Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவிடம் நிதி வாங்கி அல் கொய்தா மூலம் அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்ற பாகிஸ்தான். விக்கிலீக்ஸ் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்

Featured Replies

விக்கிலீக்ஸ்’ இந்தப் பெயர்தான் அமெரிக்காவை இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தயவு செய்து ராணுவ ரகசியங்களை வெளியிட்டு விடாதீர்கள் என்று ‘விக்கிலீக்ஸி’டம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள். அமெரிக்காவையே மிரள வைத்த இந்த ‘விக்கிலீக்ஸ்’ பற்றி பார்ப்போம்.

‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் ஜூலியன் அசாங்கே என்ற ஆஸ்திரேலியரால் ஆரம்பிக்கப்பட்டது. நார்வே, ஸ்வீடன், ஐஸ்லாந்து நாடுகளில்தான் இந்த இணையதளத்தின் சர்வர் இயங்கி வருகிறது.

அடக்குமுறை அரசுகளின் அராஜகத்தையும்,ஊழல் மன்னர்களின் ஊழலையும் வெளிக்கொணர்வது தான் இந்த இணையதளத்தின் நோக்கம். ஒவ்வொரு நாட்டிலும் கம்ப்யூட்டர் ஹாக்கிங் நிபுணர்களும், தகவல் தரும் ஆர்வலர்களும் இணைந்து தான் இந்த இணையதளத்தை இயக்குகிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவுக்கு இவ்வளவு தான் பங்கு,மீதிப் பணத்தை இவர்தான் அடித்தார் என்று நமக்குக் கிடைத்த தகவல்களை ஆதாரத்தோடு ‘விக்கிலீக்ஸ்’இணையதளத்துக்கு அனுப்பி விட்டால் போதும், அதை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது அவர்கள் வேலை.

தகவல் அனுப்பியவர் பற்றிய விவரங்களை மிகப் பத்திரமாக வைத்திருப்பார்கள்.

‘விக்கிலீக்ஸ்’ இதுவரை ஐந்தரை லட்சம் பக்கங்களில் பல்வேறு ஊழல்களையும்,ரகசியங்களையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. ஐரோப்பாவின் மெகா வங்கி ஊழல்களையும், செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர விபத்தில் இறந்தவர்களின் கடைசி மொபைல் பேச்சுக்களையும் ‘விக்கிலீக்ஸ்’தான் வெளியிட்டது.

‘விக்கிலீக்ஸ்’ பற்றி பல நாடுகள் அதிருப்தி தெரிவித்திருந்தாலும், பெண்டகன் ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’வெளியிடும் நேரம் வரை அதுகுறித்து யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. கடந்த ஜூலை 25-ம் தேதிதான் இந்தப் பரபரப்புகளின் முதல் நாள்.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் சேகரித்து வைத்திருந்த பல ராணுவ ரகசியங்கள் அடங்கிய 90ஆயிரம்பக்க தகவல்களை அன்றுதான் வெளியிட்டது. நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன், டெர்சீகல் உள்ளிட்ட ஐந்து நாளிதழ்கள் வழியாக இந்த ரகசியங்களை உலகிற்கு அறிவித்தது.

ஆப்கன் போர் குறித்து வெளியிடப்பட்டிருந்த பல தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தியா ஓயாமல் பேசிவரும் பாகிஸ்தான் சதி குறித்த பல தகவல்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

தீவிரவாத ஒழிப்புக்காக பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் 3 பில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. அல்கொய்தாவுடன் இணைந்து அமெரிக்கப் படைக்கு எதிராக வேலை செய்ததை ‘விக்கிலீக்ஸ்’வெளியிட்டது. பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பணம் வாங்கிக் கொண்டு ஐ.எஸ்.ஐ. மூலம் தாலிபான்களுக்குப் பணமும் கொடுத்து,அமெரிக்க ராணுவ வீரர்களைக் காட்டியும் கொடுப்பது அம்பலமானது.

ஆப்கனில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு விஷம் கலந்த பீர் பாட்டில் கொடுத்தது,பாகிஸ்தான் ராணுவம் தாலிபான்களுடன் இணைந்து அமெரிக்கப் படையைக் கொன்றது, தாலிபான்கள் அமெரிக்கப் படையைத் தாக்கியதும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது என பல தகவல்கள் ‘விக்கிலீக்ஸ்’ மூலம் வெளியானது.

கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆப்கனில் உள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டு 58 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.இப்படி ஒரு தாக்குதலை ஐ.எஸ்.ஐ. நடத்தப் போவதாக போலந்து உளவுப்பிரிவு அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தது. ஆனாலும் அந்தத் தாக்குதல் நடைபெற்றது என்கிற அதிர்ச்சித் தகவலையும் ‘விக்கிலீக்ஸ்’ வெளியிட்டது.

இந்தத் தகவல்கள் எதுவும் இந்தியாவுக்கோ,அமெரிக்காவுக்கோ புதிது கிடையாது. இதை உலக நாடுகளிடம் பல்வேறு குரல்களில் இந்தியா தொடர்ச்சியாகக் கூறிவருவதுதான்.அமெரிக்காதான் ரகசியமாக பாகிஸ்தான் குறித்து சேகரித்து வைத்திருந்த தகவல்கள்தான் இவை. இப்போது அதை ‘விக்கிலீக்ஸ்’ வெளியிட்டுள்ளது அவ்வளவுதான்.

ஆனால், இந்தத் தகவல் தெரிந்து பாகிஸ்தான் பதற்றப்படவே இல்லை. அது மேலும் மேலும் அமெரிக்காவிடம் தீவிரவாதத்தை அழிக்கிறேன் என்கிற பெயரில் பணத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவும், ‘‘விக்கிலீக்ஸ் சொல்றதெல்லாம் 2009-க்கு முந்தைய கதை. இப்பல்லாம் பாகிஸ்தான் திருந்திடுச்சி’’ என்று பணத்தை வாரியிறைக்கிறது.

ஜனநாயக இந்தியாவை விட சர்வாதிகார பாகிஸ்தானை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அமெரிக்கா நினைப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். பாகிஸ்தானின் உள்நாட்டுக் குழப்பங்களும் அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் ஆப்கன் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தான தனது ஆதாரங்களை வெளியிடப் போவதாகவும், அமெரிக்கா அதுகுறித்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் ‘விக்கிலீக்ஸ்’ கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

பேச்சுவார்த்தைக்கு மறுப்புத் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ‘விக்கிலீக்ஸு’க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்,‘‘ரகசியத் தகவல்களை வெளியிடுவதால் கணக்கில்லாத உயிரிழப்புகள் ஏற்படும். ஆப்கன், ஈராக் நாடுகளில் பணிபுரியும் அமெரிக்க ராணுவ வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, அந்த ரகசிய ஆவணங்களை பெண்டகனிடம் திருப்பி அளித்து விட வேண்டும், இல்லையெனில் விபரீதமான முடிவுகளைச் சந்திக்க நேரிடும்’’என்று எச்சரித்துள்ளது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

http://www.thedipaar.com/news/news.php?id=21478

Edited by நிழலி

தமிழ் ஒட்டுண்ணிக் குழுக்களுக்கு இந்தப் புத்தி வருமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ரிப்போட்டை எழுதிய குமுதம்ரிப்போட்டர் ஒரு மண்டை கழண்டவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.