Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களுக்கு உடனடித்தீர்வு தற்போதைக்கு தேவையற்றது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு உடனடித்தீர்வு தற்போதைக்கு தேவையற்றது! - பேரா.கீத பொன்கலன் வலம்புரிக்கு விசேட செவ்வி

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-12 09:49:47| யாழ்ப்பாணம்]

keethaponkalannதமிழ் மக்கள் தற்போதுள்ள நிலையில் அவர்களுக்கு உடனடி அரசியல் தீர்வு தேவையற்றது. அவர்கள் தோல்வியடைந்த மனோ பாவத்தில் உள்ளதால் சில நேரங்களில் குறைந்தளவான தீர்வி னையும் ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என கொழும்புப் பல்கலைக் கழகத்தின் அரசியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஐ.கீத பொன்கலன் தெரிவித்தார். அவர் வலம்புரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்தார். அவரது செவ்வி இங்கு பிரசுரமாகிறது, கேள்வி:- தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடி யும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்:- தற்போதுள்ள சூழ்நிலையைப் பொறுத்தவரையில் உடனடியாக அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்வது சாத்தியமான தல்ல. அது விரும்பத்தக்கதுமல்ல. ஏனெனில் தமிழ் மக்கள் தோல்வியடைந்த மனோபா வத்தில் உள்ளதால் சில நேரங்களில் அவர் கள் குறைந்த தீர்வினையும் ஏற்றுக்கொண்டு விடக்கூடும். ஆகவே அதுபற்றி இப்போதைக்கு சிந்திக்கவேண்டிய தேவையில்லை.

தற்போதுள்ள நிலைமாறும் காலத்தில் எமது வளங்ளை எவ்வாறு பாதுகாத்துக் கொள் வது என்பதில் கவனம் செலுத்துவதோடு உட னடிப்பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டும். புனருத்தாரணம், குடும் பங்களை ஒன்றுசேர்த்தல், காணாமல் போ னோரை தேடிக்கண்டுபிடித்தல், விதவைகளுக்கு உதவி அளித்தல் போன்ற பிரச்சினைகள் அதிகமாகவுள்ளன. அதில் கவனம் செலுத்தும் சமநேரத்தில் அரசியல் ரீதியாக எங்களது உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற செயற்பாடுகளில் ஈடுபடு வோமாகயிருந்தால், தற்போதுள்ள இக்கட்டான நிலை மாறுகின்றபோது எமக்கான அரசியல் தீர்வுபற்றி பேசக்கூடியதாக இருக்கும். எனவே தற்போதுள்ள நிலையில் அரசியல் தீர்வு பற்றி பெரிதாக தமிழ் மக்கள் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

கட்சிகள் ஒன்றிணைவதால் எந்தப் பலனும் ஏற்படாது

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரங்கமும் இணைவது எந்தளவுக்கு நன்மைகளை ஏற்படுத்தும்?

பதில்:- இது குறித்து யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தில் இடம்பெற்ற இராமநாதன் நினைவுப் பேருரையில் நான் சுட்டிக்காட்டி யிருந்தேன். எங்களின் கடந்தகால அரசிய லின் பலவீனம் என்னவென்றால் ஒரே கட்சி, ஒரு குடும்பம், ஒரு தலைவன் என்ற நிலையில் இருப்பதே. இதனால் பல பிரச்சினைகள் ஏற் பட்டுள்ளன. தெற்கைப் பொறுத்தவரையில் அவர்கள் எங்களை விட புத்திசாலிகளாக இருந்திருக் கிறார்கள். அவர்கள் எப்போதும் இரண்டு கட்சி களை வைத்திருப்பார்கள். ஒன்று இல்லாவிட் டால் மற்றையதோடு இணைந்திருப்பர். இதனால் ஒரு கட்சிக்குப் பயந்து மற்றைய கட்சி மக்களுக்கு சேவைசெய்ய முன்வரும். ஒரு கட்சியில் விருப்பம் இல்லாவிட்டால் மற்றைய கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். என் றொரு நிலையே தெற்கில் காணப்பட்டது.

ஆனால் தமிழ் மக்களுக்கு அவ்வாறில்லை. எங்களுக்கு எப்போதும் ஒரு கட்சிதான், ஒரு தலைவன் தான். எனவே இப்போதைய நிலையில் தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒருநிலைப்பாட்டிற்கு வருவதென்பது சாத்தி யமில்லை. அத்துடன் தமிழ்க்கட்சிகளை ஒன்றி ணைத்து நிறுவனம் ஒன்றினை தோற்று விப் பது சாத்தியமானதுமல்ல. தமிழ்க்கலாசாரம், தமிழ் அரசியல், தமிழ் மனோபாவம் எனப் பார்க்கின்ற போது அது சாத்தியமாகாது.

எனவே சாத்தியமில்லாத விடயம் குறித்துப் பேசுவதில் எந்தப்பயனுமில்லை. என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், இப்போதுள்ள கட்சிகளை எவ்விதம் சேர்த்துச் செயற்படுகி றார்களோ அவ்விதம் அங்கிருந்து செயற் படுத்தட்டும். ஆனால் தமிழ் மக்களுக்கு நல்லதென்று கருதக்கூடிய பொதுவான நிலைப்பாடு ஒன் றிற்கு அவர்களை கொண்டுவர வேண்டும். அதன் மூலம் அவர்கள் தமது செயற்பா டுகளை மேற்கொள்ளுகின்றபோது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற் காக பதில்பக்கத்திலிருந்து ஒரு உந்துதல் ஏற்படும். தமிழ் மக்களின் போராட்டம் தோல் வியடைவதற்கு இந்த மத்திய மயப்படுத்தப் படாமையே காரணமாகின்றது.

எனவே எல்லாக் கட்சிகளையும் ஒன்றி ணைப்பது என்பதில் எனக்கு நம்பிக்கை யில்லை. தமிழ் அரங்கு அரசாங்கத்திற்குச் சார்பானது. அது அவ்விதமே செயற்படட்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுதந்திரமான அரசியல் கொள்கையுடைய அமைப்பு. எனவே அது வெளியிலிருந்துகொண்டு சுதந்திரமாக தனது அரசியலை மேற்கொள்ளட்டும். இந் தச் செயற்பாடு பயனுடையதாக இருக்கு மென நான் நினைக்கிறேன்.

கேள்வி:- நல்லிணக்க ஆணைக்குழு விடம் பெருமளவான பொதுமக்கள் சாட்சி யமளித்துள்ளனர். அத்துடன் தாங்களும் இக்குழு முன்னிலையில் சாட்சியளித்துள்ளீர் கள். இந்நிலையில் நல்லிணக்க ஆணைக் குழுவின் விசாரணைகள் பாதிக்கப்பட்ட மக் களுக்கு நன்மையளிக்குமா?

பதில்:- நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளித்தவர்கள் உணர்வு பூர்வமாக தங்களின் கஷ்டங்களை தெரிவித் தனர். இந்நிலையில் அவர்களின் எதிர் காலம் தொடர்பில் கதைப்பது முக்கியமானது. இத னைக் கருத்திற்கொண்டு நானும் ஆணைக் குழுவின் முன்னால் சாட்சியமளித்தேன்.இதன்போது எவ்விதம் எதிர்காலத்தில் நியாயமான ஒரு முறையை நோக்கி செல்வ தென்பது தொடர்பாக எனது கவனம் காணப் பட்டது. அதில் பல விடயங்கள் சுட்டிக்காட்டி யிருந்தேன். குறிப்பாக உண்மையான இன நல்லிணக்கம் இலங்கையில் அடையப்பட வேண்டுமாகயிருந்தால் எந்தவிதமான செயற் பாடுகள் இடம்பெற வேண்டும் என சுட்டிக் காட்டியிருந்தேன். அதில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடன டிப்பிரச்சினைகள் சிலவற்றிற்கு தீர்வுகாண் பது. குறிப்பாக பிரிந்திருக்கின்ற குடும்பங்க ளை எவ்விதம் ஒன்றுசேர்ப்பது. அதற்காக விசேடமான நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற யோசனை ஒன்றை முன் வைத்திருந்தேன்.

அந்த நிறுவனம் நல்லிணக்க ஆணைக் குழுவிடம் இணைந்து தகவல்களை திரட்டு தல் மற்றும் காணாமல் போனோர் உள்ள குடும் பங்களுடன் தொடர்புகொள்ளல், அவர்களுக்கு தகவல்களை வழங்குதல், அவர்களுக்கு உத விகளை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் விரைவாக குடும்பங்களை ஒன்றுசேர்க்கவேண்டும் என்றும் அந்த யோசனையில் கூறியிருந்தேன். அதேபோல் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைக்கவேண்டும் எனவும் கூறியிருந்தேன்.

13-வது திருத்தம் தேவையில்லை

அத்துடன் உண்மையானதும் நிலையான துமான இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டு மாகயிருந்தால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம். அதன் அடிப்படையில் 13-வது திருத்தச்சட்டம் பயனுடையது அல்ல என்பதையும் சுட்டிக்காட்டினேன். 13-வது திருத்தச்சட்டம் தோல்வியடைந் துள்ளது. அது பிரச்சினைக்கு உதவப்போ வதில்லை. எனவே அதற்கு அப்பால் சென்று புதியதொரு முறைமை பற்றி சிந்திக்கவேண் டும் என்று சுட்டிக்காட்டினேன்.

கேள்வி:- அரசியல் தீர்வு குறித்து அர சாங்கம் பேச வேண்டுமாயின் எந்தக் கட்சி யுடன் பேசவேண்டும் என நீங்கள் நினைக் கிறீர்கள்?

பதில்:- அரசியல் தீர்வு என்று ஒன்று வரும் போது பிரதானமான பங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம்தான் பேசவேண்டும்.

கேள்வி:- தமிழ்க்கட்சிகள் ஒன்றிணையட் டும். அதன் பின்னர் நான் அரசியல் தீர்வு குறித்துப் பேசுகிறேன் என ஜனாதிபதி அண் மையில் கருத்து வெளியிட்டிருந்தாரே?

பதில்:- அந்தக் கருத்தில் நியாயமில்லை. இவ்வாறு தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைவது என்பது சாத்தியமில்லை. அரசியல் தீர்வு என் பதும் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைவது என்ப தும் இரண்டுபட்ட பிரச்சினைகள். தமிழ் கட்சி களை இணைப்பது என்பது சாத்தியமான தல்ல.

கேள்வி:- தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து தமிழ் கட்சிகளுடன் பேசினால் மட்டுமே நல்லதொரு தீர்வு கிடைக்கும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

பதில்:- தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து பிரதானமான பங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும். ஜனநாயக முறையிலிருந்துகொண்டு மற்றக் கட்சிகளு டன் அரசியல் தீர்வு குறித்து பேசக்கூடாது என்பது ஜனநாயக விரோத சிந்தனை.

கேள்வி:- ஏன் கூட்டமைப்புக்கு பிரதான மான பங்கு உள்ளதெனக் கூறுகிறீர்கள்?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் தமிழ் மக்களின் பிரதானமான கட்சி. பாராளுமன்றில் அதிகூடிய ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ்க்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே. அதன் காரணமாக அந்தக்கட்சியே பிரதானமான பங்கை வகிக்க வேண்டும்.

கேள்வி:- தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் இந்தியாவின் பங்குஎதுவாக இருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள்?

பதில்:- இந்தியாவை வைத்துக்கொண்டு தான் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்றால் இந்தியாவின் திட்டத்திற்கு ஏற்றவாறே அது அமையும். எனவே இந்தியா விடமிருந்து தீர்வு கிடைக்கும் என தமிழ் மக் கள் எதிர்பார்ப்பது நல்லதல்ல. அது பலவீன மான நிலைப்பாடாகவே அமையும். தமிழ் மக்க ளுக்கு ஆதரவாக உறுதியாக இந்தியா செயற்ப டுவதற்கான சாத்தியம் மிகமிகக் குறைவு.

கேள்வி:- ஆயுதரீதியான போராட்டம் இல்லாத நிலையில் அரசியல் ரீதியாக என்ன போராட்டங்களை முன்னெடுக்க முடியும்.

பதில்:- வன்முறையோ அல்லது ஆயுத ரீதியான ஒரு செயற்றிட்டமோ தமிழ் மக்க ளுக்கு பயனளிக்கப்போவதில்லை. எனவே அதுபற்றி அவர்கள் சிந்திக்காமல் இருப்பது அவர்களுக்கு நல்லது. யுத்தத்தின் இறுதிக்காலத்தில் நடந்த அனுபவங்களை வைத்துப் பார்க்கின்றபோது இன்னொரு ஆயுதக் கலாசாரம் இனி தோன் றாமல் இருப்பது தமிழ் மக்களுக்கே நல்லது. இந்த நிலையில் அவர்களுக்கிருக்கின்ற ஒரே ஒரு தெரிவு ஜனநாயக ரீதியான அரசியல் செயற் றிட்டம் ஒன்றுதான். அந்த ஜனநாயக ரீதியான அரசியல் செயற்றிட்டமொன்று ஏற்படுவ தற்கு இப்போதுள்ள சூழ்நிலை பொருத்தமா னதல்ல. ஏனெனில் யுத்தம் இப்போதுதான் முடிபடைந்துள்ளது. ஆனால் ஜனநாயக அர சியல் ஒன்றைத் தவிர வேறொரு தெரிவு இல்லாததன் காரணமாக எதிர்வரும் காலங் களில் தமிழ் மக்களின் அரசியலைக் கட்டி யயழுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 ஆசனங்களை வைத்திருப்பது என்பது உறுதியான ஒரு அடித்தளம். ஆனால் அந்த 13 ஆசனங்களி னதும் அடித்தளம் இன்றுவரை சரியாக பயன் படுத்தப்படவில்லை. எனவே அதனை எவ்வி தம் உறுதியாகவும், தந்திரோபாயமாகவும் எதிர்காலத்தில்பயன்படுத்தலாம் என்பது தொடர்பான சிந்தனைகள் அவசியம்.

செவ்வி:- க.சதீபன், உ.பாலமுருகன்

valampurii.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.