Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரை வரவேற்காத கருணாநிதியை கண்டித்த ஸ்டாலின்

Featured Replies

பிரதமரை முதல்வர் கருணாநிதி சந்திப்பாரா? மாட்டாரா? என்ற பரபரப்பான கேள்விக்கிடையே, திங்களன்று காலை சென்னை ராஜ் பவனில் சந்திப்பு நடந்தது. சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு இறுக்கமாகவே இருந்ததாகச் சொல்கிறார்கள்.

அறிவியல் மாநாட்டைத் தொடங்கி வைக்க ஞாயிறன்று சென்னை வந்தார், பிரதமர் மன்மோகன் சிங். புரோட்டோக்கால்படி பிரதமரை முதல்வர் வரவேற்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால், சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர், பிரதமரை வரவேற்கச் செல்லவில்லை. தன்னுடைய எதிர்ப்பை முதல்வர் தெரிவிக்க நினைக்கும்போது, இது போன்ற புறக்கணிப்பைச் செய்வது வழக்கம்தான் என்கிறார்கள் தி.மு.க.வினர்.

‘‘இந்திய அமைதிப்படை சென்னை திரும்பிய போது, முதல்வர் அவர்களை வரவேற்கப் போகவேண்டும். ஆனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி போகவில்லை. புறக்கணித்தார். அப்போது தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இல்லை. ஆனால், இன்று கூட்டணியில் அவர் இருக்கிறார். இருந்தாலும் அவர் வரவேற்கப் போகவில்லை. இதன் மூலம் அவர் பிரதமரைப் புறக்கணிக்க விரும்புகிறார் என்பது எங்களுக்குப் புரிகிறது’’ என்று முக்கிய தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் தனக்குத் தெரியாமல் எல்லாமே நடந்தது. ராசாதான் இதற்கு முழுப் பொறுப்பு என்று நினைக்கிறார். அதனால்தான் அவர், பொதுக் கணக்கு குழுவில் ஆஜராகத் தயார் என்று சொன்னார். இது தி.மு.க. தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை அடையாறு பூங்கா திறப்புவிழாவுக்கு பிரதமரை கடந்த நவம்பர் மாதம் அழைத்திருந்தனர். அவரும் தேதி ஒதுக்கிக்கொடுத்து இருந்தார். ஆனால், கடைசி நேர த்தில் பிரதமர் பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொள்வதை ரத்து செய்துவிட்டார்.

சி.பி.ஐ. விசாரணையின் போது, ராசா பிரதமர் பெயரை இழுத்ததுதான் இதற்குக் காரணம் என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன. அதோடு சென்னை வரும் பிரதமரை தங்களுக்குச் சாதகமாக பேச வைக்க ஆளும்கட்சி தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டதாம். இதில் கடுப்பான பிரதமர், விழாவில் பங்கேற்பதை ரத்து செய்ததாகவும் சொல்கிறார்கள். இதுதான் முதல்வரின் உடனடியான கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள்.

கடந்த சனிக்கிழமையன்று சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை அழைத்து முதல்வர் பேசியிருக்கிறார். அப்போது, பிரதமரின் செய்கையால் தான் அடைந்த வேதனைகளை குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவரும் டெல்லியில் நடக்கும் சில சம்பவங்களை முதல்வரிடம் சொல்லியி ருக்கிறார். அதன் பின்னர்தான் பிரதமரை வரவேற்கப் போவதில்லை என்று முடிவு எடுத்ததாகச் சொல்கிறார்கள்.

ஞாயிறன்று வைரமுத்து ஆயிரம் பாடல்கள் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் முதல்வர். விழாவில் பேசிய அனைவருக்கும் ஐந்து நிமிடமே கொடுக்கப்பட்டு இருந்தது. பிரதமரை வரவேற்க முதல்வர் செல்ல இருப்பதால் பேச்சாளர்கள் சுருக்கமாகப் பேச பணிக்கப்பட்டார்கள். ஆனால் முதல்வர் பேசும்போது, முரசு கட்டிலில் தூங்கிய புலவன் கதையைச் சொல்லி, ‘தமிழுக்குத் தொண்டு ஆற்றுவதற்காக நான் வைரமுத்து விழாவில் கலந்துகொள்கிறேன். பிரதமரைக்கூட வரவேற்கப் போவதில்லை’ என்று சொன்னார்.

விழா முடிந்ததும் புதிய தலைமைச் செயலக வளாகத்துக்குச் சென்றுவிட்டார் முதல்வர். அங்குள்ள தொட்டியில் உள்ள மீன்களுக்கு தீனி போட்டுக் கொண் டிருந்தார். அப்போது உடனிருந்த அமைச்சர்கள், பிரதமரைச் சந்திக்கும் நேரம் நெருங்குவதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அதனைப் பொருட்படுத்தாமல், மீன்களை ரசிப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்திருக்கிறார். எனவேதான் திட்டமிட்டே, முதல்வர் பிரதமரைச் சந்திக்கச் செல்லவில்லை என்று காங்கிரஸ்காரர்கள் கருதுகிறார்கள்.

பிரதமரை வரவேற்றுத் திரும்பிய மு.க.ஸ்டாலின், முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, ‘‘பிரதமர் சந்திப்பைத் தவிர்த்தது முறையல்ல. இதில் உங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஒரு மாநிலத்துக்கு வரும் பிரதமரை அந்த மாநில முதல்வர் வரவேற்பதுதான் மரபு. கூட் டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வரவேற்பதுதானே மரியாதை. அப்படியிருக்கையில், கூட்டணியில் உள்ள நீங்கள் அவரை வரவேற்காமல் இருப்பது நல்லதல்ல’’ என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார். அப்போது, உடனிருந்த சில மூத்த அமைச்சர்களும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

முதல்நாள் இரவு தன்னுடைய உடல்நிலையைக் காரணமாகக் காட்டி ரத்து செய்யப்பட்ட பிரதமருடனான சந்திப்பை மறுநாள் (திங்கள்கிழமை) காலை எட்டு மணிக்கு உறுதி செய்தார், முதல்வர். அதன்படியே சந்திப்பும் நடந்தது. வழக்கமாக தன் குடும்ப உறவுகளையே இதுபோன்ற சந்திப்புகளுக்கு அழைத்துச் செல் லும் கருணாநிதி, இந்த முறை டி.ஆர். பாலுவை மட்டுமே அழைத்துச் சென்றதும் அரசியல் வட்டாரங்களில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

ராஜ்பவனில் மேல்தளத்தில் தங்கியிருந்த பிரதமர் மன்மோகன் சிங், முதல்வரின் வசதிக்காக கீழ்த் தளத்திற்கு வந்து முதல்வரை வரவேற்று, 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகும் தி.மு.க-காங்கிரஸ் உடனான உறவு தாமரை இலை மேல் தண்ணீர்த் துளி போல் இருப்பதாகவே காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர்கள் கருதுகிறார்கள். ராஜ்பவனில் காத்திருந்த நிருபர்கள் பிரதமரைச் சந்தித்து விட்டு வந்த முதல்வரிடம், காங்கிரஸ்-தி.மு.க உறவு குறித்துக் கேட்டபோது, இறுக்கமான முகத்துடன், ‘‘உங்களுக்கும் எனக்குமான உறவு போலவே இந்தக் கூட்டணியும் உள்ளது’’ என்று சூசகமாகப் பதிலளித்திருக்கிறார். முன்பெல்லாம் நிருபர்கள் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினால், சிரித்த முகத்துடன் ‘‘கூட்டணி சுமுகமாக உள்ளது; இந்தக் கூட்டணி தொடரும்’’ என்றெல்லாம் உற்சாகமாகப் பதிலளிப்பார்.

ஸ்பெக்ட்ரம் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக சமீபகாலமாக பத்திரிகைகளையும், செய்தியாளர்களையும் முதல்வர் கடிந்து வருகிறார். இந் நிலையில், பத்திரிகையாளர்களுடன் காங்கிரஸ் உறவை ஒப்பிட்டுப் பேசியதன் மூலம் முதல்வர் மறைமுகமாக உணர்த்த வருவது எதை என்பதை பத் திரிகையாளர்கள் போலவே காங்கிரஸாரும் உணர்ந்திருப்பார்கள்.

எது எப்படியோ தன்னுடைய அழைப்பை ஏற்று பூங்கா திறப்புவிழாவுக்கு வராத பிரதமரைப் புறக்கணித்ததன் மூலம் தன்னுடைய கணக்கை சரி செய்து கொண்டார் என்றே அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

அமைச்சர் பெயர் புறக்கணிப்பு!

பிரதமர் பங்கேற்கும் இந்திய அறிவியல் கழக மாநாட்டு விளம்பரங்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. துணை முதல்வர் ஸ்டாலின் தவிர தமிழக அமைச்சர்கள் யாருடைய பெயரும் அந்த விளம்பரத்தில் இடம் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் நோக்கர்கள். வழக்கமாக இது போன்ற நிகழ்ச்சிகளில் உயர் கல்வித்துறை அமைச்சரின் பெயர் இடம் பெறும். ஏனோ அவர் பெயர் இடம் பெறவி ல்லையாம்.

வன்னியருக்கு கவர்னர் பதவி!

சென்னை விமான நிலையத்தில் தன்னை வரவேற்ற அனைவருக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று வாழ்த்துச் சொன்னார், பிரதமர் மன்மோகன் சிங். முன்னாள் எம்.பி., அன்பரசு பிரதமரிடம் இரண்டு மனுக்களைக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார். அதில், ‘அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இலங்கையில் சமஉரிமை அளிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு தனிஈழம்தான் தீர்வே ஒழிய சமஉரிமை என்பது அங்கே சாத்தியமில்லை. எனவே, காங்கிரஸின் இந்தத் தீர்மானம் தமிழக தேர்தலில் காங்கிரஸ் வெற்றியைப் பாதிக்கும்’ என்றும், ‘காங்கிரஸ் கட்சியில் வன்னியர்களுக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இதனாலேயே வடமாவட்டங்களில் பா.ம.க. வள ர்ந்து வருகிறது. காங்கிரஸில் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வன்னியர்களுக்கு கவர்னர் பதவி கொடுக்க வேண்டும்’ என்றும் அந்த மனுக்களில் தெரிவித்திருக்கிறார்.

‘கூட்டணி வலுவாக இருக்கிறது!’

முதல்வர் கருணாநிதி பிரதமரைச் சந்தித்து திரும்பிய பின்னர், டெல்லியில் இருந்து தன்னோடு அழைத்து வந்திருந்த தூர்தர்ஷன் நிருபரிடம், ‘தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வலுவாக இருக்கிறது’ என்று பிரதமர் சொல்லியிருக்கிறார்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்.

பிரதமர்,முதல்வர் சந்திப்பின் படங்கள் பார்க்க.....

http://www.thedipaar.com/news/news.php?id=22778

"சென்னை விமான நிலையத்தில் தன்னை வரவேற்ற அனைவருக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று வாழ்த்துச் சொன்னார், பிரதமர் மன்மோகன் சிங். முன்னாள் எம்.பி., அன்பரசு பிரதமரிடம் இரண்டு மனுக்களைக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார்.

அதில், ‘அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இலங்கையில் சமஉரிமை அளிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு தனிஈழம்தான் தீர்வே ஒழிய சமஉரிமை என்பது அங்கே சாத்தியமில்லை. எனவே, காங்கிரஸின் இந்தத் தீர்மானம் தமிழக தேர்தலில் காங்கிரஸ் வெற்றியைப் பாதிக்கும்’ என்றும், .... என்றும் அந்த மனுக்களில் தெரிவித்திருக்கிறார்."

அன்பரசு மூலமாக இதை சோனியாவின் முகமூடியான மன்மோகனுக்கு மீண்டும் ஒருமுறை சொல்லப்பட்டுள்ளது. அந்தவிதத்தில் இது ஒரு நன்மையே.

தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தால் மட்டுமே மன்மோகனால் மனு உணரப்படும். இல்லையேல் ஒரு காதால் வாங்கி மறுகாதால் விட்ட இன்னுமொரு செய்தி.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.