Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரிகள் ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு நண்பர்கள். ஜெயலலிதா பேட்டி.

Featured Replies

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு:-

கேள்வி:- சட்டசபை தேர்தல் பிரசாரத்தை நீங்கள் இப்போதே தொடங்கி விட்டது போல தெரிகிறதே? உங்கள் கூட்டத்தில் அதிக அளவு மக்கள் திரண்டனர். 2011 தேர்தல் அ.தி.மு.க.வுக்கு எப்படி இருக்கும் என கருதுகிறீர்கள்?

பதில்:- தேர்தல் நேர்மையாக நடந்தால் அ.தி. மு.க.வும் கூட்டணி கட்சிகளும் பெரும் வெற்றியை பெறும். ஆனால் நேர்மையாக தேர்தல் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கே:- உங்களுடன் ம.தி. மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டுமே கூட்டணியில் உள்ளன. ஆனால் தி.மு.க. அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் இருக்கின்றன. பா.ம.க. வும் சேரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே அவர்களை எதிர் கொள்வது கடினமாக இருக்கலாம். விஜயகாந்த் தனியாக போட்டியிடலாம் என கருதப்படுகிறது. இப்படி இருந்தால் அரசுக்கு எதிரான ஓட்டுகள் சிதைந்து விடுமே?

ப:- இது இப்போது உள்ள நிலைமை. ஆனால் இந்த கூட்டணிகள் மாறலாம்.

கே:- அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறி இருக்கிறாரே?

ப:- அது பற்றி எந்த பதிலும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சி பற்றி காங்கிரஸ் தலைமை அதிருப்தியில் உள்ளது. தொடர்ந்து இந்த கூட்டணியில் நீடிக்க வேண்டுமா? என்று ஆலோசித்து வருகின்றன.

கே:- உங்கள் தேர்தல் பிரசாரம் எப்படி இருக்கும்?

ப:- கோவையிலும், திருச் சியிலும் நான் பேசியதை அறிந்து இருப்பீர்கள். அடுத்து மதுரையில் 18-ந் தேதி நடக்கும் கூட்டத்தில் என் பிரசார மைய கருத்துக்களை கூறுவேன்.

கே:- மதுரை பொதுக்கூட்டம் பற்றி பல்வேறு சர்ச்சை எழுந்துள்ளதே?

ப:- எனக்கு கொலை மிரட்டல் வந்ததை தவிர வேறு எந்த சர்ச்சையும் இல்லை.

கே:- கொலை மிரட்டலை அதிக முக்கியத்து வம் வாய்ந்ததாக கருதுகிறீர்களா?

ப:- நான் அப்படி கருதவில்லை. ஆனால் எனது கட்சிக்காரர்கள் இதை முக்கியமானதாக கருதுகின்றனர். எனவே தான் அவர்கள் இது பற்றி பிரதமர், உள்துறை மந்திரி, மாநில தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளனர். இது வரை எனக்கு 10 மிரட்டல்கள் வந்துள்ளன.

கே:- மதுரை கூட்டத்தை ரத்து செய்வதற்காகத்தான் நீங்கள் இப்படி புகார்களை கூறுவதாக அழகிரி கூறி இருக்கிறாரே?

ப:- இதில் நான் தெளிவாக இருக்கிறேன். மதுரை கூட்டத்தை ரத்து செய்யும் எண்ணம் என்னிடம் இல்லை. நான் விளம்பரத்துக்காக இந்த புகாரை சொல்வதாகவும் கூட அழகிரி சொல்லி இருக்கிறார். இது போன்ற விளம்பரம் எனக்கு தேவை இல்லை.

கே:- அரசு நலத்திட்டங்கள், மற்றும் இலவச திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறதே?

ப:- இது உண்மை அல்ல. நேர்மையாக தேர்தல் நடந்தால் மக்கள் மனதில் என்ன உள்ளது என்பது வெளிப்படும். நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அது பெரும் வெற்றியாக இருக்கும்.

கே:- உங்கள் கூட்டணி நிலைமை திருப்தியாக உள்ளதா?

ப:- இன்னும் நிறைய நடக்கலாம். தற்போதைய நிலையில் இது இறுதியானது அல்ல. இன்னும் நிறைய காலம் இருக்கிறது. அப்போது கூட்டணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கே:- உங்கள் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் பலர் வெளியேறி விட்டார்கள். இதனால் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது போல தோன்றுகிறதே?

ப:- சில பேர் வெளியேறி இருப்பதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. கோவை, திருச்சி கூட்டத்தை பார்த்த பிறகும் இந்த கேள்வியை கேட்பது தான் வியப்பாக இருக்கிறது. அடுத்து மதுரையில் கூடும் கூட்டத்தை பொறுத்திருந்து பாருங்கள். கட்சியை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் இப்போது வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இது தொண்டர்களின் கட்சி, தொண்டர்கள் தான் மற்றவர்களை விட முதன் மையானவர்கள். சக்திமிக்கவர்கள்.

கே:- மேல்-சபை தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

ப:- இதை எதிர்த்து பல வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டு உள்ளன. இதற்கான அறிவிக்கையே சட்ட விரோதமாக வெளியிடப்பட்டது. ஜனாதிபதி அறிவிக்கை வெளியிட்ட பின் அதை பாராளு மன்றத்தில் வைக்க வேண்டும். அதை செய்ய வில்லை. இது முறைப்படி செல்லாது.

கே:- ஈழப் போர் முடிந்து விட்டது. விடுதலைப்புலி தலைவர்கள் இப்போது இல்லை. எனவே விடுதலைப்புலிகள் தடையை விலக்கி கொள்ளலாம் என நீங்கள் கருதுகிறீர்களா? உங்கள் கூட்டணி தலைவர் வைகோ விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்க கூடாது என்கிறாரே?

ப:- வைகோ தனிக் கொள்கை வைத்துள்ளார். அதே போல நாங்களும் தனிக் கொள்கை வைத்து உள்ளோம். நாங்கள் கூட்டணியாக இருப்பதால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. நாங்கள் விடுதலைப்புலிகளை எதிர்ப்பது நீடிக்கிறது.

மத்திய அரசு விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு நாங்களும் ஒரு கருவியாக இருந்தோம். அதே நேரத்தில் இலங்கை தமிழர்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். அவர்கள் இலங்கை அரசால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு வருகின்றனர். தடுப்பு வேலிக்குள் வைக்கப்பட்ட மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும்.

கே:- ஆணாதிக்கம் உள்ள அரசியலில் பெண்களும் பங்கேற்று பணியை செய்வது கடினமானது என்று முன்பு கூறி இருந்தீர்கள். கடந்த 30 ஆண்டுகளாக நீங்கள் எப்படி அரசியலை எதிர் கொள்கிறீர்கள்?

ப:- எனது வாழ்க்கையில் எல்லாவற்றையும் துணிவோடும், மனவலிமையோடும், உறுதியோடும் எதிர்கொண்டு வருகிறேன். பெண்ணாக இருப்பதால் அரசியலில் எந்த கருணையையும் எதிர்பார்க்க முடியாது. எல்லாவற்றையும் சந்தித்தே ஆக வேண்டும்.

கே:- சமீப கால சமூக மாற்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? நமது இளைஞர்களின் நடவடிக்கை, நடத்தைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதே?

ப:- நடத்தை முறைகளில் பல்வேறு மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இப்போதெல்லாம் முதியவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது இல்லை. பெரும்பாலோர் தங்களது பெற்றோரை சுமையாக கருதி புறக்கணிக்கிறார்கள். இது மாறவேண்டும்.

குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் உணரவேண்டும் கூட்டு குடும்பம் சிதைந்தது தான் இதற்கு காரணம். குழந்தைகளாக இருக்கும் போதே அவர்களிடம் எதிர் காலத்தில் பெற்றோர்களுக்கு மதிப்பளிப்பது அவர்களை கவனிப்பது கடமை என்பதை உணர்த்த வேண்டும். மேற்கத்திய கலாச்சாரங்களை பின்பற்றக் கூடாது.

தற்போதைய சமூக சூழ்நிலையும் இதற்கு காரணமாக இருக்கிறது. தந்தையும் வேலைக்காக வெளியே சென்று விடுகிறார். தாயும் வேலை பார்க்க சென்று விடுகிறார். குழந்தைகளுக்கு நல்லது எது? கெட்டது எது? என வீட்டில் சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. இதனால் தான் இது போன்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது.

Our Thanks to and see pictures go to......

http://www.thedipaar.com/news/news.php?id=19415

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.