Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்குச் சந்தை சரிவுக்கு வழிவகுத்த

Featured Replies

மும்பை, நவ.23:

வாரத்தின் முதல் நாளான திங்களன்று ஏற்றம் பெற்ற பங்குச் சந்தை அடுத்த நாளே சரிவைச் சந்தித்தது. வட கொரியா, தென் கொரியாவில் போர் பதற்ற சூழல் உருவானது மும்பை பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. காலையில் வர்த்தகம் தொடங்கியதும் பங்குகளின் விலைகள் மளமளவென சரியத் தொடங்கின. குறியீட்டெண் 615 புள்ளிகள் சரிந்தது. கடந்த 15 மாதங்களில் பங்குச் சந்தையில் புள்ளிகள் இந்த அளவுக்கு சரிந்தது கிடையாது. பின்னர் படிப்படியாக நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டது. வர்த்தகம் முடியும்போது 265 புள்ளிகள் சரிந்து 19,691 புள்ளிகளானது. இதே போல தேசிய பங்குச் சந்தையிலும் கடுமையான ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. வர்த்தகம் முடியும்போது 75 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,934 புள்ளிகளாக இருந்தது.

சர்வதேச அளவில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவது அதிகரித்துள்ளது. வட கொரியா, தென் கொரியா நாடுகளிடையிலான எல்லையில் போர் பதற்றம் உருவாகியுள்ளதாக வெளியான தகவல்கள் பங்குச் சந்தையை கடுமையாக பாதித்தன.

முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 28 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மாருதி சுஸýகி, ஹிந்துஸ்தான் யூனி லீவர் நிறுவனப் பங்குகள் மட்டும் லாபம் ஈட்டின.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் விலை மிக அதிகபட்சமாக | 17.20 சரிந்து | 994.90-க்கு விற்பனையானது. இன்ஃபோசிஸ் பங்கு விலை 28.80 சரிந்து | 3,013.30-க்கு விற்பனையானது.

ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, பிஹெச்இஎல், டாடா மோட்டார், டாடா பவர், டாடா ஸ்டீல், ஏசிசி, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகளின் விலையும் சரிவிலிருந்து தப்பவில்லை.

கட்டுமான நிறுவனப் பங்குகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக உலோக நிறுவனங்களின் பங்குகளின் விலையும் சரிந்தன.

கொரியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மட்டும் சரிவுக்குக் காரணம் அல்ல. 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் முதலீடுகளைத் தேர்வு செய்ததும் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

உலோக நிறுவனங்களில் ஸ்டெர்லைட் நிறுவனப் பங்குகள் 2.11 சதவீதமும், ஹிண்டால்கோ 2.09 சதவீதமும், டாடா ஸ்டீல் 1.79 சதவீதமும், ஜிண்டால் ஸ்டீல் 1.39 சதவீதமும் சரிந்தன.

தொலைத் தொடர்பு நிறுவனங்களில் தொடர்ந்து ஏறுமுகத்தைச் சந்தித்து வந்த ஏர்டெல் நிறுவனப் பங்குகள் 2.3 சதவீதம் சரிவைச் சந்தித்தது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகளின் விலை 2.18 சதவீதம் குறைந்தது. பங்குச் சந்தையில் இத்தகைய நிலை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

ஆசிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தை 1.94 சதவீதமும், ஹாங்காங் பங்குச் சந்தை 2.67 சதவீதமும் சரிந்தன.

http://www.dinamani.com/edition/Story.aspx?

===================================

Investors were unsettled by reports that North Korea launched dozens of rounds of artillery at a South Korean island near the two nations’ western border. South Korean forces then reportedly fired back. According to Reuters, South Korea’s military is now at its highest level of peacetime alert.

http://www.marketwatch.com/story/us-futures-lower-on-korea-europe-debt-concerns-2010-11-23?siteid=yhoof

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.