Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் சார்ந்து அமெரிக்கா கூறும் ஆலோசனையை கவனத்தில் எடுக்குமா இலங்கை................?

Featured Replies

தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் பொருளாதார நலன்கள் போர் ஏற்படுத்திய காயங்களை ஆற்றும் அளவுக்கு வலிமையானதல்ல. அதற்கும் அப்பால் செல்ல வேண்டும் என்பதே அமெரிக்காவின் ஆலோசனை

அவ்வப்போது அமெரிக்கா வெளியிடும் கருத்துகள் இலங்கை அரசாங்கத்தைப் பெரிதும் சீற்றமடையச் செய்வது வழக்கம். குறிப்பாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் போன்றவர்களின் கருத்துகளுக்கு எப்படியாவது இலங்கை அரசிடம் இருந்து பதிலடி ஒன்று வந்து விடும். அண்மையில் றொபேட் ஓ பிளேக் இலங்கை வந்திருந்த போது, 17வது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து வெளியிட உள்நாட்டு விவகாரத்துக்குள் அவர் தலையிடுவதாகக் கூறி அரசசார்புக் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. அமெரிக்காவே இலங்கைக்கு எதிராக சதி செய்வதாகவும் குற்றம்சாட்டின. அதேபோல 18வது அரசியலமைப்புத் திருத்தம் ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது என்று அமெரிக்கா வெளியிட்ட கருத்தையும் இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டித்தது. அமெரிக்கா எமக்கு ஆலோசனை கூறுவதை விட்டு விட்டு தங்களின் பிரச்சினையை பார்க்க வேண்டும் என்று பதிலடி கொடுத்தது இலங்கை அரசு. ஆனாலும் இலங்கை விவகாரத்தில் கருத்தை வெளிப்படுத்தும் தமது போக்கை அமெரிக்கா கொஞ்சமேனும் குறைத்துக் கொள்ளவில்லை.

றொபேட் ஓ பிளேக்

அண்மையில் சன்டியாகோ நகரில் உள்ள உலக விவகாரப் பேரவையில் ""தெற்காசியாவில் அமெரிக்கக் கொள்கை"" என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய றொபேட் ஓ பிளேக், சிறிலங்காவில் போரினால் ஏற்பட்டுள்ள காயங்களை பொருளாதார நன்மைகளைக் கொண்டு ஆற்றி விட முடியாது என்று கூறியிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் அவர் தெரிவித்த பல கருத்துக்கள் இலங்கை அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கக் கூடியவை.

1. "" பொருளாதார அபிவிருத்தி மூலம் மட்டும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தி விட முடியாது. பொருளாதார நன்மைகளின் மூலம் போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்ற முடியாது.

2. தமிழ் மக்களின் மனிதாபிமான, அரசியல் மற்றும் ஏனைய உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

3. தமிழ் மக்கள் கௌரவத்துடன் வாழக்கூடிய நிலையிலேயே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும். அத்துடன் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

4. போர்க்குற்றச் செயல்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

5. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.""

என்று அவர் கூறியிருந்தார்.

மனித உரிமைமீறல்கள்,போர்க்குற்றங்கள் குறித்து இப்போது யார் பேசினாலும் இலங்கை அரசுக்கு கடும் கோபம் வந்து விடுகிறது. அதிலும் அமெரிக்கா இது பற்றிப் பேசினால் போதும் இன்னம் ஆவேசமாகி விடும். ஆனால் றொபேட் ஓ பிளேக்கின் நிகழ்த்திய உரை இலங்கை அரசாங்கத்துக்கு தெரியாமல் போய் விட்டதோ தெரியவில்லை. அரசதரப்பில் இருந்து அதைக் கண்டிக்க யாருமே முன்வரவில்லை. ஏதோ இந்தமுறை அவர் தப்பித்தார் என்று சந்தோசப்படலாம்.

அது ஒருபுறமிருக்கட்டும்.

றொபேட் ஓ பிளேக் போர்க்குற்றம், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்களை ஒதுக்கி வைத்து விட்டு அவர் கூறியுள்ள மற்றொரு விடயத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

* பொருளாதார நலன்களை வழங்குவதனால் மட்டுமே போரில் ஏற்பட்ட காயங்களை ஆற்ற முடியாது என்பது அவரது கருத்து. இது முற்றிலும் உண்மையானதொன்று. ஆனால் இலங்கை அரசாங்கமோ பொருளாதார நன்மைகளை அளிப்பதன் மூலம் போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றி விடலாம் என்று நினைக்கிறது. இது தான தப்பான எண்ணம்.

இலங்கை அரசும் அதனுடன் இணைந்து அரசியல் நடத்தும் கட்சிகளும் பொருளாதார நலன்களை வழங்குவதன் மூலம் எல்லாவற்றையும் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றன. அதற்காக கோடிக்கணக்கான ரூபா பணத்தையும் கொட்டியிறைக்கத் தயாராக உள்ளன.

ஆனால்,

போரில் பட்ட காயங்களை தமிழ்மக்கள் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். ஏனென்றால் முப்பதாண்டுப் போரில் அவர்கள் இழந்தது ஏராளம். இந்தப் போரினால் பாதிக்கப்படாத எந்தவொரு தமிழ்க் குடும்பமும் இருந்திருக்க முடியாது. தமது உறவினரில் எவரேனும் ஒருவரின் உயிரிழப்பைச் சந்திக்காத எந்தவொரு தமிழரையும் காண முடியாது. அதுபோல ஏதோ ஒரு வகையிலான இழப்பைச் சந்திக்காத எவரையும் பார்ப்பது அரிது. தமிழர்கள் அனைவருமே போரினால் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போரில் இவர்கள் உடல்ரீதியாக , உள ரீதியாக, பௌதிக ரீதியாக சந்தித்துள்ள இழப்புகளில் இருந்து மீட்சி பெறுவது இலகுவானதல்ல. பொருளாதார நலன்களை அள்ளிக் கொடுத்து போரின் காயங்களை ஆற்றிவிடலாம் என்றும் அரசின் பக்கம் தமிழ் மக்களைத் திருப்பி விடலாம் என்றும் கருதியே அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் போரின்போது தமக்கு அநீதிகள் இழைக்கப்பட்டது என்ற கருத்தை இந்தப் பொருளாதார நன்மைகள் ஒருபோதும் அழித்துவிடப் போவதில்லை.

இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாததால் தான் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக பொருளாதார ரீதியான நலன்களை அள்ளி வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அது கூட பெரியளவில் இடம்பெறுகின்றது என்று சொல்வதற்கில்லை. ஆனால் வெளியே, மிகப் பெரியளவிலான பொருளாதார நலன்கள் தமிழருக்காகக் கொட்டப்படுகிறது என்று காட்ட முனைகிறது அரசாங்கம். தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் பொருளாதார நலன்கள் போர் ஏற்படுத்திய காயங்களை ஆற்றும் அளவுக்கு வலிமையானதல்ல. அதற்கும் அப்பால் செல்ல வேண்டும் என்பதே அமெரிக்காவின் ஆலோசனை.

அமெரிக்கா கூறும் இந்த ஆலோசனை இலங்கை அரசுக்குக் கசப்பானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அமெரிக்கா இது போன்று பல நாடுகளில் அனுபவப்பட்டிருக்கிறது என்ற வகையில் அதன் ஆலோசனைகளைப் புறக்கணிக்க முடியாது.

* நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தமிழரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியல் உரிமைகள் வழங்க வேண்டும், கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும்,

* மனிதஉரிமை மீறல்கள், போர்க்குறங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க வேண்டும்

என்று அமெரிக்காவின் இந்த ஆலோசனை நீண்டு செல்கிறது.

அமெரிக்கா கூறுவது போன்று நிரந்தர அமைதியும் நல்லிணக்க சூழலும் குறுகிய காலத்தில் உருவாகி விடப் போவதில்லை. அதற்கென ஒரு நீண்ட தொடர்ச்சியான செயற்பாடுகள் அவசியம். ஆனால் இதை ஒரு ஆணைக்குழுவை நியமித்து விசாரித்து அறிக்கையைப் பெறுவதன் மூலம் சாதித்து விடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறது அரசாங்கம்.

தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைப்பதுடன் இனிமேல் அநீதிகள் இழைக்கப்படாது என்பதை உறுதிப்படுத்தும் சூழலை உருவாக்குவதன் மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இதைத் தான் அமெரிக்கா மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. அமெரிக்காவின் இந்தக் கருத்துக்கு இலங்கையிடம் இருந்து எந்தப் பதிலும் வராதுள்ள போதும் மௌனம் சம்மதம் என்று மட்டும் எடுத்துக் கொண்டு விட முடியாது.

கட்டுரையாளர் சத்திரியன் இன்போதமிழ் குழுமம்

வியாழக்கிழமை, 14 ஒக்ரோபர் 2010

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.