Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளொன்றிற்கு வடக்கில் நான்கு பேர் தற்கொலை இதுதான் நல்லிணக்கமா

Featured Replies

திங்கட்கிழமை, அக்டோபர் 11, 2010 ஈழநாதம்

Aged%20people%20in%20Jaffna.jpg

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தற்போதைய சூழ்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தினசரி நான்கு பேருக்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக அந்த மாவட்ட வைத்தியசாலையின் உளநல மருத்துவர் தெரிவித்துள்ள விடயம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

இந்த அவலநிலைமைக்கு பிரதான காரணியாக இருப்பது சமூகப் பின்னணியே என்றும் விதவைகள்,கணவன்மார் காணமற் போனவர்கள்,தனிமையிலுள்ள பெண்களே அதிகளவுக்கு தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக அந்த மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த மோதலை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாகவும் உலகநாடுகளுக்கே இலங்கை முன்மாதிரியாக விளங்குவதாகவும் சர்வதேசம் இந்த விடயத்தில் இலங்கையிடமிருந்தே பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆளும் தரப்பினர் பெருமிதத்துடன் தொடர்ச்சியாக கருத்துக்களை தெரிவித்து வருவதை அவதானிக்கும்போது யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க நடவடிக்கைகள் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது சிந்திக்கப்படவேண்டிய கேள்வியாகும்.

உண்மையிலேயே பல தசாப்தகால மோதலினால் ஏற்பட்ட உளப்பாதிப்புகளை ஆற்றுப்படுத்தும் முயற்சிகள் கடந்த 16 மாதங்களில் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? அவ்வாறான செயற்பாடுகள் சீரான முறையில் இடம்பெற்றிருந்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் சராசரியாக 4 பேர் தினசரி தற்கொலை செய்யுமளவுக்கு நிலைமை தோன்றியிருக்காதே?

சமூகப் பாதுகாப்பின்மை,பொருளாதார பிரச்சினையே இந்தத் தற்கொலை முயற்சிக்கான முக்கியமான காரணமாகக் காணப்படுவதாக மருத்துவர் கூறியுள்ளார்.

மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள இந்த மக்களின் பொருளாதார பிரச்சினை,சமூகப் பாதுகாப்பின்மை தொடர்பாக அரசாங்கமே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.முகாம்களிலிருந்த மக்களில் பெரும்பான்மையானோர் மீளக்குடியமர்த்தப்பட்டுவிட்டதாகவும் இன்னமும் 23 ஆயிரம் பேர்வரையே முகாம்களில் இருப்பதாகவும் உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆனால் மீளக்குடியமர்த்தப்பட்டதாகக் கூறப்பட்ட மக்களில் பெரும்பான்மையானோருக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் அவர்களை அப்படியே கொண்டு சென்றுவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் விசனம் தெரிவித்து வருகின்றன.

மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் உள்சார் கட்டமைப்பு வசதிகள் சீராக ஏற்படுத்திக் கொடுக்கப்படாமலிருப்பதை ஐ.நா.முகவரமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.இந்த மக்கள் அன்றாட வாழ்க்கையையே கொண்டு நடத்த முடியாமல் அவதியுறும் நிலையில் சமூகப் பாதுகாப்பின்மை அவர்களுக்கு பாரிய பிரச்சினையாக இருப்பதை அப்பகுதிகளிலிருந்து வெளிவரும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன.

வடமராட்சி கிழக்கில் அண்மையில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பெண்கள் அச்சமான சூழ்நிலையில் இருப்பதாக யாழ்.

மாவட்ட எம்.பி. சிறிதரன் கூறியுள்ளார்.அங்குள்ள பெண்கள் தமது பிரச்சினைகளைக் கண்ணீருடன் முறையிட்டதாக அவர் கூறியுள்ளார்.

மகளிர்,சிறுவர் விவகாரத்துக்கென தனியான அமைச்சும் பெண்கள்,பிள்ளைகளுக்காக சேவையாற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டர் நிறுவனங்களும் நாட்டில் இயங்கி வருகின்றன.நல்லிணக்கத்தை தோற்றுவிக்கவும் உளரீதியான ரணங்களை ஆற்றுப்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை

முன்னெடுத்துவருவதாக ஊடகங்கள் மூலம் இவை செய்திகளை வெளியிட்டு வருகின்றன.ஆனால் உண்மையிலேயே உதவி தேவைப்படுவோருக்கு இந்த அமைப்புகளின் உதவிகள் சென்றடைகின்றனவா என்பது சந்தேகமாக உள்ளது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வசிக்கும் பெண் ஒருவர் அண்மையில் பிறந்த நாட்டுக்கு வந்து சென்றார்.புலம்பெயர்ந்த நாட்டில் உங்களை மிகவும் ஈர்த்த விடயம் எதுவெனக் கேட்டபோது நள்ளிரவிலும் பெண்கள் எந்த இடத்துக்கும் தனியாக சுதந்திரமாக செல்லமுடிகிறது. அந்த சுதந்திரம் இங்கு இல்லையே என்றார்.

வளர்ச்சியடைந்த நாடுகளின் சமூக,பொருளாதாரப் பின்னணியுடன் மூன்றாம் உலகைச் சேர்ந்த இலங்கையை ஒப்பிட முடியாது என்றாலும் யுத்தத்தாலும் இடம்பெயர்வாலும் சிதறுண்ட வாழ்க்கையை சீர்படுத்த முடியாமல் ஏங்கிக்கொண்டிருக்கும் மக்களின் குறிப்பாக பெண்களின் சமூகப் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

வட,கிழக்கில் 90 ஆயிரம் விதவைகள் இருப்பதாகவும் இவர்களில் பெருமளவானோர் இளம் பராயத்தினரெனவும் உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இவர்களின் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகள் அவசியமாகும்.சிறப்பு விடுபாட்டு உரிமையுடன் வேலியே பயிரை மேயும் அச்சமான சூழ்நிலை இல்லாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

பெயர் குறிபிடாமல் அஞ்சி பயந்து இருக்கும் தலைமைகள் தேர்தலி மாட்டும் வந்து துணிந்து பேசும் சூக்குமம் என்ன? வென்றவர்கள் தோற்றவர்கள் எல்லோரும் அரசியல் தலைவர்கள் தான் ஆகவே வேறுபாடுகளை மறந்து சத்தியா கிரக போராட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கவேண்டும் அப்போதுதான் ஆகக்குறைந்தது அனியாயம் நடக்கின்றது என்றாவது எல்லோரிற்கும் தெரியவரும்.

http://www.eelanatham.net/story/is%20this%20reconciliation%3F

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.