Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்டியுடன் கிணற்றில் விழுந்த யானையை மீட்க 10 மணிநேரம் போராடி மீட்ட வனத்துறையினர்.

Featured Replies

திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதனை சுற்றி உள்ள பெரும்பாலான கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் வனத்துறை எல்லையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த வனப்பகுதிகளில் யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன.

பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் மெயின் ரோட்டில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கணக்கன்பட்டி கிராமம் அமைந்துள்ளது.

மேலும் கோம்பைக்காடு, தொண்டுபட்டி ஆகிய பகுதிகளும் உள்ளன. மலை அடிவார பகுதியான இங்கு சமீபகாலமாக ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் சுக்கம்பட்டி ராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் 9 யானைகள் கொண்ட கூட்டம் புகுந்தது. ராமசாமி தனது விவசாய நிலத்தில் கரும்பு, சோளம், மொச்சை மற்றும் தென்னை பயிரிட்டு இருந்தார்.

தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் சிறிது நேரத்தில் தனித்தனியாக பிரிந்தன. அப்போது அங்கிருந்த தடுப்பு சுவர் இல்லாத கிணற்றுக்குள் 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானையும், 5 வயது கொண்ட ஒரு குட்டி யானையும் தவறி விழுந்தது.

இந்த சத்தத்தை கேட்டு ஆங்காங்கே நின்று கொண்டிருந்த மற்ற யானைகள் வெகுநேரமாக பிளிறியவாறு கிணற்றை சுற்றி சுற்றி வந்தன. ஆனால் கிணற்றுக்குள் தவறி விழுந்த யானைகளை அவைகளால் மீட்க முடியவில்லை.

இதற்கிடையே இரவு காவலுக்காக ராமசாமி தனது தோட்டத்துக்கு வந்தார். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த யானைகளை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் கொடுத்த தகவலின்பேரில் பழனி ஆயுதப்படை போலீசார் தீயணைப்பு துறையினர் மற்றும் பழனி, ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அவர்கள் யானைகளை காப்பாற்றும் முயற் சியை தீவிரப்படுத்தினர். 50 அடி உயரம் கொண்ட அந்த கிணற்றில் சுமார் 25 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. தண்ணீரின் அளவை உயர்த்தினால் யானைகளை எளிதில் மீட்டு விடலாம் என்ற அடிப்படையில் அக்கம்பக்கத்தில் உள்ள கிணறுகளில் இருந்து மோட்டார் மூலம் யானைகள் விழுந்த கிணற்றுக்குள் தண்ணீர் கொண்டுவரப்பட்டது.

இதற்குள் நள்ளிரவை நெருங்கிவிட்டாலும் மீட்பு படையினர் சற்றும் மனம் தளறாமல் யானைகளை மீட்க போராடினர். இன்று காலை ஒருவழியாக கிணற்றின் மேல்மட்டம் வரை தண்ணீர் நிரப்பப்பட்டது. அத்துடன் யானைகள் வெளியே வருவதற்கு ஏற்றவாறு ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிணற்றுக்கு வெளியே ஒரு வழித்தடமும் அமைக்கப்பட்டது.

இதையடுத்து மீட்பு படையினர் முதலில் குட்டி யானையை கயிறு கட்டி யானை வெளியே வருவதற்காக உருவாக்கப் பட்ட வழித்தடம் மூலம் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு மற்றொரு யானையும் காயங்கள் இன்றி மீட்கப்பட்டது. அந்த யானை வெளியே வந்ததும் அப்பகுதியையே அதிர செய்யும் அளவுக்கு பயங்கரமாக பிளிறியவாறு காட்டுக்குள் ஓடியது. இதைக்கேட்ட அங்கு திரண்டு இருந்த ஏராளமான பொதுமக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

கிணற்றுக்குள் தவறி விழுந்து சுமார் 10 மணி நேரமாக உயிருக்கு போராடிய யானைகளை பத்திரமாக மீட்ட மாவட்ட வன அலுவலர் தங்கராஜ், ஒட்டன்சத்திரம் வனச்சரகர் சேதுராமன், பழனி வனச்சரகர் தர்மராஜ், பழனி தீய ணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் மற்றும் வீரர்கள், ஆயுதப்படை போலீசார் ஊர்க்காவல் படையினரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

யானைகள் மீட்கப்பட்டபோது எடுத்த படங்களைப் பார்க்க.......

http://www.thedipaar.com/news/news.php?id=19426

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.