Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை வீட்டில் மூன்று பகைக் கிரகங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வீட்டில் மூன்று பகைக் கிரகங்கள்

பாம்புக்கு எதிரி கீரி.எலிக்கு பகை பூனை. புலியால் சைவம் உண்ண முடியாது. இறைவனின் படைப்பில் புலி மாமிசத்தைத் தவிர வேறு எதனையும் உண்ண முடியாது-உண்ணவும் கூடாது. தவளையாயின் யமன் அதன் வாயிலேயே இருக்கிறான்.இந்த நியதிகள் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம், மதத்துக்கு மதம், மொழிக்கு மொழி என்றவாறும் இருக்கவே செய்கிறது.

வெள்ளையர்களுக்கு கறுப்பர்களைப் பிடிப்பதில்லை.சிலுவைப் போருக்கு முடிபேயில்லை. சிங்களம் தமிழைநேசிப்பதில்லை.இப்படியே காலங்கடக்கிறது.நிலைமை இதுவாக இருக்கையில்,உலக நாடுகள் எல்லாம் பிரச்சினைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் அடைந்துள்ளன என்றே கூறவேண்டும். இவ்வாறு வெற்றி கிடைப்பதற்குக் காரணம் ‘வல்லமை’ என்பதேயாகும்.

வெள்ளையர்களோடு போராடும் பலம் கறுப்பர்களுக்கு இருந்தமையால் இரு இனத்தாரும் ஒரே வண்டியில் பயணம் செய்ய முடிந்தது.சிலுவைப் போரின் மந்தத்திற்கும் இரு தரப்புப் பலமே காரணம் எனலாம்.சீனாவுடன் முண்டுவதற்கு இந்தியாவும், இந்தியாவை எதிர்ப்பதற்கு சீனாவும் துணிந்தில. காரணம் இரு நாடுகளினதும் வல்லமையே ஆகும்.

ஈழத் தமிழர்கள் இப்போது வல்லமையற்றவர்களாகி விட்டனர்.வல்லமை பறிபோனமைக் கான காரணங்களை ஆய்வு செய்து ‘ நீயா’ ‘நானா’ நிகழ்ச்சி போன்று விவாதம் நடத்துவது அழகல்ல.அதைச் செய்திருக்க வேண்டிய காலம் கடந்து விட்டது.எனவே அதையயல்லாம் விட்டு விடலாம்.

இப்போது ஈழத்தமிழர்கள் வல்லமை இழந்தவர்கள் என்பதை ஏற்றுத்தானாக வேண்டும். எனவே வல்லமையற்ற எங்களை இலங்கை அரசோ அல்லது இந்தியாவோ பெறுமானத்தோடு பார்க்கப் போவதில்லை என்பது நிறுத்திட்டமான உண்மை. இந்தியாவைப் பொறுத்தவரை சீனா, பாகிஸ்தான் மீதே அதன் கவனிப்பு இருக்கும்.அந்தக் கவனிப்பின் ஊடாக இலங்கைக்குள் இந்தியா கால் பதிக்கவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. அந்தத் தேவைப்பாடு நடந்து கொண்டிருக்கின்றதென்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.

அதே சமயம் புத்தியைப் பிரயோகித்து ஈழத் தமிழர்கள் பெறுமதியானவர்கள் என்பதை நிரூபிப்பதே இப்போது எங்கள் முன் இருக்கும் முக்கிய பணியாகும். அதற்கு என்ன செய்யலாம்? சீனா, இந்தியா, பாகிஸ்தான் என்ற பகைக் கிரகங்கள் ஒன்றாக இலங்கை வீட்டில் வந்துள்ளன. அவை இப்போதைக்கு வக்கிரமடையப் போவதில்லை.நாங்கள் வேதம் ஓதுவம் .பகைக் கிரகங்கள் எந்த வீட்டில் நின்று மோதினாலும் அந்த வீட்டிற்குத்தான் சேதம்.

மின்னஞ்சலில் வந்தது.

"அதே சமயம் புத்தியைப் பிரயோகித்து ஈழத் தமிழர்கள் பெறுமதியானவர்கள் என்பதை நிரூபிப்பதே இப்போது எங்கள் முன் இருக்கும் முக்கிய பணியாகும். அதற்கு என்ன செய்யலாம்? "

ஒன்று, எங்கள் பொருளாதாரபலம். எம்மிடம் உள்ள பண பலத்தை பெருக்கி, வளர்த்து அதன் மூலம் ஈழத் தமிழர்கள் பெறுமதியானவர்கள் என்பதை நிரூபிக்கலாம்.

இரண்டு, இந்தியா ஈழத் தமிழர்களை எதிரிகளாக பார்த்தாலும், சிங்களவர்களை விட ஈழத் தமிழர்கள் மேல் என எண்ணும் நிலை உருவாக்கப்படல் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.