Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாஜக எம்.எல்.ஏவை கத்தியால் குத்திக் கொன்ற பீகார் பெண்

Featured Replies

பீகாரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜ் கிஷோர் கேசரி இன்று ஒரு பள்ளி ஆசிரியையால் குத்தி கொல்லப்பட்டார். அந்த பெண் ஏற்கனவே கேசரி தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளக்கியதாக

புகார் அளித்திருந்தார்.

பூர்னியாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அவர் கேசரி மீது போலீஸில் புகார் கொடுத்தார். அதில், தன்னை கேசரியும், அவரது அடியாட்களும் கடந்த மூன்று வருடமாக கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளக்கி வந்ததாக கூறியிருந்தார். இருப்பினும் இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து இன்று காலை சிபாஹி தோலாவில் உள்ள எம்எல்ஏவின் வீட்டுக்குச் சென்றார் பூனம். அங்கு தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் கேசரி. அவரிடம் சென்ற பூனம், கேசரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென கத்தியை எடுத்து சரமாரியாக கேசரியைக் குத்தினார். இதில் நிலை குலைந்த கேசரி கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பீகாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொல்லப்பட்ட கேசரிக்கு 51 வயதாகிறது. நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

கேசரியை சரமாரியாக குத்திக் கொன்ற பூனை அங்கிருந்தவர்ள் மடக்கிப் பிடித்து சரமாரியாக அடித்ததில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவரை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் நிதீஷ் குமார் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். டிஜிபியிடம் விரிவான அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து எம்.எல்.ஏக்களின் பாதுகாப்பையும் மறு ஆய்வு செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியை சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து கேசரியின் ஆதரவாளர்கள் வன்முறையில் குதிக்காமல் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary

Bihar MLA Raj Kishore Kesari was stabbed to death by a school teacher who accused him earlier of rape. She walked into his home this morning and stabbed him in the stomach. He was declared dead while bringing to the hospital.

http://thatstamil.oneindia.in/news/2011/01/04/lady-teacher-stabs-bihar-mla-killed.html

பா.ஜ. கா. ஒரு வட இந்திய இந்தி, இந்து வெறியர் கூட்டம். இந்திய பண்பாடு பேசி பெண்களை வல்லுறவுக்கும் உட்படுத்தியுள்ள ஒருவனுக்கு நல்ல தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.