Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

600 பொலிஸாரின் படுகொலைகளுக்கு கருணா அம்மானே நேரடிப் பொறுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

600 பொலிஸாரின் படுகொலைகளுக்கு கருணா அம்மானே நேரடிப் பொறுப்பு!

செவ்வாய், 21 டிசம்பர் 2010 12:50

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன் அளித்த சாட்சியமானது பச்சைப் பொய் என முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் நேரடித் தொடர்புள்ளவர் கருணா அம்மான் என பொத்துவில் மஹகலுகொல்ல பொலிஸ் சோதனைச் சாவடியில் சம்பவ காலத்தின் போது கடமையாற்றிய அஜித் தர்மபால என்ற பொலிஸ் அதிகாரி குறிப்பிட்ட சிங்கள இணையத்தளத்துக்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தகவல் தருகையில்,

600 பொலிஸாரின் படுகொலை தொடர்பில் தான் எந்த நீதிமன்றத்திலும் எந்த ஆணைக்குழு முன்னிலையிலும் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளேன். கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு முன் தோன்றிச் சாட்சியமளிக்கவும் நான் தயார்.

1990 காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கிழக்கு மாகாணம் ஒப்படைக்கப்பட்ட போது படுகொலை செய்யப்பட்ட 600 பொலிஸாரின் கொலையுடன் தமக்குத் தொடர்பில்லை எனவும் அதற்கான பொறுப்பை அந்த இயக்கத்தின் தலைவரும் மற்றும் பொட்டு அம்மானுமே ஏற்க வேண்டுமெனவும் கருணா அம்மான் தெரிவித்திருந்தார். இது அவரால் கூறப்பட்ட பச்சைப் பொய்.

அப்போது பொலிஸ் மா அதிபராகவிருந்த பிராங் சில்வா கிழக்கு மாகாணத்திற்கு வந்து ஹெலிக்கப்டரில் சுற்றியவாறே அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் ரேடியோ தொலைத் தொடர்பு மூலம் அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தார்.

அதன்படி, அனைத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களும் தமது ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு புலிகளினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பஸ்ஸில் ஏறி அம்பாறைக்குச் செல்லுமாறும் அம்பாறையிலிருந்து தத்தமது சொந்த இடங்களுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான பொறுப்பைக் புலிகளின் முக்கியஸ்தர் கருணா அம்மான் ஏற்றுள்ளதாகவும் கூறினார்.

இந்தச் செய்தி அப்போது பொத்துவில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய கொஹன என்பவர் மூலம் எனக்கும் கிடைத்தது. இந்தச் சம்பவம் இடம்பெற்றது 1990 ஆண்டு ஜுலை மாதம் 10 ஆம் திகதியாகும்.

அன்றைய பொலிஸ்மா அதிபரின் இந்தக் கூற்றை உறுதி செய்து கொண்ட இன்றைய பிரதியமைச்சர் கருணா அம்மான், பொலிஸ் நிலையங்களில் வெள்ளைக் கொடியை ஏற்றி விட்டு ஆயுதங்களைக் கீழே வைத்து பஸ்களில் ஏறுமாறு கொச்சைச் சிங்களத்திலும் தமிழிலும் அறிவிப்புச் செய்தார்.

இவரது அந்த உரை சிங்களத்தில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டது. புலிளின் அந்தந்தப் பிரதேசத் தலைவர்களிடம் சரணடைந்து குறிப்பிட்ட பஸ்களில் அம்பாறைக்குச் சென்று பின்னர் தத்தமது ஊர்களுக்குச் செல்ல முடியுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த விடயத்தை பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீண்டும் என்னிடம் தெரிவித்து, ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டுச் சரணடைந்த நிலையில் பஸ்களில் ஏறுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த விடயம் குறித்து என்னுடன் கடமையாற்றிய சக பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தேன். ஆயுதங்களைக் கீழே வைக்காமல் இறுதி வரையில் இந்த விடயத்தில் போராடுவதென நாம் முடிவெடுத்தோம். இதனை நான் பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் தெரிவித்தேன்.

இவ்வாறு நான் தெரிவித்த போது அவர் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். ஆனால், நாம் எமது பாட்டிலிருந்தோம். ஊர் மக்களுடன் சேர்ந்து எமது கிராமத்தைப் பாதுகாக்கும் பணியில் நாம் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம்.

அவ்வாறு புலிகளிடம் சரணடைந்த நிராயுத பாணிகளான 600 பொலிஸாரும் கல்குடா பழைய பொலிஸ் நிலையத்துக்கு அருகிலும் அதே போன்று கல்குடா ஜெட்டிக்கு அருகிலும் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தப் படுகொலைகள் கருணா அம்மானின் நேரடி உத்தரவின் பேரிலேயே இடம்பெற்றன. ஆனால் இன்று அவர் இதனை மறுப்பது எப்படி? இந்தப் படுகொலைகளுக்கு கருணா அம்மான் மட்டும் பொறுப்பல்ல. அன்றைய ஜனாதிபதி ஆர். பிரேமதாச, அன்றைய பொலிஸ்மா அதிபர் ஆகியோருமாவார்.

அது மட்டுமல்ல மட்டுமல்ல..1997 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி மொறவெல பொலிஸ் மற்றும் அந்தக் கிராமத்தின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு அதிகளவான பொலிஸாரையும் பொதுமக்களையும் படுகொலை செய்தமைக்கான பொறுப்பையும் கருணா அம்மானே ஏற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆளைப் பிடித்து உள்ளே போடவேண்டியதுதான். ஏன் சுணக்கம்.

ஆளைப் பிடித்து உள்ளே போடவேண்டியதுதான். ஏன் சுணக்கம்.

காட்டி கொடுத்தவர்களை அல்லது தங்கள் இனத்தை வெற்றி பெற செய்தவர்களை ஒரு இனம் இலகுவில் மறந்து விடாது.

கருனாவும் சிங்களத்தின் பெருமைக்குரியவன்..

யப்பான் இன்று மட்டும் சிங்களவனுக்கு உதவ இதுவும் தான் ஒரூ காரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.