Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராளிகளின் பயிற்சி முகாம்களும் எம்.ஜி.ஆரும்

Featured Replies

இலங்கையின் இன நெருக்கடி தீவிரமடைந்து தமிழ் இளைஞர் அமைப்புக்கள் தமது பாதுகாப்புக்காக தென்னிந்தியாவைப் பின்தளமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்த காலத்திலிருந்தேம தமிழகத்தில் ஆயுதப் பயிற்சிக்கான முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மட்டுமன்றி தீவிர தமிழ்ப் பற்றாளர்கள் சிலரும் இந்த முயற்சிகளுக்குப் பெருமளவு உதவிகளை வழங்கிவந்துள்ளார்கள்.

சிலர் தமது காணிகளையே இதற்காகக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் எந்தளவுக்கு போராளி அமைப்புக்களின் மீது பற்றுதலைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

இது தொடர்பில் தமிழ்க முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு உளவுப் பிரிவினரின் தகவல்கள் கிடைத்துக்கொண்டிருந்த போதிலும், அவ்விடயத்தில் மௌனமாக இருப்பதையே அவர் விரும்பினார். கண்டும் காணாதது போன்ற ஒரு அணுகுமுறையைத்தான் இவ்விடயத்தில் எம்.ஜி.ஆர். போராளிகள் விடயத்தில் கையாண்டார். இதேவேளையில் இவ்விடயத்தில் எம்.ஜி.ஆர். மௌனமாக இருந்த நிலையில் உளவுப் பிரிவுகளின் தகவல்கள் புதுடில்லி வரையில் சென்றது. பிரதமர் இந்திரா காந்திக்கு இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டபோது, அவரும் எம்.ஜி.ஆர். போல அது தொடர்பாக அலட்டிக்கொள்ளாமல் மௌனமாக இருப்பதையே விரும்பினார்.

எம்.ஜி.ஆர். கடைப்பிடித்த மௌனத்துக்கும் இந்திரா காந்தியின் மௌனத்துக்கும் வௌ;வேறான காரணங்களே இருந்தன. எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரையில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் பயிற்சிக்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் அவரது வாக்கு வங்கியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இரண்டாவதாக அவ்வாறான நடவடிக்கையில் இறங்குவது கருணாநிதியின் பிரச்சாரங்களுக்கு வாய்ப்புக்களைக் கொடுப்பதாக அமைந்துவிடும். இதனாலும், தன்னுடைய அரசியலுக்குத் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு ஆதரவான செயற்பாடுகள் அவசியமானதாக இருக்கும் எனவும் கருதியதால்தான் இவ்விடயத்தை கண்டும் காணாமலும் இருப்பதற்கு எம்.ஜி.ஆர். விரும்பினார்.

மறுபுறத்தில் இந்திரா காந்தியைப் பொறுத்தவரையில் இதற்கு உள்ளுர் அரசியல் மட்டும் காரணமாக இருக்கவில்லை. சர்வதேச அரசியலும் இதற்குக் காரணமாக அமைந்திருந்தது. உள்ளுர் அரசியலைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆரின் அரசியல் கூட்டு இந்திரா காந்திக்கு அவசியமானதாக இருந்தது. இதனைவிட தமிழகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகள் எதனையும் அவர் விரும்பவில்லை. இதனைவிட பிராந்திய ரீதியான அரசியலே இந்திரா காந்தியின் அணுகுமுறையைத் தீர்மானிப்பதில் பிரதான பங்கு வகித்தது.

இலங்கையில் பதவியிலிருந்த ஜெயவர்த்தன அரசாங்கம் அமெரிக்கா சார்பான கொள்கையைக் கடைப்பிடித்ததுடன், தமிழ்ப் போராளி அமைப்புக்களை ஒடுக்குவதற்கு மேற்கு நாடுகளிடமிருந்து ஆயுத உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டது. மேற்குலகுடனான ஜெயவர்த்தனவின் நெருக்கமான உறவு - தனது புவியியல் சார்ந்த நலன்களுக்குப் பாதகமானதாக அமையும் என்பதால் ஜெயவர்த்தனவுக்குப் பாடம் புகட்டுவதற்கான சர்ந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த இந்திரா காந்தியைப் பொறுத்தவரையில் தமிழ் இளைஞர்களுக்கான ஆயுதப் பயிற்சி முகாம்கள் தமிழகத்தில் செயற்படுவது மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக இருக்கும் என நம்பப்பட்டாலும் , இந்த முகாம்களை மூடிவிடுமாறு இந்திரா காந்தி தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு முதலில் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது.

உள்நாட்டில் பாதுகாப்புக்கு இது பிரச்சினையைக் கொடுப்பதாக அமையும் என்பதாலேயே இந்த முகாம்களை மூடிவிடுவதற்கு இந்திரா காந்தி உத்தரவிட்டதாகக் கூறப்படுகின்றது. இருந்தபோதிலும் இந்திரா காந்தியின் இந்தக் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதற்கு இரண்டு காரணங்களை எம்.ஜி.ஆர். தெரிவித்திருந்தார்.

ஓன்று - ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக தமிழக மக்கள் உள்ளார்கள் என்பதுடன், ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டவர்களாக உள்ளனர். இந்த நிலையில் முகாம்களை மூடிவிடுவது என்ற முடிவு அவர்களுடைய எதிர்ப்பைத் தோற்றுவிப்பதாக அமையும்.

இரண்டு – கருணாநிதி ஈழத் தமிழர் பிரச்சினையை ஏற்கனவே ஒரு அரசியல் விவகாரமாக்கிவிட்டார். இந்த நிலையில் முகாம்களை மூடிவிடுவது என்ற முடிவை தான் எடுத்தால் அதனைத் தன்னுடைய அரசியல் நலன்களுக்கு கருணாநிதி பயன்படுத்திக்கொள்வார். இது அரசியல் ரீதியாக தனக்குப் பெரும் பின்னடைவாக அமையும் எனவும் எம்.ஜி.ஆர். சுட்டிக்காட்டினார்.

ஆக, தமிழகத்தில் அமைக்கப்பட்ட ஈழப்போராளிகளின் முகாம்களை அகற்றிவிட வேண்டும் என மத்திய அரசு ஆரம்பத்திலேயே மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தடையாக அமைந்தது தமிழக அரசியல்தான் என்பதை இதன் மூலமாகப் புரிந்துகொள்ள முடியும். தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளும் ஈழத் தமிழர் பிரச்சினையைத் தமது அரசியலுக்கான மூலதனமாகக் கருதிச் செயற்பட முனைந்துள்ள நிலையில் அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால் இந்திரா காந்தியால் மேற்கொண்டு எதனையும் செய்ய முடியவில்லை.

எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்ததைப் போலவே தமிழ்ப் போராளி அமைப்புக்களுடன் நெருக்கமான உறவுகளை கருணாநிதி ஏற்படுத்தியிருந்தார். குறிப்பாக ரெலோ அமைப்புடன் கருணாநிதியின் நெருக்கம் அதிகமானதாக இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். குறிப்பாக எந்த ஒரு அமைப்புடனும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியிருக்கவில்லை.

தமிழகத்தில் உருவாகியிருந்த இந்த மாற்றங்கள் தொடர்பாக இந்திய புலனாய்வு நிறுவனமான ‘றோ’ இந்திரா காந்திக்கு தொடர்ந்தும் தகவல்களையும், எச்சரிக்கைகளையும் அனுப்பிக்கொண்டிருந்தது. குறிப்பாக தனி ஈழத்தை உருவாக்குவது இந்தியாவுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என இந்திரா காந்திக்கு அனுப்பிய தகவல்களில் றோவும், புலனாய்வுப் பணியகமும் இந்திரா காந்தியை எச்சரித்திருந்தன. தமிழக அரசியல்வாதிகள் இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு ஈழத்தை தமக்கான ஒரு தளமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் எனவும் இந்த எச்சரிக்கைகளில் இந்தியப் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்திருந்தன.

இந்தியாவிலிருந்து பிரிந்து திராவிடநாடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை திராவிடர் கழகத்தவர்களால் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என அறிவித்து அண்ணாத்துரையே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவராக இருந்துள்ளார். இருந்தபோதிலும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போர் வெடித்த பின்னர் இந்தக் கோரிக்கையை அண்ணாத்துரை கைவிட்டார். சீனாவுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் இணைந்து நிற்க வேண்டும் என அவர் அறிவித்தார்.

அண்ணாத்துரை இந்தக் கோரிக்கையைக் கைவிட்டிருந்தாலும், நீறுபூத்த நெருப்பாக இந்தக் கோரிக்கை தீவிரவாத அமைப்புக்கள் சிலவற்றிடம் இருந்துகொண்டுதான் இருந்தது. இலங்கையில் தனி ஈழம் அமைக்கப்பட்டால், தமிழகத்திலும் பிரிவினைவாத சக்திகளுக்கு அது உற்சாகமளிப்பதாக அமைந்துவிடும் என இந்திய புலனாய்வு நிறுவனங்கள் எச்சரித்திருந்தன. அதனால் போராளிகள் விடயத்தில் கடுமையான நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தியப் புலனாய்வு அமைப்புக்களின் கருத்தாக அமைந்திருந்தது.

இருந்தபோதிலும், இந்திரா காந்தியைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் செயற்பாடுகளுக்கு எதிரான நகர்வுகள் எதனையும் முன்னெடுக்கக்கூடியவராக அவர் இருக்கவில்லை. காரணம் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். பலமானவராகவும் வசீகரம் மிக்க ஒரு தலைவராகவும் இருந்தார். அத்துடன் தென்மாநிலங்களில் பலவீனமான நிலையில் காங்கிரஸ் இருந்த அதேவேளையில், தமிழகத்தில் எம்.ஜி.ஆரைப் பகைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது என்பதையும் இந்திரா காந்தி தெரிந்திருந்தார்.

இந்த நிலையில், ஜெயவர்த்தனவை வழிக்குக் கொண்டுவருவதறகு போராளிகளை ஒரு வரையறைக்குள் பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக இந்திரா காந்தி சிந்திக்கத் தொடங்கிளார். இதற்காக புலனாய்வு அமைப்புக்களின் ஆலோசனைகளையும் அவர் கோரினார்.

http://pooraayam.com/mukiaya/275-eelamindia09.html

பூராயத்துக்காக

சிவயோகன்

அண்ணாத்துரை இந்தக் கோரிக்கையைக் கைவிட்டிருந்தாலும், நீறுபூத்த நெருப்பாக இந்தக் கோரிக்கை தீவிரவாத அமைப்புக்கள் சிலவற்றிடம் இருந்துகொண்டுதான் இருந்தது

தமிழகத்தில் இருந்த தீவிரவாத அமைப்பினரை பூராயத்தினர் எழுதினால் நாங்களும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்

இந்திரா,எம்.ஜி.ஆர்.....பூராயம் எல்லாம் இப்ப எங்களுக்கு எதற்கு....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.