Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்றைய ஜோக்குகள்!!!

Featured Replies

அரசியல் தீர்வு மற்றும் சமகால பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஐனாதிபதி அவர்களுடன் பேச்சுவார்த்தை!

11.11.2010 - வியாழக்கிழமை

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் சமகாலத்தில் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் பல்வேறு வாழ்வாதார விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்று மதியம் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

இச் சந்திப்பின்போது பிரதான விடயமாக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான யாழ் நாவற்குழி நிலத்தில் தென்னிலங்கை மக்கள் சட்ட விரோதமான முறையில் குடியேறியிருக்கும் விடயம் குறித்து ஈ.பி.டி.பி தரப்பினரால் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

எந்த மக்கள் சமூகமாக இருப்பினும் அவர்கள் விரும்பிய பிரதேசங்களில் வாழ்வதற்குரிய ஜனநாயக உரிமைக்கு தாம் மாறானவர்கள் இல்லை என்றும் ஆனாலும் இனங்களுக்கிடையிலான மனக்கசப்புகளை உருவாக்கும் வகையிலான சட்ட விரோத குடியேற்றங்கள் இன ஐக்கியத்திற்கு விரோதமான ஒரு நடவடிக்கையாகும் என்றும் ஈ.பி.டி.பி தரப்பினரால் ஜனாதிபதி அவர்களிடம் எடுத்து விளக்கப்பட்டிருந்தது.

நாவற்குழியில் குடியேறியிருக்கும் தென்னிலங்கை மக்களை ஏற்கனவே சந்தித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்விடயம் குறித்து ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்கு தனக்கு 3 மாத கால அவகாசம் தேவை என ஏற்கனவே தெரிவித்திருந்ததை ஜனாதிபதி அவர்களுக்கு ஞாபகப்படுத்தியிருந்ததோடு அந்த மக்கள் ஏற்கனே யாழ் குடாநாட்டில் சொந்த இருப்பிடங்களில் வாழ்ந்தமைக்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்றும் அவர்களில் சிலர் வாடகை வீடுகளில் மட்டுமே யாழ் குடாநாட்டில் தங்கியிருந்திருக்கின்றார்கள் என்றும் ஈ.பி.டி.பி தரப்பில் எடுத்து விளக்கப்பட்டதோடு யாழ் மாவட்டத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களில் நிலமற்ற மக்கள் தொகையினர் அதிகமாக உள்ளர் என்றும் அவர்களுக்கான நிலப்பங்கீடு என்பது இதுவரை வழங்கப்படாத ஒரு சூழலில் தென்னிலங்கையில் இருந்து வந்திருந்த மக்கள் சட்ட விரோதமாக நாவற்குழி நிலத்தில் குடியேறியிருப்பது யாழ் மாவட்ட நிலமற்ற மக்கள் மத்தியில் கசப்புணர்வுகளையே உருவாக்கும் என்றும் ஜனாதிபதி அவர்களிடம் எடுத்து விளக்கப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி அவர்கள் அரசாங்கத்திற்கு சங்கடத்தை உருவாக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களை சிலர் திட்டமிட்டு தூண்டி விட்டிருக்கலாம் என்று தெரிவித்திருந்ததோடு ஈ.பி.டி.பி தரப்பில் இருந்து எடுத்து விளக்கப்பட்ட நியாயங்களை தான் புரிந்து கொள்வதோடு இது குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் தமிழ் மக்கள் முகங்கொடுத்து வரும் சமகால பிரச்சினைகளில் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதார வசதிகளை மேலும் உருவாக்கி கொடுப்பதோடு எஞ்சியுள்ள சிறுதொகை மக்களும் மீள்குடியேறுவதற்கான தடைகளை விரைவாக அகற்றி அவர்களுக்கான அர்த்தமுள்ள மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனதிபதி அவர்களின் கவனத்திற்கு எடுத்து சொல்லப்பட்டிருந்தது.

கட்டம் கட்டமாக நீக்கப்பட்டு வரும் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பிரதேசங்கள் குறித்து பேசப்படுகையில் எஞ்சியுள்ள பிரதேசங்களிலும் உள்ள கண்ணி வெடிகளையும் விரைவாக அகற்றி அங்கு மக்களை மீள் குடியேற்றம் செய்வதோடு அவர்களுக்கான இயல்புவாழ்க்கையை விரைவாக உருவாக்கி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையிலான ஈ.பி.டி.பி தரப்பினருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையிலான இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டது. அத்துடன் யாழ் பல்கலைக்ழகத்தின் அபிவிருத்தி குறித்தும் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் இந்திய அரசின் உதவியுடன் விரைவாக ஆரம்பிப்பது குறித்தும்

கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும் அரசியல் தீர்வு குறித்து 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிலிருந்து ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வும் சம உரிமையும் என்ற இலக்கை எட்டுவதே சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் நடைமுறைக்குச் சாத்தியமானதும் என்றும் எடுத்து சொல்லப்பட்டதோடு அதற்கான அடுத்த முன்னேற்பாடாக வட மாகாண சபைக்கான தேர்தலையும் நடத்த வேண்டும் எனவும் அதன்பின்னர் 13 வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு இருக்க வேண்டிய அதிகாரங்கள் யாவும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்களே 13 திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்துவது குறித்து பகிரங்கமாக தெரிவித்து வருகையில் அதை விரைவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சென்றிருந்த ஈ.பி.டி.பி தரப்பினரால் ஜனாதிபதி அவர்களிடம் வலியுறுத்தி கேட்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களுடனான இச்சந்திப்பின்போது ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் தரப்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றம் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களோடு பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவரும் யாழ் மாவட்ட ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் கே. தயானந்தா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

தகவல் தொடர்பு செயலாளர்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஈ.பி.டி.பி

***********************************************************************************************************************************************

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் : ஊடக அறிக்கை

PLOTE_Bannerதமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாடு ஜப்பசி மாதம் 30ம் 31ம் திகதிகளில் ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் இடம்பெற்றது. இந்த மகாநாட்டில் சுவிஸ், ஜேர்மன், இங்கிலாந்து, பிரான்ஸ்,நோர்வே, கனடா நாடுகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருந்த தலைவர் சித்தார்த்தன் அவர்கள் குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில், நீண்டகால இனப்பிரச்சினைக்கு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தின் முழு அதிகாரத்தையும் அமுல்படுத்துவதன் மூலம் ஒர் ஆரம்ப நடவடிக்கையாக கொள்வதுடன், இலங்கை தீவில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் சகல ஜனநாயக உரிமைகளையும் இலங்கை தமிழ் பேசும் மக்கள் தாமும் அனுபவிக்கின்றோம் என்று திருப்திபடும் வகையில் முழுமையான அரசியல் தீர்வை இலங்கை அரசு முன் வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

PLOTE_Conference_31Oct10இந்த இனப்பிரச்சினை தீர்வில் (இலங்கை - இந்தியா ஒப்பந்தம்) 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா தனது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த கால இந்த ஆயதபோராட்டத்தினை ஆரம்பித்து வைத்தவர்களில் நாமும் ஒருவர் என்ற ரீதியில் ஏற்பட்ட மக்கள் அழிவுகளுக்கு நாம் மிகுந்த வேதனைப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களிற்கு எம்மால் ஆன உதவிகளை செய்யவதற்குரிய வேலை திட்டங்களை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இன்நிலையில் பலவீனமாகவுள்ள தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்து ஒரு தீர்க்கமான அரசியல் தீர்வுக்கு அரசு முன்வரவேண்டும் என்பதில் பாரியளவு பங்களிப்பை புலம்பெயர் தமிழ் சமூகம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகின்றோம்.

சர்வதேச செயற்பாட்டு குழு சார்பில்

செ.ஜெகநாதன்

தமிழீழ மக்கள் விடுதலை கழகம்

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.