Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீபாவளி தத்துவமும் இரகசியமும்! – சித்திரன் புத்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபாவளி தத்துவமும் இரகசியமும்! – சித்திரன் புத்திரன்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

diwali_meenakam.jpg

வளவன் – சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன், கோவிச்சுக்காதே.

ராம் – சரி கேள்.

வளவன் – வராகம் என்பது பன்றி அது ஒரு மிருக ரூபம் சரிதான்?

ராம் – சரி.

வளவன் – இது இரண்டும் எப்படி கலவி புரியும்? எப்படி கருத்தரிக்கும்?

ராம் – பாத்தியா பாத்தியா இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என்பது. கடவுள் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செய்யுமல்லவா?

வளவன் – என்னப்பா இராமானுஜம் பாத்தியா பாத்தியா என்று சாய்பு மாதிரி பாத்தியா கொடுக்கிறே. இது ஒரு பெரிய செக்சுவல் சையன்சு சங்கதி இதைக் கேட்டால் போக்கிரித்தனமான கேள்வி என்கிறாய். சரி! இதைப்பற்றி பிரின்ஸ்பாலைக் கேட்கலாம். அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆச்சுது?

ராம் – அந்தப் பிள்ளைதான் நரகாசூரன்.

வளவன் – இந்தப் பெயர் அதற்கு யார் இட்டார்கள் தாய் தந்தையர்களா?

ராம் – யாரோ அன்னக்காவடிகள்! இட்டார்கள்? அதைப் பற்றி என்ன பிரமாதமாய் கேட்கிறாய்? எனக்கு அவசரம் நான் போகவேண்டும். என்னை விடு.

வளவன் – சரி போகலாம், சீக்கிரம் முடி அப்புறம்?

ராம் – அந்த நரகாசூரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான் அவனை மகாவிஷ்ணு கொன்றார்.

வளவன் – அட பாவி! கடவுளுக்குப் பிறந்தவனா, தேவர்களுக்குத்

தொல்லை கொடுத்தான்? அப்படியென்றால் தேவர்கள் என்ன அவ்வளவு அயோக்கியர்களா?

ராம் – இல்லேப்பா, இந்த நரகாசூரனின் பொல்லாத வேளை தேவர்கள்கிட்டே இவன் வாலாட்டினான். அவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா?

வளவன் – அதற்கு ஆக தகப்பன் மகனுக்கு புத்தி சொல்லாமல் ஒரே அடியாகக் கொன்று விடுவதா?

ராம் – அது அவர் இஷ்டம் அதைக் கேட்க நாம் யார்? தேவரனையர் கயவர் அவரும் தாம் மேவன செய்தொழுகலான் என்று நாயனார் சொல்லி இருக்கிறார். ஆதலால் நாம், அது ஏன் இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா?

வளவன் – சரி கொன்றார். அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?

ராம் – அதைக் கொண்டாட வேண் டிய அவசியம் ஏன் என்றால் இனிமேல் எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காக, அதை ஞாபகத்தில் வைப்பதற்கு அதை நினைவூட்டுவதற்கு நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது.

வளவன் – தேவர்கள் எங்கிருக்கிறார்கள்?

ராம் – வான் தேவர்கள் வானத்தில் (மேல் லோகத்தில்) இருக்கிறார்கள், பூதேவர்கள் இந்தப் பூமியில் இருக்கிறார்கள்!

வளவன் – இந்த பூமியில் இருக்கும் தேவர்கள் யார்?

ராம் – அட முட்டாள்! அது கூடவா தெரியாது. அதுதான் பிராமணர்கள், பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள் தானே அகராதியைப்பார்.

வளவன் – பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு.

ராம் – என்ன வகுப்பு? நாங்கள் தான்?

வளவன் – நீங்கள் என்றால், நீ அய்யங்கார் நீங்களா?

ராம் – நாங்கள் மாத்திரம் அல்ல அப்பா, நாங்களும் அய்யர், ஆச்சார், சாஸ்திரி சர்மா தீட்சதர் முதலியவர்கள்.

வளவன் – அப்படி என்றால் பார்ப்பனர்கள் யாவரும் பூதேவர் என்கிறாய்.

ராம் – ஆமா! ஆமா!! கல்லாட்டமா ஆமா!!!

வளவன் – சரி, தொலைந்து போகட்டும், நீங்கள் தேவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தொல்லை கொடுக்க அசுரர், இராட்சதர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லையே? இங்கிருப்பவர்களை எதற்கு ஆக பயப்படுத்த தீபாவளி கொண்டாட வேண்டும்?

ராம் – இங்கேயே அசுரர் இராட்சதர் இல்லை என்கிறாய், இந்த கருப்புச்சட்டைக்காரர்கள் சு.மக்குகள், திராவிட கழகத்தார்கள் இவர்கள் எல்லாம் யார்? பிராமணர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறவர்கள். அவர்களைப் போல் வாழ வேண்டுமென்பவர்கள். வேத சாஸ்திர புராண இதிகாசங்களைப் பகுத்தறிவில் ஆராய்ச்சி செய்கிறவர்கள் முதலிய இவர்கள் எல்லோரும் இராக்கதப் பதர்கள். இரக்கமே இல்லாத அரக்கர்கள் தெரிந்ததா? அவர்களுக்கு பாபம் உண்டாக்குவதற்கு ஆக தேவர்களுக்கு இடையூறு செய்தால் நாசமாய்ப் போய் விடுவாய் என்று அறிவுறுத்துவதற்கு ஆகத்தான் தீபாவளி கொண்டாடுவதாகும் இதுதான் இரகசியம். மற்றபடி கதை எப்படி இருந்தால் என்ன?

வளவன் – அப்படியா? நீங்கள் 100-க்கு 3- பேர். நீங்கள் அல்லாதவர்கள் 100-க்கு 97- பேர் எப்படி எத்தனை நாளைக்கு இப்படி மிரட்ட முடியும்?

ராம் – அதைப் பற்றிக் கவலைப் படாதே! காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கிறது. அந்தத் தொண்ணூறு பேர்களில் ஒரு பகுதி விபீஷணர்களாக அனுமார்களாக இருந்து பிராமண தொண்டாற்றவும், எதிரிகளை ஒழிக்கவும் பயன்படுத்துவதற்கு மற்றும் பண்டிதர் கூட்டம் படித்து விட்டு உத்தியோகத்துக்குக் காத்துகிடக்கும் கூட்டம், கோவில் மடம், தர்மஸ்தாபனத்தில் இருக்கும் கூட்டம், பூசாரிக் கூட்டம், பிரபுக்கூட்டம், பாதிரிக் கூட்டம், மேற்பதவி வகிக்கும் உத்தியோகஸ்தர் கூட்டம், நாடகைப் பிழைப்புக் கூட்டம், கலை வித்துவான்கள் கூட்டம், அரசியல் பிழைப்புக்காரர் கூட்டம், தேசபக்தர்கள், தியாகிகள் கூட்டம் இப்படியாக இடறிவிழும்படி சர்வம் பிராமண அடிமையாம் என்பது போல் இருக்கும் போது 100-க்கு 3, 100-க்கு 97- என்ற கணக்கு முட்டாள்தனமான கணக்கு ஆகும்.

வளவன் – ஓஹோ! அப்படியா? சரி சரி தீபாவளி என்பதன் தத்துவமும், இரகசியமும் தெரிந்து கொண்டேன், நன்றி வணக்கம்.

ராம் – சரி நமஸ்தே, ஜெய்ஹிந்த்!

* சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் தந்தை பெரியார் எழுதியது.

http://meenakam.com/2010/10/28/12210.html

கொடியவனாக வர்ணிக்கப்பட்ட நரகாசுரனை தமிழனாக காட்டி, தமிழர்களை - தமிழ்க் கலாச்சாரத்தை இழிவுபடுத்தி ஈனப் பிழைப்பு நடத்திவரும், தமிழின விரோத பிராமண ஆரியக் கும்பலுக்கு சற்றும் குறைவில்லாத போலித் திராவிட கூட்டத்தினரின் சதித் திட்டங்களுக்கு முண்டு கொடுக்கும் ஒரு சிலர் இன்னமும் உள்ளனர்.

ஆரியர்களின் மூட நம்பிக்கைக் கதைகள் சிலவற்றை தமக்கேற்றவாறு திரித்து பிழைப்பு நடத்துபவர்களின் நோக்கங்களை அறிந்தோ அறியாமலோ நிறைவேற்ற முயலும் இவர்கள் அர்த்தமற்ற தத்துவ மாயைகளில் இருந்து விடுபடவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரம் விடியல், நீங்கள் தமிழ் நாட்டு தீபவழிபாட்டை பற்றி கூறுவது மிகவும் சரி.

ஆனால், தமிழ் ஈழத்தில் நாம் பண்டைய முறைப்படி. தீபவழிபாடு செய்து, நோன்பிருந்து பின் சூரன் போர் கொண்டாடுவோம். தமிழ் நாட்டு காரர் போல் இல்லாமல் ஆட்டு இறைச்சியை தீபாவளி அண்டைக்கு ஒரு பிடி பிடிப்போம்.

சூரன் என்பது பாரசீகர்களை குறிக்கும் சொல். அது சுரபானம்(மது) எனும் பாரசீக சொல்லில் இருந்து வந்தது. மது அருந்தாத திராவிட இனத்தை அவர்கள் அசுரர் என்று அழைத்தார்கள். இரணியன் எனும் வார்த்தையும் இப்போது இருக்கும் இரானை குறிக்கிறது. நரசிம்மன் என்பதும் ஒரு குஜாரத்தி சொல். குஜராத் தான் பார்சிகளின் மாநிலம்.

நமது முருக்க போர்கடவுள் ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பே இப்போதுள்ள பாகிஸ்தான் சிந்து நதி நாகரிகத்தை காப்பாற்ற சூரரை எதிர்த்து போராடியவர். முருக்கனை தமிழ் நாட்டில் பாரசீக கடவுளான கிரிஷ்ணானால் தமிழ் சினிமாவை வைத்து ரிப்ளேஸ் பண்ணிவிட்டார்கள்.

http://www.harappa.com/script/maha12.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஸ்ரீ அண்ணா, எல்லாம் இப்பிடி சொல்லி எங்கட வெளிநாட்டு அரசியல்வாதிகளில் யாராவது தென்னிந்தியாவில் பீதி கிழப்பி, எங்கட தமிழ் நாட்டு சூப்பர் சிங்கர் கூட்டம் ஊருக்கு வந்து எங்கட பொடியள கெடுக்காமல் தடுக்கலாம் என்ற ஒரு பேராசை தான். <_<

அமெரிக்கா ஒபாவாவும், தீவாளி அன்று இந்தியா வந்து , வெடி கொழுத்தப் போறார்.

டிஸ்கி; ஆருக்கு வெடி ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒபாமா இப்ப இந்திய பசுக்களுக்கு ஐந்து விகித மின்சக்தியை பெற விற்கும் ஆயிரம் பில்லியன் டாலர் பெறுமதியான அணு சக்தி பேரத்தை சீல் பண்ண வருறார். இதே காசுக்கு சோலார் அல்லது காற்றாலை போட்டால் இருபது விகித மின்சக்தி பெறலாம் ஆனால் பாராசீக காங்கிரஸ் குடும்பத்தின் மாமூல் வெட்டு குறைந்துவிடும்.

அவர் வந்து போட போற வெடி இந்திய வரி கட்டும் குடிமகன்களுக்கு தான்! ஜெய் ஹிந்த்.

  • கருத்துக்கள உறவுகள்

--------

அவர் வந்து போட போற வெடி இந்திய வரி கட்டும் குடிமகன்களுக்கு தான்! ஜெய் ஹிந்த்.

ஜெய் கிந் என்றால்.... என்ன குழவி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு பல மொழிபெயர்ப்புகள் உண்டு. "வெற்றி இந்தியாவுக்கே" அல்லது "நீடூழி வாழ்க இந்தியா" அல்லது "இந்தியா வாழ்க" என்று கூறலாம்.

நீங்கள் எங்கட அர்ஜுன், விஜயகாந்த் படங்கள் பார்கிறதில்லையே? <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.