கிரஸ் தலைவர், சர்வதேச கிரிக்கெட் சங்க தலைவர் என, பல பொறுப்புகளை வகித்து வரும் சரத் பவாருக்கு எவ்வளவு சொத்து இருக்கும் என, நினைக்கிறீர்கள். அவசரப்பட்டு விரல்களை நீட்ட வேண்டாம். நாம் நினைப்பது போல் அவருக்கு அவ்வளவு சொத்துக்கள் இல்லையாம். சரத்பவார் மற்றும் அவரது மனைவி பெயரில் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள்தான் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சருக்கு பற்றாக்குறை :

மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜிக்கு சொல்லிக் கொள்ளும்படியான சொத்துகள் இல்லை. அவருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தும், அவரது மனைவி பெயரில் 1.6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தும் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் வைத்துள்ள போர்டு ஐகான் காரின் மதிப்பு 1.75 லட்சம் ரூபாயாம்.

வெளியுறவு அமைச்சரும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் சொத்து மதிப்பு 1.1 கோடி ரூபாய்.

சுகாதார அமைச்சரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் பெயரில் 22.6 லட்ச ரூபாய் வங்கிகளில் உள்ளதாகவும், அவரது மனைவி பெயரில் 83.8 லட்ச ரூபாய் வங்கிகளில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜியின் சிக்கனச் சொத்து..!

மேற்கு வங்கத்தை கலக்குபவரும், ரயில்வே அமைச்சரும், எளிமைக்கு பெயர் பெற்றவருமான மம்தா பானர்ஜிக்கு ஆறு லட்ச ரூபாய் மதிப்புக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மம்தாவின் பெயரில் கார், வீடு என எதுவுமே இல்லை என்பது கூடுதல் தகவல்.

அமைச்சர் அந்தோணியிடம் கார் இல்லை :

கேரள முன்னாள் முதல்வரும், ராணுவ அமைச்சருமான அந்தோணிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மட்டுமே சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் உள்ள பணம்தான். இவருக்கு சொந்தமாக வேறு சொத்துக்களோ, வாகனங்களோ இல்லை. இவரது மனைவி எலிசபெத்துக்கு 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு, 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலம், மூன்று வங்கிகளில் 3.1 லட்ச ரூபாய் பணம் ஆகியவை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நெப்போலியனின் சொத்து மதிப்பு ரூ.16 கோடியாம். நிச்சயம் நம்ப முடியாத ஆச்சரியம் இது..!

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் பெயரில் ரூ.10-1/2 கோடி மதிப்புள்ள சொத்துகளும், அவருடைய மனைவி பெயரில் ரூ.8-1/2 கோடி சொத்துகளும் உள்ளன. இவற்றில், கர்நாடக மாநிலம் குடகில் உள்ள ரூ.28 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள காபி எஸ்டேட்டும் அடங்கும். ப.சிதம்பரம், ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள போனும், அவருடைய மனைவி ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள போனும் வைத்துள்ளனர்.

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரியின் சொத்து மதிப்பு, ரூ.8 கோடியே 90 லட்சம். அவருடைய மனைவி காந்தி அழகிரி பெயரில் ரூ.2 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள சொத்துகளும், மகன் தயாநிதி அழகிரி பெயரில் ரூ.3 கோடியே 62 லட்சம் மதிப்புள்ள சொத்துகளும் உள்ளன. அழகிரியின் சொத்து மதிப்பில் ரூ.4 கோடி பிக்சட் டெபாசிட்டும், வங்கிக் கணக்கில் உள்ள ரூ.1 கோடியே 39 லட்சமும் அடங்கும்.

மத்திய மந்திரி ஆ.ராசா பெயரில் ரூ.1-1/2 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இவற்றில் ரூ.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும், ரூ.16 லட்சம் ரொக்கமும் அடங்கும்.

இதாவது பரவாயில்லை. இதுக்கு மேல விடுறாங்க பாருங்க டூப்பு...

உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய்க்கு 1.4 லட்சம் ரூபாய்க்கும், ஜெய்பால் ரெட்டி, முகுல் வாஸ்னிக் ஆகியோருக்கு தலா 3.3 லட்ச ரூபாய்க்கும் சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வர்த்தகத் துறையின் அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு 26 ஆயிரத்து 741 ரூபாய் மதிப்புக்குதான், சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக தலையைச் சுத்த வைக்கும் ஒரு கணக்கு

எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் வங்கி கணக்கில் வெறும் 29 ரூபாய்தான் இருக்கிறதாம். இதுதான் எனது சொத்து என்று அவர் கணக்குக் காட்டியிருக்கிறாராம்.. தோள் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு சாவகாசமாக நமது காதில் பூச்சுற்றியிருக்கிறார்..

இதுவெல்லாம் அதிகாரப்பூர்வமாக இவர்கள் காட்டியுள்ள காந்தி கணக்குதான். இதை அப்படியே நம்புவதற்கு நானென்ன இளிச்சவாயனா..? வெள்ளையில் அதிகாரப்பூர்வமாக அடக்கமாக காட்டியே இவ்வளவு என்றால், உண்மையில் எவ்வளவு வைத்திருப்பார்கள்..?

இத்தனை கோடிகள் தம்மிடம் இருக்கிறதே என்பதற்காக மந்திரிகளுக்கான சம்பளம், சலுகைகளை பெறாமலா இருக்கிறார்கள்..? அப்படியும் ஓசியில் ஒரு பருக்கை சோற்றைக்கூட தரையில் போட மாட்டார்களே..!

இந்தக் கருமாந்திரம் பிடித்த கயவர்கள்தான் மக்களுக்காக சேவையாற்றத்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று வக்கனையாகப் பேசுபவர்கள். நாம் நம்புவோமாக

மேற்கண்ட அனைத்து அமைச்சர்களின் படங்களையும் பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=18351

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.