Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"போர் குற்றம்"-ஐநா குழுவுக்கு அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"போர் குற்றம்"-ஐநா குழுவுக்கு அனுமதி

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படு்ம் போர் குற்றங்கள் தொடர்பாக ஐ நா பொதுச் செயலர் பான் கி மூனுக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்ட மூன்று நபர் நிபுணர் குழு இலங்கை வருவதற்கு தான் அனுமதி அளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை கூறியுள்ளது.

இலங்கைப் போரின் இறுதி கட்டத்தின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் பற்றி ஆராய கடந்த ஜூன் மாதம் ஐ நா பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழு இலங்கைக்கு வர அரசு முன்பு அனுமதி மறுத்திருந்தது.

மேலும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க உள்நாட்டில் ஒரு குழுவை இலங்கை அரசு அமைத்தது. ஆனால் தற்போது இலங்கை அரசு, ஐ நா குழுவினர் இலங்கைக்கு வரலாம் என்றும் தனது ஆணைக் குழுவுடன் தமது ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101218_slallowsunpanel.shtml

நீண்ட பேச்சுவார்த்தையின் பின் ராஜபக்சவிடம் அனுமதி வாங்கினேன் - பான் கீ மூன்!

இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவத்தற்காககவே ஐ.நாவினால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு இலங்கை செல்வதாக தெரிவிக்கப்படுவதை அரச ஊடக செயலகம் மறுத்துள்ளது.

இலங்கை இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் நோக்கில் பான் கீ மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு, இலங்கைக்கு செல்லவிருப்பதாக ஐ.நா செயளாலர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.

இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதியின் நெகிழ்வு தன்மையை பாராட்டுகின்றேன். ஜனாதிபதிக்கும் தமக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னரே நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதி கிடைத்தது.

இலங்கை அரசினால் நிறுவப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவினர், எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும் நோக்கிலேயே நிபுணர்கள் குழு இலங்கை விஜயம் செய்வதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.ஏன் ஐ.நா நிபுணர் குழுவினருக்கு ஜனாதிபதி அனுமதி அளித்தார் என விளக்கமளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை டொடர்ந்து இவ் விஜயம் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை ஐ.நா நிபுணர் குழுவின் இலங்கை விஜயத்தை அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் இன்னமும் எதிர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் உண்ணாவிரதம் ஒன்றையும் நடத்தியிருந்தார்.

http://www.4tamilmedia.com/ww5/index.php/newses/srilanka/1839-un-group-visit-to-srilanka

தன்னுடன் ஆதாரங்களை பகிர கேட்கும் சிங்களம் !

Sri Lanka allows UN to 'share' war crime evidence

Ban praised the move saying he hoped the U.N. team will "have an accountability process and make progress as soon as possible," he told a news conference Friday.

http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/12/18/AR2010121800887.html

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கை வர நிபந்தனையுடன் அரசு அனுமதி - அரசு-ஐ.நா. பரஸ்பரம் அறிவிப்பு

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-19 09:14:13| யாழ்ப்பாணம்]

images (1) un_logoஇலங்கை யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு இலங்கைக்கு வருவதற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை சந்திப்பதற்காக இந்தக் குழு இலங்கை வரும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவைச் சந்திக்க இலங்கை வருவதற்கான இலங்கையின் விருப்பத்தை ஐக்கிய நாடுகள் சபைக்குத் தெரிவித்திருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச் சுத் தெரிவித்துள்ளது.

எனினும் நிபுணர்கள் குழு கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக் குழுவில் தமது கருத்துக்களை முன் வைப்பதற்கு மாத்திரமே இந்த அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி ஐக்கிய நாடுகள் சபை யின் நிபுணர்கள் குழு இலங்கை வந்து கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவைச் சந்தித்துத் தமது கருத்துக்களை மாத்திரமே முன் வைக்க முடியும். மாறாக மனித உரிமைகள் தொடர்பில் அல்லது ஆணைக் குழு தொடர்பில் உள் நாட்டில் கருத்துக்கள் வெளியிடவோ, ஆணைக் குழுவிடம் இருந்து மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்றச் சாட்டுக்கள் தொடர்பிலான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள வோ முடியாது என வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும் புக்கு விஜயம் செய்து உண்மையைக் கண்டறியும் நல்லிணக்க ஆணைக் குழுவினை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்ததை அடுத்தே கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான அறிக்கை பொது மக்களுக்கு வெளியிடப்படுமா? அத்துடன் ஜனாதிபதியால் நியமிக் கப்பட்ட ஆணைக்குழு ஒரு சில தொகை மக்களிடம் மாத்திரமே விசாரணைகளை நடத்தியுள்ளது. அதன் நிலை குறித்து உங்கள் கருத்து என்ன? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பான் கீ மூன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு அவர் பதிலளிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வுக் கும் எனக்கும் இடையில் நடைபெற்ற நீண்ட கலந்துரையாடலுக்குபின் தற்போது ஐக்கியநாடுகள் சபையின் நிபுணர் குழு இலங்கைக்குச் சென்று உண்மைகளைக் கண்டறிவதற் கான நல்லிணக்க ஆணைக்குழு வினைச் சந்திக்கக்கூடிய சந்தர்ப் பம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந் நிபுணர் குழுவானது நல்லிணக்க ஆணைக்குழுவின் சகல ஒத்துழைப்புடன் தங்கள் நடவடிக்கையினை வெற்றிகரமாக விரைவில் முன்னெடுக் கும் என நான் நம்புகின்றேன். இதற்கு ஏதுவாக அமைந்த எனக் கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ வுக்கும் இடையில் நடைபெற்ற நீண்டநேர கலந்துரையாடலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் பங்கு குறித்து நான் பாராட்டுகிறேன் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஐக்கியநாடுகள் சபையின் நிபுணர்குழு இலங்கை வந்து உண்மைகளைக் கண்டறிவ தற்கான நல்லிணக்க ஆணைக் குழுவை சந்திப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்தால் அதனை ஆராய்ந்து பார்க்கத் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச் சின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் மீறப்பட்டுள்ள தாகக் கூறப்படும் மனித உரிமை கள் குறித்து ஆராய்வதற்கென ஐக் கியநாடுகள் சபையின் நிபுணர்குழு இலங்கைக்கு வரவுள்ளதாக வெளி யாகியுள்ள தகவல் தொடர்பில் ஊட கங்கள் பந்துல ஜயசேகரவிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

valampurii.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.