Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் ஆதரவை இழக்கிறது காங்கிரஸ்!

Featured Replies

அடுத்தடுத்து வெடித்துக் கிளம்பும் ஊழல் குற்றச்சாற்றுக்களால், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே சரிந்து வருவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

நாளைக்கே தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சி 40 க்கும் அதிமான இடங்களை இழக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், கார்கில் போர் வீரர்கள் மற்றும் அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு திட்டத்தில் ஊழல், இவை எல்லாவற்ற்றையும் தூக்கி சாப்பிடக் கூடிய அளவிலான ஸ்பெக்ட்ரம் ஊழல் என அடுத்தடுத்து வெடித்துக் கிளம்பிய ஊழல் புகார்களால் காங்கிரஸ் கட்சியின் பெயர் அதலபாதாளத்தில் வீழ்ந்தவுடன்தான், அவசரமாக டெல்லியில் கூட்டப்பட்ட காங்கிரஸ் மாநாட்டில், ஊழலுக்கு எதிராக கட்சித் தலைவர் சோனியா காந்தி வீராவேசமாக முழங்கித் தள்ளினார்.

பிரதமர் மன்மோகன் சிங்கோ, ஊழல் நடப்பது கண்முன் தெரிந்தும் அதனை தடுக்காமல் இருந்துவிட்டு, நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு முன்னர் வேண்டுமானால் ஆஜராகத் தயார் என்றெல்லாம் பம்மாத்து காட்டினார்.

ஆனால் இவை எதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதுதான் தற்போது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

போதாதற்கு ஆழக்குழித் தோண்டி புதைக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி நினைத்துக் கொண்டிருந்த போபர்ஸ் ஊழல் விவகாரம், அதில் குற்றம் சாற்றபட்ட சோனியா காந்தியின் உறவினர் ஒட்டாவியோ குட்ரோச்சி லஞ்சப் பணம் பெற்றது உண்மைதான் என்று வருமான வரித்துறை தீர்ப்பாயம் அண்மையில் அளித்த தீர்ப்பு மூலம் மீண்டும் விஸ்வ ரூபம் எடுத்துள்ளதால், மக்களிடையே அக்கட்சி மீதான அதிருப்தி இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது.

இந்த சூழ்நிலையில்தான்,"தற்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்?" என்ற கேள்வியுடன் ஆங்கில பத்திரிகை ஒன்று, பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான 'ஏசி நீல்சன்' உடன் இணைந்து நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சி தற்போது நாடாளுமன்றத்தில் வைத்துள்ள 206 இடங்களில் 40 இடங்களுக்கும் அதிகமானவற்றை இழக்க நேரிடலாம் எனத் தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்பில் பங்கேற்று பதிலளித்தவர்களில் 44 விழுக்காட்டினர், அடுத்தடுத்து எழுந்துள்ள ஊழல் குற்றச்சாற்றுக்களால் பிரதமர் மன்மோகன் சிங் மீது முன்பு இருந்த மதிப்பு சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 19 மாநிலங்களில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட்டே தீர வேண்டும் என எதிர்கட்சிகள் ஒற்றைக் காலில் பிடிவாதமாக நிற்பதால், நாடாளுமன்றத்தை நடத்துவதில் நீடிக்கும் முட்டுக்கட்டையை நீக்க வழி தெரியாமல், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கை பிசைந்து நின்று கொண்டிருக்கிறது.

இதனால் நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இத்தகையதொரு சூழ்நிலையில்தான் மேற்கண்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி, 40 க்கும் அதிகமான இடங்களை இழக்கக் கூடும் என்று தெரியவந்துள்ள அதே நேரத்தில், பா.ஜனதாவுக்கு தற்போதுள்ளதைவிட 20 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஓட்டு வங்கிகளில் ஒன்றான இந்திய ஏழைகளிடம் அதன் செல்வாக்கு 3 விழுக்காடு சரிந்துள்ளதாகவும், அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

அதே சமயம் 2014 ல் பொதுத் தேர்தல் நடந்தால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பிருப்பதாக 42 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான அதிகார மையமாக இன்னும் சோனியா காந்திதான் திகழ்கிறார் என்றபோதிலும், அவர் பிரதமராக ஆவதற்கு 2006 ல் காணப்பட்ட 26 விழுக்காடு ஆதரவு, தற்போது 8 விழுக்காடாக சரிந்துள்ளதாக தெரிவிக்கும் அந்த கருத்துக் கணிப்பு, 43 விழுக்காட்டினர் ஊழல் புகார்களால் சோனியா மீதான மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியதாகவும் தெரிவிக்கிறது.

இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் நிலை இதுதான் என்றாலும், இந்த ஊழல் புகார்களையெல்லாம் மக்கள் மறந்துபோகிற மாதிரி மற்றொரு பிரச்சனை வெடிக்காமலா போய்விடும்...?

மக்களின் மறதி! அதுதானே அரசியல் கட்சிகளுக்கு எல்லாமே...!

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1101/07/1110107041_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸ் கட்சியை கலைத்து விடச் சொன்னார் காந்தி.

சுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸ் கட்சியே... அதிக ஆண்டுகள் பதவியில் இருந்தாலும்.... இந்தியாவிற்கு அதிக நன்மைகள் கிடைக்கவில்லை.

மாறாக இந்தியாவின் எல்லைக் கோடுகள் சுருக்கியது தான் மிச்சம்.

பி.ஜே. பி. குறுகிய காலமே ஆட்சியில் இருந்தாலும்.... அணுகுண்டை வெடிக்க வைத்தார்கள்.

  • தொடங்கியவர்

கிடத்தட்ட1.2 பில்லியன் பல்லின மக்களை கொண்ட சனநாயக இந்தியாவில், ஊழல் குறைக்கப்பட்டால் மட்டுமே வறுமை அகலும். வறுமை அகன்றாலே மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வரும்.

இந்த "பூனைக்கு யார் மணி கட்டுவது" என்ற சிக்கலில் அரசியல்வாதிகள் கோடீஸ்வரர் ஆகிவிடுகிறார்கள். மக்களை வறுமையில், அறியாமையில் வைத்திருக்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.