Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்டாவது பதவிக்கால இலக்குகளை அறிவித்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

Featured Replies

"தாய்நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் தேசிய ஐக்கியத்தையும் உறுதிப்படுத்துவதன் மூலம் உலகின் உன்னத தேசங்களின் மத்தியில் சிறப்பு மிக்க நாடாக இலங்கையை மிளிரச் செய்வதே தமது முதலாவது இலக்கு' என்று தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ "அணிசேராமையே' அரசாங்கத்தின் கொள்கையென திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலக முன்றிலில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இரண்டாவது பதவிக்காலத்துக்கு பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மகிந்த ராஜபக்ஷ எமக்கு பகைநாடுகள் என்று எதுவும் இல்லை. அந்த மாதிரியான குழுக்களையோ, அணிகளையோ நாம் கொண்டிருக்கவில்லை. தேசிய பாதுகாப்புக்காக பலநாடுகளுடன் நாம் உடன்படிக்கை செய்துகொண்டிருந்தோம். நட்புறவு கொண்டிருந்தோம்.இப்போது அபிவிருத்திக்கான சகாப்தத்தில் காலடி எடுத்துவைத்துள்ளோம்.இந்த முயற்சிகளுக்கு உதவ முன்வருவோருக்கு நாம் எமது நட்புக்கரங்களை நீட்டுகின்றோம் என்று கூறியுள்ளார்.

சகல விதமான அபிப்பிராயங்களையும் பொறுமையுடன் சகித்துக்கொள்ளும் ஞானம் எமக்கு பாரம்பரியமாகவே உள்ளது.முதிர்ச்சியான தீர்மானங்களை எடுப்பதற்கான அறிவும் உள்ளது.எமது பிரச்சினைகள் மோதல்களைப் புரிந்து கொண்டு அவற்றுக்குத் தீர்வு காணும் பாரம்பரியத்தையும் நாம் கொண்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமதுரையில் தெரிவித்ததாவது;இன்று நான் நாட்டைப்பொறுப்பேற்பது எனது தாய்நாட்டை உலகின் சிரேஷ்ட நிலைக்கு உயர்த்தி வைக்கக்கூடிய பலம்பொருந்திய சக்தியுடனாகும்.நீங்கள் இப்போது உங்கள் கால்களைப்பதித்திருப்பது ஐந்து வருடங்களுக்கு முன்னர் இன்று போல் ஒரு தினத்தில் என்னிடம் ஒப்படைத்த நாட்டைவிடவும் மிகவும் சிரேஷ்டமான நிலைக்கு உயர்த்தப்பட்ட தாய்நாட்டின் மீது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.

இந்த நாட்டின் பிரஜைகளான நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை மிகவும் நல்லமுறையில் நிறைவேற்றிய பின்னரே இன்று உங்கள் முன் நிற்கின்றேன்.மிகவும் உன்னதமான நாட்டை கட்டியெழுப்பியதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றக் கிடைப்பதைப்போன்று மனநிறைவான திருப்தி,சந்தோஷம் ஒரு தலைவருக்கு வேறு இருக்க முடியாது.எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது.ஐந்து வருடங்களுக்கு முன்னர் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி இந்த இடத்திலிருந்துதான் நாட்டைப் பொறுப்பேற்றேன்.அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது.நாம் வானம்,பூமி,குமுறி வெடித்தாலும் ஆட்டம் காணாத மக்களைப்போன்று தைரியமாக இரவு பகல் பாராது பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்து பொறுமையுடனும் பொறுப்புடனும் செயலாற்றினோம்.

அதன் பின்னர் இன்னுமொரு 19 ஆம் திகதி அதாவது கடந்த வருடம் மே மாதம் 19 ஆம் திகதி நாம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி பாரிய வெற்றியை ஈட்டி தேசத்தை ஒன்றுபடுத்தினோம்.மீண்டும் இன்றைய நவம்பர் 19 ஆம் திகதி நாட்டை பொறுப்பேற்பது எனது தாய்நாட்டை உலகின் சிரேஷ்டமான நிலைக்கு உயர்த்திவைக்கும் எதிர்பார்ப்பு,தைரியத்துடனேயேயாகும் என்பதை உங்களுக்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.மகிந்த சிந்தனை தொலைநோக்கின் மூலம் எமது நாட்டை உலகின் உன்னத நிலைக்கு நிச்சயமாக உயர்த்திக்காட்டுவேன்.2005 இல் மகிந்த சிந்தனையை உங்கள் முன்வைத்து பெற்றுக்கொண்ட ஆணையின் மூலம் அதனூடாக மேற்கொண்ட பயணத்தின் மூலம் நாட்டை பேரழிவிலிருந்து விடுதலை செய்துகொண்டு ஒரே இலங்கையை உருவாக்கினேன்.இன்று முதல் நாம் மகிந்த சிந்தனை தொலைநோக்கை செயற்படுத்தி நாட்டை உலகின் உன்னத நிலைக்கு உயர்த்திக்காட்டுவோம்.2005 இல் எம்மிடம் காணப்பட்ட தைரியம்,பலம் என்பதைவிட இன்று பலமடங்கு கூடுதலான பலம்,சக்தி,தைரியம், அபரிமிதமான நம்பிக்கை என்பவற்றுடனேயே இன்று நாட்டை பொறுப்பேற்கின்றேன்.

இந்த நாட்டு மக்களில் 80 சதவீதமானோர் வாழும் 16 ஆயிரம் கிராமங்களையும் கட்டியெழுப்புவதற்கு நாம் 2005 மகிந்த சிந்தனை மூலம் தீர்மானித்தோம்.இன்று கொழும்புக்கு வெளியே நகரங்களில், கிராமங்களில் அன்று காணப்பட்ட இருள் சூழ்ந்த நிலை இல்லை.முழுநாடும் புத்தொளி பெற்றிருப்பதை உங்கள் இதயங்களும் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.ஐந்து துறைமுகங்கள் உருவாக்கப்படும்போது அவற்றைச் சூழவுள்ள கிராமங்கள்,நகரங்கள் அதிஉன்னதமான பொருளாதார வலயங்களாக மாற்றம்பெறுகின்றன.அன்றைய ஏகாதிபத்தியகாலம் தொட்டு கவனிக்கப்படாத கிராமப்புறங்களை முன்னேற்றமடையச் செய்து புதிய கைத்தொழில்கள், பாரிய வர்த்தக நடவடிக்கைகள்,புதிய தொழில்வாய்ப்புகளுக்கு தேசத்தின் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதை இந்தவேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்தப்பாரிய அபிவிருத்திப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் போது நாட்டில் மேலும் பல பெரிய நகரங்கள் உருவாக முடிகிறது.அப்போது இலங்கை நாடு புது மலர்ச்சி பெறும் வாய்ப்பு உருவாகின்றது.வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களானது அரசியல் தீர்வின் பிரதான அங்கமாகும் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.நாம் ஆரம்பித்திருக்கும் பாரிய மின் உற்பத்தி நிலையங்கள் காரணமாக 2012 ஆம் ஆண்டாகும் போது நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்சாரம் கிட்டப்போகின்றது.பயங்கரவாதத்திடமிருந்து மீட்கப்பட்ட நாடு 2012 இறுதியாகும் போது காரிருளுக்குள் மூழ்கியிருந்த நாட்டை ஒளிமயமான நாடாக மாற்ற முடிகிறது.அதுமட்டுமல்ல இந்த மின்சாரத்தால் நாட்டில் ஆயிரக்கணக்கான கைத்தொழில்கள் உயிரோட்டம் பெறமுடிகிறது.

ஒரு துளித்தண்ணீரைக்கூட கடலில் கலக்கவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று எமது நாட்டை ஆண்ட மன்னர்கள் வழங்கிய ஆலோசனையை நாம் மீள எண்ணிப்பார்த்து நாட்டிலுள்ள அனைத்து குளங்கள், நீர் நிலைகளையும் அபிவிருத்தி செய்து வருகின்றோம்.ஒரு நீர்நிலையைக்கூட தூர்ந்து போகவிடமாட்டோம்.எதிர்காலத்தில் நாட்டில் உணவுப்பஞ்சத்துக்கு இடமளிக்கப்போவதில்லை.எமது உள்ளூர் உணவு உற்பத்தியால் வயிறு நிரம்பும் போது உள்ளம் நிம்மதியடைய முடியும்.இப்போது எம்முன்னிருப்பது நாட்டுக்காக நாமனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டிய காலமாகும்.எந்தத் தொழிலாக இருப்பினும் அதனை நாட்டுக்குப் பயன்தரக்கூடியதாக வருமானமீட்டக்கூடியதாக மாற்றியமைக்கவேண்டும்.அதனைச் செய்வதில் அரசு முன்னுரிமை வழங்கத் தீர்மானித்துள்ளது.எமது மக்களின் சக்தி கூலிவேலைக்கோ அடிமை வேலைக்கோ வீணாக்கப்படக்கூடாது.வளம் கொண்ட சக்தியாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

எமது இளம் சந்ததி குறித்து எமக்கு பாரிய எதிர்பார்ப்புகள் உள்ளன.எமது இளைஞர்கள் முப்படைகளில் இணைந்து உலகமே வியக்கும் வகையில் பாரிய வெற்றியை ஈட்டிந்தத்ததை வாழ்நாள் பூராவும் மறக்கமுடியாது.தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நினைவு கூர்வதோடு எனது அன்புக்கும் பாசத்துக்கும் உரிய பிள்ளைகளின் சக்தி,பலம் குறித்து நான் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.இந்த எமது எதிர்காலச்சந்ததியை நவீன தொழில்நுட்ப உலகத்தின் பக்கம் அழைத்துச் செல்வதே என் ஒரே எதிர்பார்ப்பாகும்.

எமது எதிர்காலச்சந்ததி மூன்று மொழிகளிலும் முழுமையான அறிவைப்பெற்ற சந்ததியாக உருவாக்கப்படவேண்டும்.அதற்கு கணினிக்கல்வியை எதிர்காலத்தில் 75 சதவீதத்தால் அதிகரித்து அதனூடாக அவர்களை நவீன தொழில்நுட்ப உலகின் பக்கம் கொண்டு செல்லத்திட்டமிட்டுள்ளோம். உலகில் வாழ்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் எமது நாடு முன்னணியில் இருக்கவேண்டுமென்பதே எமது இலட்சியமாகும்.அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.வசதிகள் நிறைந்த அன்பு,பாதுகாப்பு,நேசம் கொண்ட இளம் சமுதாயம் கட்டியெழுப்பப்படும் போது இன,மத,மொழி,குல பேதம், அரசியல் குரோதம் என்பவற்றை துடைத்தெறிய முடியும்.

எந்தச் சவாலையும் கண்டு நாம் பின்வாங்கப் போவதில்லை.முடியாது என்று ஒன்று எம்மிடம் இருக்கக்கூடாது.நம்பிக்கையுடன் முடியும் என்ற உறுதியான மனநிலையில் செயற்பட்டால் நிச்சயம் எம்மால் எந்தச் சவாலையும் வெல்லமுடியும்.எமக்குத் தேவைப்படுவது பாதாள உலகமில்லாத, சட்டவிரோத செயற்பாடு இல்லாத கப்பம்,சட்டவிரோத ஆயுதம், போதைப்பொருட்கள் எதுவுமில்லாத தூய்மையான நாடாகும்.ஊழல் மோசடியற்ற நாடாகும்.அந்தப் புனிதமான நாட்டை மிகக் குறுகிய காலத்துக்குள் உருவாக்குவோம்.

உலகில் எந்தவொரு நாடும் பெறமுடியாத மக்களாணையை எமது நாட்டு மக்கள் எனக்கும் எமது அரசுக்கும் பெற்றுத்தந்துள்ளனர்.இந்தப்பாரிய வெற்றியினூடாக எமது நாடு எதிர்காலத்தில் ஈட்டப்போகின்ற பாரிய வெற்றியின் பங்காளிகளாக இணையவேண்டும் என்பதே எனது பெருவிருப்பமாகும்.அரசியல் பேதங்களை மறந்து முரண்பாடுகளை புறந்தள்ளி எல்லோரும் ஒன்றிணையவேண்டுமென நான் நாட்டு மக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

இன,மத,மொழி பேதங்களை மறந்து,முரண்பாடுகளை களைந்து நாம் அனைவரும் ஒருதாய் மக்களாக ஒன்றுபட்டால் இந்த உலகில் எம்மை வெல்வதற்கு எந்தச் சக்தியாலும் முடியாது.தாய் மண்ணில் அனைவரும் ஒரு தாய்மக்களாய் ஒன்றுபடுவோம்.உலகின் உன்னதமான நாடாக எமது நாட்டை கட்டியெழுப்ப உறுதிகொள்வோம் என ஜனாதிபதி தமதுரையில் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=1611:2010-11-20-04-33-37&catid=34:hotn-news&Itemid=99

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.