Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொழிற்நுட்பத்தாக்குதலால் முடங்கிய புலிகளின் குரல் வானொலி மீண்டும் இணையத்தில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொழிற்நுட்பத்தாக்குதலால் முடங்கிய புலிகளின் குரல் வானொலி மீண்டும் இணையத்தில்!

[Friday, 2010-12-24 06:56:27]

தமிழ்மக்கள் மீது இனப்படுகொலையினை நடத்தி தமிழ்மக்களின் அனைத்து நிர்வாக அலகுகளையும் அழித்தசிறீலங்கா அரசு தாயத்தில் தமிழ்மக்களை துன்பத்திற்கு ஆழ்த்திக்கொண்டிருக்கும் வேளைகளில் பன்னாட்டு தமிழ்மக்களுக்கும் உலகத்திற்கும் செய்தியினை சொல்லிக்கொண்டிருக்கும் ஊடகங்களாக இணையத்தள தமிழ் ஊடகங்கள் காணப்படுகின்றன அதிலும் விடுதலைப்புலிகளின் அன்றைய குரல்களுடன் இன்றும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஊடகமாகவும் எதுவித பக்கசார்புகளுகம் இன்றி தமிழ்மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் ஊடகமாக புலிகளின் குரல் வானொலி காணப்படுகின்றது.

புலிகளின் குரல் வானொலியின் பக்கபலமாகவே தமிழர்குரல் வானொலியும் இணையத்தளத்தின்ஊடாக செய்கோள்வரைசென்று ஒலித்துக்கொண்டிருந்தது, அண்மையில் மாவீரர் நாள் சிறப்புஒலிபரப்புக்களை சிறப்புறமேற்கொண்டு மாவீரர்களின் வரலாற்றினை வானொலிஊடாக எடுத்துசென்றது,இவ்வாறு 22.12.2010 வரைஇடைவிடாது செயற்பட்டுக்கொண்டிருந்த புலிகளின் குரல் ஊடகத்தினை சிறீலங்கா அரசபடையினர் கைக்கூலிகள்கொண்டு நன்கு திட்டமிடப்பட்டு எமது இணையத்தளத்தினை முடக்கியுள்ளார்கள் இதுதொடர்பாக ஏற்கனவே புலிகளின் குரல் வானொலியால் உலகத்தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது புலிகளிகுரல்போன்ற தோற்றத்தில் அதேமாதிரியான இணையத்தள வானொலி எதிரியின் புலனாய்வாளர்களினால் உருவாக்கபடதிட்டமிட்டுள்ளதை நன்கு அறிந்த புலிகளின்குரல் நிறுவனத்தினர்அதுதொடர்பன விழிப்பினை மக்களுக்கு வழங்கியவேளையில் அதனை மேற்கொள்ள முடியாத சிறீலங்காஅரச கைக்கூலிகள் தொழில்நுட்பரீதியில் தாக்குதலினை மேற்கொண்டு புலிகளின் குரல் ,மற்றும் தமிழர்குரல் வானொலிகளின்இணையத்தளசெயற்பாட்டினை முடக்கியுள்ளார்கள், ஊடகங்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நாடாக சிறீலங்கா காணப்படுகின்ற நிலையில் தமிழ்மக்களின் ஊடகங்கள் எத்னையும் மக்களின் கருத்துக்களையும் சிறீலங்காஅரசாங்கத்தின் நிலையினையும் அரசியல் கருத்துகளையும் எடுத்துக்கூறுவதற்கு தடையாக இலங்கைத்தீவு காணப்படுகின்றது.

அதாவதுஊடகசுதந்திரம் அற்ற நாடாக இலங்கைத்தீவு காணப்படுகின்றது இன்னிலையில் தற்போது தமிழ்மக்களின் பிரச்சனைகளை தாயகத்தில் இருந்துகொண்டு இணையத்தள தமிழ்ஊடகங்களுக்கு எடுத்துக்கூறும் செயற்பாட்டாளர்களை காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டில் சிறீலங்காப்படையினருன் சேர்ந்தியங்கும் கைக்கூலிகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ்மக்களின் உண்மையான நிலையினையும் சிறீலங்கா அரசபயங்கரவாத்தின் நிலையினையும் எடுத்துகூற முடியாத நிலையில் இலங்கைத்தீவில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அச்சுஊடகங்களும்,இலத்தரனியல்ஊடகங்களும், காணப்படுகின்றன.

அவைஅரசாங்கத்தின் ஊதுகுழல்களாகவே செயற்பட்டுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது,அந்தவகையில் தொடக்ககாலத்தில் இருந்தே புலிகளின் குரல் வானொலிமீது தாக்குதல் தொடுத்த சிறீலங்காப்படையினர் அன்றுதொட்டு வானொலியினை அழிப்பதற்காக பல செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்,1990 ஆம் ஆண்டு கார்திகைத்திங்கள் 21 ஆம் நாள் தமிழீழ தேசியத்தலைவர்அவர்களினால் தொடக்கிவைக்கப்பட்ட ஊடகாமாக புலிகளின் குரல் காணப்படுகின்றது,ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும்,எதிரியின் பொய்மைக்கு எதிரான,உண்மைக்குரலாகவும், ஓங்கிஒலிக்கவேண்டும் என்றும் �எமதுஎதிரியான சிங்களஅரசும் அதன்கைக்கூலிகளான தமிழ்துரோக்ககுழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமாக விஷமபிரச்சாரங்களை ஆற்றிவருகின்றன, எதிரியின் பொய்மையான கருத்துப்போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமதுவானொலியின் குரல் ஒலிக்கவேண்டும்.

ஒருசத்தியயுத்தத்தின் போர்முரசாக புலிகளின் குரல் ஒலிக்கவேண்டும் என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஊடாகமாக புலிகளின் குரல் இன்றும் காணப்படுகின்றது, 1994 ஆம் ஆண்டு சூரியக்கதிர் படைநடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தில் இயங்கியபுலிகளின் குரலினை இடம்பெயரவைத்து பலஇன்னல்களுக்கும் இடம்பெயர்வுகளுக்கும் ஆளாக்கிய சிங்களப்படையினர்தரைவழியான தாக்குதலை தொடுத்தார்கள், இதிலும் பலஇடப்பெயர்வுகளை சந்தித்த வானொலியாக புலிகளின் குரல் வானொலி அன்றும் இடைவிடாது மக்கள்மத்தியில் ஒலித்துக்கொண்டிருந்தது, வன்னியில் இருந்து தனது சேவையினை விரிவு படுத்தும்நோக்கில் கொக்காவில் பகுதியில் வானொலி ஒலிபரப்பு தளத்தினை அமைத்து செயற்பட்டுக்கொண்டிருக்கையில் 2006ஆம்ஆண்டு 09மாதம் 16 நாள் புலிகளின் குரலின் கொக்காவில் ஒலிபரப்பு கோபுரம் உள்ளிட்ட ஒலிபரப்பு நிலையம் சிறீலங்கா வான்படையினரின் தாக்குதலில் தகர்த்து அழிக்கப்படுகின்றது,2007ஆம்ஆண்டு 11 ஆம்மாதம்,27 ஆம்நாள் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரையினை மக்களுக்கு எடுத்துக்கூறும் நாளாக அன்று மாலை காணப்படுகின்றது, இதனை இலக்கு வைத்து அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலி நிறுவனம் மீது சிறீலங்காப்படையினர் வான்தாக்குதலை நடத்தி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள், புலிகளின் குரல் மீது வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டும் எமது வானொலி இடைவிடாது இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றது, இந்த வான்தாக்குதலில் அறிவிப்பாளர் இசைவிழிசெம்பியன், மற்றும், பொறியியல்பகுதியினை சேர்ந்த சுரேஸ்லிம்பியோ, ஓட்டுனர் தர்மலிங்கம், ஆகிய புலிகளின் குரல் வானொலியின் பணியாளர்கள் நாட்டுப்பற்றாளர்களாக உயிரிழந்தார்கள், தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த வேளையில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகளின் துணைகளுடன் தமிழினத்தின் கட்டுமானத்தை அழித்து அங்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்திய போது எமது தலைப்பீடம் மற்றும் பொறுப்பாளாரின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைய ஆவணங்கள் யாவும் இணையம் வழியுடாக நகர்த்தப்பட்டு மிகுதி அவணங்களை அழித்து மே 15ம் திகதி தனது ஒலிபரப்புகளை தாயகத்தில் நிறுத்திக்கொள்கின்றது, தொடர்ந்து வந்த நாட்களில் புலிகளின்குரல வானொலி உடனடியாக தனது ஒலிபரப்புகளை கரும்புலிகள் தினமான யூலை 5ம் நாள் 2008ம் ஆண்டு இணையத்தில் ஆரம்பித்து இன்றுவரை தொடர்ந்து ஒலித்தவண்ணமே உள்ளன.

எதிரியின் எண்ணத்திற்கு சாவலாக ஓங்கி ஒலிக்கும் புலிகளின்குரலை எதிரியால் எதுவுமே செய்ய முடியாமல் இருக்கும் இந்த நிலையில் இணைய வழியில் முடக்க முயற்சி செய்துள்ளார்கள், இந்த முடக்கம் 72மணித்தியாலயங்கள் மட்டுமே நீடித்துள்ளது.இன்று முதல் எமது இணையத்தளம் வழமைபோல் இயங்க ஆரம்பித்துள்ளது என்பதை எமது மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

அதே நேரம் செய்கோள் ஊடாகவும் எமது ஒலிபரப்புக்கள் தொடர்ந்து ஒலித்தவண்ணமே உள்ளன, தமிழர்குரல் இணையத்தளமும் இன்னும் சில மணி நேரங்களில் மீண்டும் செயல்படுத்தபடும் என்பதையும் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

நன்றி

புலிகளின்குரல் நிறுவனம்.

seithy.com

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.