Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாக்குறுதிகளையும் வழிகாட்டல்களையும் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளது இந்தியா

Featured Replies

இனப்பிரச்சினைக்கு அரசுடன் பேசித் தீர்வு காண்பது தொடர் பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குறுதிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளது என்று தெரிவித்தார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.

யாழ்ப்பாணம் வந்திருந்த அவர் உதயன் பத்திரிகைக்கு வழங்கிய விசேட பேட்டியில் இதனைத் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிடம் எழுத்து மூலக் கேள்விகள் வழங் கப்பட்டன. அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளீர்கள். அது எந்த எல்லைவரை என்று கூற முடியுமா?

வடக்குகிழக்கில் அரசின் அபிவிருத்தித் திட்டங்களை எதிர்ப்பதில்லை என்ற கொள் கையை நீங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருகிறீர் கள். இதன் பின்னர் தமிழர் விவ காரம் தொடர்பில் அரசின் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏதாவது உண்டா?

இலங்கை அரசின் செயற் பாடுகளுக்கு எல்லாம் ஆதரவு வழங்குவதாக நாம் ஒரு பொழு தும் கூறவில்லை. அண்மையில் அரசினால் நாடாளுமன் றத் தில் கொண்டுவரப்பட்ட 18ஆவது (பதினெட்டாவது) அரமைப் புத் திருத்தச்ட்டத்தை எதிர்த்தோம். 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாம் முழுமையாக விமர்சித்தோம். அதனை ஆதரித்து வாக்களிக்க மாட்டோம் என அறிவித்தோம். அவ்வாறே நடந்துள்ளோம். எதிர்த்து வாக்களிக்காமல் விடுகின்றோம் என்று அறிவித்துள்ளமை இன்றைய சூழ் நிலை யில் நாம் தீர்மானித்த ஓர் அணுகல் முறை தந்திரோபாயம் மட்டுமே.

ஆனாலும் வரவு செலவுத் திட்டத் தில் பாதுகாப்புச் செலவினத்தையும், அவரகாலச் ட்டத்தையும் எதிர்த்து வாக்களித்துள்ளோம். இந்த வேறுபாடுகளை மக்கள் அறிந்து கொள்ளவேண் டும்.

ஜனாதிபதியும் அரசுதரப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தம்மை எல்லாச்ந்தர்ப்பத்திலும் எதிர்த்து வருகின்றது என்ற ஒரு குற்றச்சாட்டைத் தெரிவித்து வருகின்றனர். இதனடிப் படையிலேயே அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கும், மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஒத்துழைப் பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டன் எட்டப்பட்ட இணக்கத்தின் அடிப் படையில் இரு கட்டமைப்புக்களை ஏற் படுத்துவதையும், நடைமுறைப்படுத்து வதையும் ஜனாதிபதி தாமதப்படுத்தி வருகின்றார்.

இந்த இரு கட்டமைப்புக்களையும் ஏற் படுத்தும் பொருட்டு ஜனாதிபதியை இராஜதந்திர ரீதியாகத் தூண்டுவதற் கும், செயற்பட வைப்பதற்கும் ஒரு நல் லெண்ணத்தை உருவாக்குவதற்கு ஏது வாகவே வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்காமல் விடும் தீர்மா னத்தை எடுத்தோம்.

எமது இந்த அணுகல் முறையை, நல் லெண்ணத்தை ஜனாதிபதி ரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று பத்திரி கைகள் ஆக்கபூர்வமான விமர்னத்தை யும், தலையங்கங்களையும் எழுதி வரு கின்றன. இந்தியா உள்ளிட்ட ர்வதே இராஜதந்திர வட்டாரங்களும் ஜனாதி பதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசித் தீர்வு காண்பதற்கு இது ஒரு நல்ல ந்தர்ப்பம் என்று வலியுறுத்தியுள்ளன.

அபிவிருத்தி என்ற பெயரில் அர_ தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப் பதையும், தமிழ்ச் முதாயத்தின் பொரு ளாதார வளங்களைச்

சுரண்டுவதையும், சூறையாடுவதையும் ஒருபொழுதும் ஆதரிக்க முடியாது.

போரினால் வீழ்ந்து கிடக்கும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதரங் களைக் கட்டியெழுப்புதல், தமிழ் இளை ஞர்களின் விடுதலை, வாழ்விழந்து நிற்கும் பெண்களின் மறுவாழ்வு முதலான மனிதாபிமானப் பணிகளிலேயே அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்ற அறிவித்துள்ளோம்.

வரவு செலவு திட்ட வாக்கெடுப் பில் கலந்துகொள்ளாது நல்லெண்ண மிக்ஞையை வெளிப்படுத்தியதற்குப் பலன் ஏதும் கிட்டியதா?

பலன் கிடைக்குமா என்பதைப் பொறுத் திருந்து பார்ப்போம். அதற்கும் காலவரை யறை உண்டு. நோய்க்கு மாற்று மருந்து கொடுத்துள்ளோம். உடன் பயன் கிடைக் கும் என எதிர்பார்க்கவில்லை. ""அரசிய லில் நம்ப நட நம்பி நடவாதே' என்று தந்தை சொன்ன பாடம் நினைவிருக்கி றது. இது ஒரு இராஜதந்திர அணுகல் முறைதான்.

அரசு கூட்டமைப்பு இணைந்து அமைப்பதாக அறிவித்த இரு குழுக்க ளின் நிலைமைகள் எப்படி உள்ளன?

வரவு செலவுத் திட்டத்தின் இறுதி நாளான 10.12.2010 மாலையில் பாநாய கர் இல்லத்தில எம்மைச் ந்தித்த ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ, இரு தரப்பும் இணக்கம் கண்டவாறு இனப்பிரச்சி னைத் தீர்வு மற்றும் மீள்குடியமர்வு தொடர்பான கட்டமைப்புகளை விரைந்து ஏற்படுத்தி வேலைகளைத் தொடங்கு வோம் எனத் தெரிவித்தார். தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புத் தனது தரப்பின் பிரதிநிதிகளை ஏற்கனவே அறிவித்து விட்டது. அர தரப்பின் பதிலுக்காகப் பொறுத்திருக்கின்றோம்.

இரு குழுக்களுக்காகவும் நாம் அனுப் பிய பெயர்கள் கிடைத்ததென்றும் பதில் வந்துவிட்டது. இனிமேல் ஜனாதிபதியே நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை இடம்பெற்றதும் பேச்_க் கள் தொடங்கும்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துட னான பேச்சக்கள் எந்த விதமான முன் னேற்றத்தைக் கொண்டு வரும் என நம்புகிறீர்கள்?

2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின் அதன் விளைவுகளில் இருந்து எம் மக்களை மீட்டெடுக்க வேண்டும். எண் ணிக்கையில் சிறிய தேசிய இனங்களை யும், கட்சிகளையும் சீர்குலைக்கும் நட வடிக்கைகளில் அர_ ஈடுபட்டதை அறி வோம். நிர்வாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இன்று மிகப் பலமான நிலையில் உள்ளது. அரமைப்பு மூலம் ட்ட அதிகாரங்களும் ஜனாதிபதியிடம குவிந்துள்ளன. நாடாளுமன்றத்திலும் அர_க்கு மூன்றில் இரண்டு பெரும்பான் மைப் பலம் உள்ளது. நாடு பெரும்பான் மைத்துவ ர்வாதிகாரப் போக்கை நோக் கிச் செல்கின்றது.

போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிட்டோம் என்ற அரசினது செருக்கை நாம் அறிவோம். தமிழ் மக்க ளிடைய பிளவுகளை ஏற்படுத்தி அவர் களின் உரிமைக் குரலை, ஜனநாயக இயக்க க்தியை தோற்கடிக்க எடுக்கப்படும் முயற்சிகளையும் அறிவோம். தமிழ்

பேசும் மூகங்களைத் தோல்வியடைந்த மூகங்களாகக் காட்டி உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தும் சித்தாந்தமும் இப் போது செயற்படுகின்றது.

தெற்கின் மத்தியில் ஜனநாயகத்தின் பெயரால் ஆட்சி, அசுரபலம் கொண்டுள் ளது. அந்தப் பலத்துடன், வடக்கு, கிழக் கில் இராணுவ, பௌத்த ஆதிக்க க்தி கள் பலமுடன் தமிழ், முஸ்லிம் மக்களின் மொழி, நிலம், கலாசாரம், மதம், வாழ்வு, பொருளாதாரம் என்பனவற்றில் சீர்குலைவு களை ஏற்படுத்தி வருகின்றன. தமிழ் இன, மத அடையாளங்களை அழிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்குத் தமிழ், முஸ்லிம் மக்களிடத்திலும், கட்சி களிடத்திலும் பரந்துபட்ட ஒற்றுமைக் கொள்கை அடிப்படையில் ஏற்பட வேண் டியது காலத்தின் கட்டாயம் ஆகியுள் ளது.

காலத்தின் கடமையை நிறைவேற் றும் பொறுப்புத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு உண்டு. அதில் அக்கறையுள்ள கட்சிகளையும், மக்களையும் அணி திரட்ட வேண்டிய பொறுப்பும் உண்டு.

இத்தகைய பின்னணியில் அர_டன் அரசியல் தீர்வுக்கான பேச்சு நடத்தும் போது அதற்கான அடிப்படைக் கொள்கை யொன்றில் தமிழ், முஸ்லிம் கட்சிகளி டையே ஓர் இணக்கப்பாடு ஏற்படுமா யின் அது சிறந்த பயனைத் தரும். அந்த இலக்குடனேயே தமிழ் அரங்கத்துடனும் பேச்_ நடத்தப்படுகிறது. இது இன்றைய சூழ்நிலையில் சிறந்ததொரு அணுகு முறையாகவும், தந்திரோபாயமாகவும் இருக்க முடியும். தமிழ் மக்களிடமும் புதிய நம்பிக்கை தோன்றும்.

தீர்வைத் தாமதப்படுத்தவே ஜனாதி பதி அரங்கத்தை உங்களுடன் பேச்சை வைக் கிறார் என்று கூறப்படுவது குறித்து...?

ஜனாதிபதி தீர்வை தாமதப்படுத்தாமல் ஒரு காலவரையரைக்குள் ஒன்றித்த அரசியல் திட்ட அடிப்படையில் தீர்வை எட்டவே முயற்சிக்கின்றோம். அதற்கான உறுதியான அடித்தளத்தை நாம் தீர் மானிக்க வேண்டும்.

அரசாங்கத்துடன் இணக்கம் கண்ட முதல் பேச்சில், தலைவர் சம்பந்தன் சிகிச்சை முடிந்து நாடு திரும்புமுன் தீர்வு தொடர்பில் இணக்கம் காண ஓர் இணக்கம் எட்டப்பட்டிருந்தது. இப்போது அது மார்ச் மாதம் வரையில் பிற்போடப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உண்மையில் எப்போது இணக்கம் காணப்படும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரங் கம் ஆகியன தீர்வு தொடர்பில் இணக் கத்தை எட்டுவதற்கான காலக்கெடு மார்ச் மாதம் வரை பிற்போடப்பட்டது என்பது வீண் செய்தி. விரைவில் தீர்வுக் கான பேச்_க்குப் பொருத்தமான அடிப் படை பற்றி அடுத்தடுத்த வாரங்களில் பேச்சுத் தொடங்கும். ம்பந்தன் அவர்களுடனும் தொடர்பு கொண்டு பேசுவோம்.

அடுத்த தேர்தலில் அரசுக்குக் கூட்ட மைப்பு ஆதரவு கொடுக்கும் என வெளி வரும் தகவல்கள் குறித்து...?

அவை வெறும் தகவல்களே! எந்த ஒரு தேர்தலிலும் அரசுக்கு ஆதரவளிக் கும் பேச்சுக்கே இடமில்லை. ஜனாதி பதித் தேர்தலுக்கு முன்பாக, ஜனாதிபதி யின் அழைப்பின் பேரில் ம்பந்தனும் நானும் ஜனாதிபதி மாளிகையில் அவரைச் ந்தித்தபோது எங்களுக்கு ஐந்து அமைச்சுப் பதவிகள் தரலாம் என்று பேசிப் பார்த்தார்கள். அதுவல்ல எமது கோரிக்கை, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே எமது இலக்கு என்று கூறி விட்டு வந்தோம். வெறும் தகவல்கள், செய்திகளில் நாம் அரசியல் தீர்மானம் எடுப்பதில்லை.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எப்படியுள்ளது? இந்தியா ஏதாவது செய்யும் என்று கூட்டமைப்புப் பலமாக நம்புகிறது. ஆனால் இலங்கை அரசை மீறி அல்லது எதிர்த்து இந்தியா எதையும் செய்யாது விட்டேத்தியான அரசியல் போக்கைய தொடரும் என்று புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. நீங்கள் என்ன நினைக் கிறீர்கள்?

இந்திய அரசுடன் டெல்லியில் சென்ற ஜூலை மாதம் பேச்சு நடத்தினோம். பிரதமர் முதல் முக்கிய அமைச்ர்கள் வரையும் ந்தித்துப் பேசியுள்ளோம். அப்பொழுது இனப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றம் உட்படப் போர் முடிந்த தற்குப் பின்னரான எல்லாப் பிரச்சினை களையும் எடுத்துச் சொன்னோம். வாக்கு றுதிகளும், வழிகாட்டல்களும் தரப்பட் டன.

இராஜதந்திர ரீதியாக மட்டுமே இந்தியா இலங்கையை வற்புறுத்த முடியும் என நம்புகின்றோம். இந்தியாவுக்கும் இலங் கைக்கும் இடைய இராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளில் முரண்பாடுகளும் ஏற்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் நாம் இன்றுள்ள நிலையில் பலகோடி தமிழ் மக்கள் நிறைந்துள்ள இந்தியாவை ஒரு நென்புகோலாக நம்புகிறோம். எம் மக்களுக்கான இனப்பிரச்சினைத் தீர்வி லும், மீள்குடியேற்றம் முதலான நடவ டிக்கைகளிலும் உதவுவதற்கு இந்தியா வுக்குத் தார்மீகப் பொறுப்பு உண்டு.

தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டு மென்பதற்காகவேனும் பக்கத்து நாடான இந்தியாவுடன் நட்புறவும், நம்பிக்கை யும், உடன்பாடுகளும் ஏற்பட்டிருக்க வேண்டும். இது இலக்கொன்றை அடை வதற்கான குறைந்தபட் தந்திரோபாய மாக ஆவது இருந்திருக்க வேண்டும். கடந்த காலங்களில் நல்லலுறவை ஏற் படுத்த நாம் எடுத்த முயற்சிகள் பூரண மடையவில்லை. பல தருணங்களையும், சந்தர்ப்பங்களையும் தமிழர் தரப்பு இழந்துவிட்டது மிகுந்த கவலைதான். எவ்வாறாயினும் இந்தியாவை மட்டுமல்ல சர்வதே மூகத்தையும் எம்பக்கம் இப்போது ஈர்க்க வேண்டும். அதற்கான புதிய இராஜதந்திர அணுகல் முறைகள் பேணப்பட வேண்டும்.

தமிழர் பிரச்சினை தொடர்பான சர்வதேத்தின் சூழல் எப்படியுள்ளது?

சர்வதேச் சூழல் ஓரளவு சாதகமாக இருக்கின்றது. அதற்கு எதிரான சூழல் களும் உள்ளன. இந்திய நாடு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எமக்குச் சாதக மான ஒரு நிலைப்பாட்டை எடுக்குமானால் சர்வதே மூகத்தின் பிரதான க்திக ளும் அதனைத் தொடரும் வாய்ப்புக்கள் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்தவர்களை ஒன்றுபடுத்த கூட்டமைப்பின் ஐரோப்பியக் கிளை நிறுவப் பட்டதாகக் கூறப்படுகின்றது. அது குறித்து...?

இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களினதும், அமைப்புக்களின தும் ஒன்றுபட்ட இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகள் பயனுறும் வகையில் அமைய வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நிலைமைகள், அணுகல் முறைகளுடன் புலம்பெயர்ந்த சமூகத்தின் அமைப்புக்கள் முரண்பாடற்ற நிலையில் செயற்படுவதற்குப் பேச்சு நடத்தவேண்டுமென எண்ணியுள்ளோம். இன்றுள்ள சூழ்நிலையில் இத்தகைய புரிந்துணர்வு தேவைப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமிழர் பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு எட்டப்படும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

ஜனாதிபதியின் நிர்வாக அதிகார பல மும், நாடாளுமன்றத்தில் அரசு கொண் டுள்ள பெரும்பான்மைப் பலமும் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நல்ல தருணமாகவுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சு நடத்தித் தீர்வு காண விருப்பத்தை வெளியிட் டுள்ளது. இதனை இந்தியா உள்ளிட்ட ர்வதே மூகமும் வலியுறுத்தி வரு கின்றது. எதற்கும் ஜனாதிபதியிடமும், அரசிடமும் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு விருப்பமும், திடங்கற் பமும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் எதற்கும் தீர்வு கிட்டும். எமது மக் களும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சி களும் நம்பிக்கையுடன் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.

http://www.uthayan.innovay.net/pages/news_full.php?nid=3364

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.