Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தின் பின்னரும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடு அரசாங்கத்திடம் இல்லை

Featured Replies

யுத்தத்தில் வெற்றிபெற்றாலும் நிரந்தரமான, திருப்தியான நாட்டை கட்டியெழுப்பும் வரை சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. இலங்கையில் சுமார் 20 லட்சம் தமிழ் மக்கள் இருக்கின்றனர். நாட்டின் சனத் தொகையில் 10 சதவீதமான மக்கள் திருப்தியின்மையை மாத்திரமல்லாமல், கோபத்தையும் வெறுப்பையும் வலிகளையும் கொண்டிருக்கும்போது ஸ்திரமான நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

நாட்டில் முன்னெப்போதுமில்லாதளவு ஊழல் மலிந்திருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். அரசாங்கத் திணைக்களங்களில் உயர் பதவிகளிலுள்ளோர் பலர் தகுதியற்றவர்கள் எனவும் அவர் விமர்சித்தார்.

தமது குழுவொன்று மேற்கொண்ட மதிப்பீடென்றின்படி, தேசிய ரீதியில் 40 சதவீதம் ஊழல் காரணமாக விரயமாகுவதாக தெரியவந்துள்ளதாகவும் ஊழலை நிறுத்த முடிந்தால் பெருந்தொகைப் பணத்தை அபிவிருத்திக்கு செலவிட முடியும் எனவும் அவர் கூறினார்.

எந்த அடிப்படையில் இந்த கணிப்பு மேற்கொள்ளப்பட்டது எனக் கேட்டபோது, இக்கணிப்புகள் பெரும்பாலும், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் கேள்விப் பத்திர நடைமுறைகள், அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படக்கூடிய செலவுகள் குறித்து தான்பெற்றுக்கொண்ட அறிவின் அடிப்படையிலானவை என பதிலளித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மிகச் சிறந்ததாக தாங்கள் கருதுவது எது? என வினவியபோது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமை சிறந்த விடயம். அது மாத்திரமே இந்த அரசாங்கத்தின் ஒரேயொரு சிறந்த நடவடிக்கை என அவர் பதிலளித்தார்.

சிரேஷ்ட அமைச்சர் பதவிகள் குறித்து கருத்து கேட்டபோது, எந்தவிதமான அறிவார்ந்த அடிப்படையுமின்றி அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறினார்.

பணிகளை சிறப்பாக செய்வதற்கு பல்வேறு துறைகள் ஒரே அமைச்சரின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனது அமைச்சரவையில் முதலில் 21 பேர் இருந்தனர். பின்னர் 28 பேரும் அதன் பின்னர் 24 பேரும் இருந்தனர். இன்று ஒரே அமைச்சு 8-10 துண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் திறமையான அமைச்சர்கள்கூட, சில துறைகள் அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டுள்ளதால் சிறந்த சேவைகளை வழங்கமுடியாதுள்ளனர். கட்சிக்காக தியாங்களைச் செய்த மூத்தவர்களை ஒதுக்குவது நல்லதல்ல என்றார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/14591-2011-01-09-21-43-22.html

  • தொடங்கியவர்

மீண்டும் அரசியலுக்கு வரமாட்டேன்; எனது பிள்ளைகளும் வரமாட்டார்கள் : சந்திரிகா

மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான எண்ணம் தன்னிடமில்லை எனவும் தற்போது பிரிட்டனில் வசிக்கும் தனது மகனோ மகளோ அரசியலுக்கு வரமாட்டார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறினார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் வகிப்பதற்கு அரசியலமைப்பில் இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா? என அவரிடம் கேட்டபோது, இல்லை. ஜனாதிபதி பதவியில் எனக்கு பேராசை கிடையாது. நான் ஏற்கெனவே இரு தடவை அப்பதவியை வகித்துவிட்டேன்.

சிலர் அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதற்கு முயற்சிப்பது ஏதாவது தனிப்பட்ட லாபங்களைப் பெறுவதற்கே. நான் ஜனாதிபதி பதவியிலிருந்தபோது எனக்காகவோ பிள்ளைகளுக்காகவோ தனிப்பட்ட ரீதியில் எதுவும் செய்யவில்லை. பணம் சம்பாதிக்கவில்லை.

நான் அரசியலில் ஈடுபடுவதை எனது பிள்ளைகள் விரும்பியிருக்கவில்லை. 60 வயதுக்கு மேல் பதவியிலிருக்க மாட்டேன் என எனது பிள்ளைகளுக்கு வாக்குறுதியளித்திருந்தேன். பகிரங்கமாகவும் இதை நான் கூறியிருந்தேன். எனவே எனக்கு மீண்டும் பதவிக்கு வரும் நோக்கம் கிடையாது. எனது பிள்ளைகளும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என பதிலளித்தார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/14592-2011-01-09-22-17-50.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.