Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தக்குற்றச்சாட்டு பொறுப்பை ஜனாதிபதி, பொன்சேகாவும் வகிக்கின்றனர் – பெட்ரீசியா

Featured Replies

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செல்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகிய இருவரும் பொறுப்பாளிகள் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஷியா புடெனிஸ் சுறியிருந்ததாக விக்கிலீக்ஸ்வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை பேர், எப்படி கொல்லப்பட்டார்கள் என்பது தொடர்பான விசாரணைகளில் அதிக முன்னேற்றமின்மைக்கான ஒரு காரணம் இவ்விடயத்தில் ஜனாதிபதியும் முன்னாள் இராணுவ தளபதியும் அதிக பொறுப்பாளிகள் என்பதாகும் என கடந்த ஜனவரி 15 ஆம் திகதி அமெரிக்க ராஜதந்திரிகளுக்கு அனுப்பிய குறிப்பொன்றில் பற்றீஷியா தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஆட்சியாளர்களும் அரசாங்கங்களும் பதவியிலிருக்கும்போது தனது சொந்தப் படைகளையும் சிரேஷ்ட அதிகாரிகளையும் யுத்த குற்றத்திற்காக விசாரித்தமைக்கான உதாரணம் இல்லையென்பதை நாம் அறிவோம்” என பற்றீஷியா குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilthai.com/?p=6014

  • தொடங்கியவர்

மகிந்தாவே பிரதம போர்க்குற்றவாளி என அமெரிக்கா கருதுகின்றது

சிறீலங்காவில் கடந்த வருடம் இடம்பெற்ற போரில் பெருமளவான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் பிரதம குற்றவாளி சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா எனவும், ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற விசாரணைகளின் பிரகாரம் அது மேற்கொள்ளப்படும் எனவும் அமெரிக்கா இராஜதந்திரிகள் நம்புவதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் ஆவணங்களை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடுட்டுள்ளது.

இது தொடர்பில் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த கார்டியன் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளதாவது:

மகிந்தாவை கைது செய்யும் நடவடிக்கைகளை தமிழ் சமூகம் மேற்கொண்டு வருகின்றது. ஒக்ஸ்பேட் சபையில் இடம்பெறவிருந்த மகிந்தாவின் உரை பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற போரில் 10,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

இந்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் நாள் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றினஸ் அனுப்பிய தகவல்களின் படி, சிறீலங்கா அரசின் விசாரணைகளில் உண்மைத்தன்மை என்பது மிகவும் குறைவானதாக காணப்படுகின்றது. சிறீலங்காவில் கொல்லப்பட்ட பெருமளவான தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு மகிந்தா ராஜபக்சாவும், இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுமே காரணம் என தெரிவித்துள்ளார்.

தனது படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசு முழுமையான விசாரணைகளை நடத்தும் என்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. சிறீலங்கா மக்களின் உளவியல் மற்றும் அரசியல் உறுதித்தன்மைக்கு முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என அவர் வொசிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampress.com/2010/12/8009/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.