Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எஸ்.எம். கிருஷ்ணா ஏன் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக்கிழமை, 28, நவம்பர் 2010 (10:36 IST)

எஸ்.எம். கிருஷ்ணா ஏன் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார்

என்பது அம்பலமாகியுள்ளது: பழ. நெடுமாறன்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.

இது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’இலங்கையில் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதும், இனப் பிரச்னைக்கு படிப்படியாக தீர்வு காணும் வகையில் பேச்சு வார்த்தை நடத்துவதுமே இப்போது முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.

அவற்றை இலங்கை அரசு நிச்சயம் செய்யும் என நம்புகிறோம் என இந்திய - இலங்கை கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எம்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.

மேலும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை மீண்டும் சொந்த இடங்களுக்கு குடியமர்த்துவது விரைவாக நடைபெறவில்லை என தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது,

முதல்வரின் கவலை நியாயமானதுதான். ஆனால் இலங்கை அரசுக்கு உள்ள சிரமங்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என கிருஷ்ணா கூறியுள்ளார்.

ஆனால், இவருடைய கூற்றை மறுக்கும் வகையில் ’போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதையும், மனிதாபிமான பிரச்சனைகளைத் தீர்ப்பதையுமே இலங்கை அரசு முக்கியமாகக் கருதுகிறது’ என கூட்டுக் குழு கூட்டத்துக்குப் பின் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எஸ். பெய்ரிஸ் பேட்டி அளித்துள்ளார்.

இதன் மூலம் உள் நாட்டிலேயே இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிவரும் பல லட்சம் தமிழர்கள் குறித்து எஸ்.எம். கிருஷ்ணா சிறிதும் கவலைப்படவில்லை என்பது தெரிகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பொருளாதாரப் பங்களிப்பு உடன்பாடு செய்வது குறித்து மட்டுமே அவர் பேசியுள்ளார்.

காவிரி படுகையிலும் மன்னார் கடல் பகுதியிலும் எண்ணெய் எடுப்பதற்கு இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது. திரிகோணமலை மாவட்டத்தில் சாம்பூரில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைத்துத்தர இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளன.

மேலும் வட இலங்கையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு 2 ஆயிரம் கோடி வரை நிதியுதவி அளிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதுபோன்ற பொருளாதார உதவிகள் மூலம் சீனா பிடியிலிருந்து இலங்கையை மீட்டுவிட முடியும் என இந்தியா நம்புகிறது. இதற்காகவே எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது’’ தெரிவித்துள்ளார்.

nakkheeran

மொத்தத்தில் தமிழரை அடிமையாக்கிய சிங்களம் தன் ஒரு பகுதியை சீனாவுக்கும் மறுபகுதியை இந்தியாவுக்கு விற்க வேண்டிய கட்டாயத்துக்குள் உள்ளது. இதனால் "பொருளாதார சுதந்திரத்தை / இறையாண்மையை " இழந்துள்ளது.

எதிர்காலத்தில் சிங்களம் ஒரு நேற்றைய கிரேக்க நாடாயும் இன்றைய அயர்லாந்தையும் நாளைய போர்த்துக்கல்லையும் நினைவுபடுத்துகின்றது.

Edited by akootha

இந்திய சொறிநாய்கள் ஆப்கானிஸ்தான் நோக்கி ஓடவேண்டிய காலம் கனிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.