Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?

Featured Replies

‘எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ’ என்பது தமிழ்ப் பழமொழி. இந்தப் பழமொழியின் பொருள் மிகவும் கருத்துச் செறிவுடையது. சமகாலத்தில் எங்களுக்குப் பொருந்தக் கூடியதும் இதுவே. புற்றில் குடியிருப்பது என்ன பாம்பு என்பது தெரியாமல் இருப்பது போல, தமிழ் மக்களுக்காகப் பாடுபடுபவர்கள் யார்? பாடுபடுவது போல நடிப்பவர்கள் யார்?

நடிப்பது மட்டுமன்றி எங்களை விற்பதற்காகவே வெளிக்கிட்டவர்கள் யார் என்பதைக் கண்டு கொள்வதில் தமிழ் மக்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர்.

இதனால் உண்மையாக - விசுவாசமாகத் தமிழ் மக்கள் மீது பற்றுக் கொண்டு செயற்படுபவர்களை உதறித் தள்ளி விட்டு நடிப்புச் சுதேசிகளை நம்மவர்கள் என்று நம்பி ஏமாறும் பரிதாபத்தில் தமிழினம் இருக்கிறது. என்ன செய்வது! சிறுபான்மை இனங்களில் இத்தகைய பரிதாபங்கள் இருப்பது வழமை என்றாகி விட்டது.

மக்கள் தெளிவடையாதவரை இத்தகையவர்கள் கூடவே இருந்து குழி பறிப்பார்கள்.

இனத்திற்காகப் பாடுபடுவது போல பாசாங்கு செய்வார்கள். உண்மைத் தகவல்களைத் திரிவடைய வைப்பார்கள். மக்களும் அவற்றை உண்மையெனக் கருதி விடுவர். இத்தகைய வேதனையான நிலைமை இருக்கும் போது தமிழினம் விடிவு பெறுவது முடியாத காரியம்.

தமிழினம் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாயின், முதலில் மக்களுக்குத் தெளிந்த சிந்தனை தேவை. அதே நேரம் தமிழுக்காகப் பாடுபடுகின்றவர்களும் தாங்கள் நிற்கக் கூடிய இடங்களை வெளிப்படையாகக் காட்ட வேண்டும். எவரும் எந்தப் பக்கத்திலும் நிற்கலாம். அவர்கள் தங்களுடைய பக்கம் இதுதான். அதற்கான காரணங்கள் இவைதான் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அவசியம்.

இதை விடுத்து உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது பெரும் பாவம். அதனை உரியவர்கள் தயவு செய்து கைவிட்டு விட வேண்டும். அன்பார்ந்த மக்களே! ஒரு புற்றில் இருக்கக் கூடிய பாம்புகளும் தனித்தனி இயல்புகள் கொண்டவையாக இருக்கலாம்.

ஆகையால் பாம்புகளைத் தனித்தனியாக ஆய்வு செய்யுங்கள். விஷப் பாம்புகள், வினைப் பாம்புகள் இருக்கலாம். ஏன்? நல்ல பாம்புகளும் வெங்கணாந்திப் பாம்புகளும் இருக்கலாம். பாம்பை இனங்காணும் திறன் தமிழ் மக்களுக்கு இருந்தால் மட்டுமே மீட்சி.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=14722

‘எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ’ என்பது தமிழ்ப் பழமொழி. இந்தப் பழமொழியின் பொருள் மிகவும் கருத்துச் செறிவுடையது. சமகாலத்தில் எங்களுக்குப் பொருந்தக் கூடியதும் இதுவே. புற்றில் குடியிருப்பது என்ன பாம்பு என்பது தெரியாமல் இருப்பது போல, தமிழ் மக்களுக்காகப் பாடுபடுபவர்கள் யார்? பாடுபடுவது போல நடிப்பவர்கள் யார்?

நடிப்பது மட்டுமன்றி எங்களை விற்பதற்காகவே வெளிக்கிட்டவர்கள் யார் என்பதைக் கண்டு கொள்வதில் தமிழ் மக்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர்.

இதனால் உண்மையாக - விசுவாசமாகத் தமிழ் மக்கள் மீது பற்றுக் கொண்டு செயற்படுபவர்களை உதறித் தள்ளி விட்டு நடிப்புச் சுதேசிகளை நம்மவர்கள் என்று நம்பி ஏமாறும் பரிதாபத்தில் தமிழினம் இருக்கிறது. என்ன செய்வது! சிறுபான்மை இனங்களில் இத்தகைய பரிதாபங்கள் இருப்பது வழமை என்றாகி விட்டது.

மக்கள் தெளிவடையாதவரை இத்தகையவர்கள் கூடவே இருந்து குழி பறிப்பார்கள்.

இனத்திற்காகப் பாடுபடுவது போல பாசாங்கு செய்வார்கள். உண்மைத் தகவல்களைத் திரிவடைய வைப்பார்கள். மக்களும் அவற்றை உண்மையெனக் கருதி விடுவர். இத்தகைய வேதனையான நிலைமை இருக்கும் போது தமிழினம் விடிவு பெறுவது முடியாத காரியம்.

தமிழினம் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாயின், முதலில் மக்களுக்குத் தெளிந்த சிந்தனை தேவை. அதே நேரம் தமிழுக்காகப் பாடுபடுகின்றவர்களும் தாங்கள் நிற்கக் கூடிய இடங்களை வெளிப்படையாகக் காட்ட வேண்டும். எவரும் எந்தப் பக்கத்திலும் நிற்கலாம். அவர்கள் தங்களுடைய பக்கம் இதுதான். அதற்கான காரணங்கள் இவைதான் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அவசியம்.

இதை விடுத்து உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது பெரும் பாவம். அதனை உரியவர்கள் தயவு செய்து கைவிட்டு விட வேண்டும். அன்பார்ந்த மக்களே! ஒரு புற்றில் இருக்கக் கூடிய பாம்புகளும் தனித்தனி இயல்புகள் கொண்டவையாக இருக்கலாம்.

ஆகையால் பாம்புகளைத் தனித்தனியாக ஆய்வு செய்யுங்கள். விஷப் பாம்புகள், வினைப் பாம்புகள் இருக்கலாம். ஏன்? நல்ல பாம்புகளும் வெங்கணாந்திப் பாம்புகளும் இருக்கலாம். பாம்பை இனங்காணும் திறன் தமிழ் மக்களுக்கு இருந்தால் மட்டுமே மீட்சி.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=14722

அன்புள்ள அண்ணாமாருக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 2 வருடங்கள் ஆகப் போகின்ற நிலையில்; நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்; நாங்கள் என்ன செய்தோம்; இதை நாங்கள் இதசுத்தியோடு ஆராய்வோம்…

அண்ணையினுடைய உயரிய சிந்தனையிலும் உழைப்பிலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் அர்ப்பணிப்பாலும் கட்டி எழுப்பப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை புலத்தில் சீரழித்தது எந்தப் பிரிவு?

01.அனைத்துலக தொடர்பகம்

02.அரசியல்துறை

03.புலனாய்வுத்துறை

04.கடற்புலிகள்,இம்பிரான் பாண்டியன் உள்ளிட்ட ஏனைய இராணுவப் பிரிவுகள்

இதில் அனைத்துலக தொடர்பகம் என்பது தான் என்னுடைய பதில்.இதற்கு நான் கொடுக்கும் புள்ளி நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது.

இதற்கு காரணமானவர்கள் யார் ?

நந்தகோபன், அறிவு

இவர்கள் யார்?

நந்தகோபன் அனைத்துலக தொடர்பகத்தால் நடத்தப்பட்ட அனைத்து ஊடகங்களுக்கும் பொறுப்பாக இருந்தவர் காஸ்ரோவிடமிருந்த ஆவணங்கள் மற்றும் புலம் பெயாந்த மக்களின் பங்களிப்புகள் புலத்தில் அமைப்புக்கு உதவிய கல்விமான்கள் தொழில்சார் நிபுணர்கள் செல்வந்தர்கள் பற்றிய பதவுகளை கணனிகளில் ஆட்களை வைத்து பதிவித்தவர்;.அவற்றை பராமரித்தவர்

அறிவு நந்தவனம் ஒமந்தை முகமாலை சோதனை சாவடிகளின் பாஸ் வழங்கும் பிரிவுக்கு பொறுப்;பாக இருந்தவர்.அனைத்தலக தொடர்;பகத்தின் வெளிநாட்டு தொடர்பாடல்கள் மற்றம் வலையமைப்ப பற்றி அறிந்திருந்தவர்;.பேச்சு வாhத்தை குழு வந்த காலத்தில் புலத்துக்கு வந்து சென்றவர்.

இவர்கள் இருவரும் முள்ளிவாய்க்காலுக்கு முன் சிறீலங்கா அரசாலும் அவர்களது புலனாய்வுத் துறையினராலும் நன்கு அறிப்பட்டவர்களா?

இவர்களது புகைப்படங்கள் அந்தக் காலகட்டத்தில் அரசிடம் இருக்க சாத்தியம் இருந்ததா?

நிச்சயமாக இவர்கள் நன்கு அறியப்பட்டவர்கள். வெளிநாடுகளில் இருந்து செல்பவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை கொண்டவர்கள்.சிங்கள ஊடகவியலாளர்கள் சிங்கள முதலாளிகள்; கஸ்ரோவை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள்;

சிங்கள தொழிலாளர்களை வைத்து அனைத்துலக தொடர்பகத்துக்கான சந்திப்பு மாளிகை ஒன்றை வன்னியில் கட்டியவர்கள்.

இப்படி அனைத்துலக தொடர்பகத்தின் இரகசியங்கள் தெரிந்த இவர்களை முகாமில் வைத்து சிறீலங்கா படையினர் இனங்காணவில்லையா?

நிச்சயமாக இனங்கண்டார்கள்.

அப்படி என்றால் ஏன் இவர்கள் மூத்த போராளிகள் தடுத்த வைக்கப்பட்டுள்ள வதை முகாங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை?

இவர்களும் அந்த வதை முகாங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அடித்து உதைத்து சித்திரவதை செய்ப்பட்டார்கள்.

அப்படி என்றால் எப்படி இவர்கள் அங்கிருந்து தப்பினார்கள்?எப்படி இவர்களால் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு ஊடாக வெளிநாட்டுக்கு அதுவும் குடும்பத்தினருடன் வரமுடிந்தது?

இந்தக் கேள்விகளுக்கான விடையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்

ஆதை நான் பின்பு சொல்கிறேன

அன்புள்ள அண்ணாமாருக்கு முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 2 வருடங்கள் ஆகப் போகின்ற நிலையில்; நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்; நாங்கள் என்ன செய்தோம்; இதை நாங்கள் இதசுத்தியோடு ஆராய்வோம்…

அண்ணையினுடைய உயரிய சிந்தனையிலும் உழைப்பிலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் அர்ப்பணிப்பாலும் கட்டி எழுப்பப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை புலத்தில் சீரழித்தது எந்தப் பிரிவு?

01.அனைத்துலக தொடர்பகம்

02.அரசியல்துறை

03.புலனாய்வுத்துறை

04.கடற்புலிகள்,இம்பிரான் பாண்டியன் உள்ளிட்ட ஏனைய இராணுவப் பிரிவுகள்

இதில் அனைத்துலக தொடர்பகம் என்பது தான் என்னுடைய பதில்.இதற்கு நான் கொடுக்கும் புள்ளி நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது.

இதற்கு காரணமானவர்கள் யார் ?

நந்தகோபன், அறிவு

இவர்கள் யார்?

நந்தகோபன் அனைத்துலக தொடர்பகத்தால் நடத்தப்பட்ட அனைத்து ஊடகங்களுக்கும் பொறுப்பாக இருந்தவர் காஸ்ரோவிடமிருந்த ஆவணங்கள் மற்றும் புலம் பெயாந்த மக்களின் பங்களிப்புகள் புலத்தில் அமைப்புக்கு உதவிய கல்விமான்கள் தொழில்சார் நிபுணர்கள் செல்வந்தர்கள் பற்றிய பதவுகளை கணனிகளில் ஆட்களை வைத்து பதிவித்தவர்;.அவற்றை பராமரித்தவர்

அறிவு நந்தவனம் ஒமந்தை முகமாலை சோதனை சாவடிகளின் பாஸ் வழங்கும் பிரிவுக்கு பொறுப்;பாக இருந்தவர்.அனைத்தலக தொடர்;பகத்தின் வெளிநாட்டு தொடர்பாடல்கள் மற்றம் வலையமைப்ப பற்றி அறிந்திருந்தவர்;.பேச்சு வாhத்தை குழு வந்த காலத்தில் புலத்துக்கு வந்து சென்றவர்.

இவர்கள் இருவரும் முள்ளிவாய்க்காலுக்கு முன் சிறீலங்கா அரசாலும் அவர்களது புலனாய்வுத் துறையினராலும் நன்கு அறிப்பட்டவர்களா?

இவர்களது புகைப்படங்கள் அந்தக் காலகட்டத்தில் அரசிடம் இருக்க சாத்தியம் இருந்ததா?

நிச்சயமாக இவர்கள் நன்கு அறியப்பட்டவர்கள். வெளிநாடுகளில் இருந்து செல்பவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை கொண்டவர்கள்.சிங்கள ஊடகவியலாளர்கள் சிங்கள முதலாளிகள்; கஸ்ரோவை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள்;

சிங்கள தொழிலாளர்களை வைத்து அனைத்துலக தொடர்பகத்துக்கான சந்திப்பு மாளிகை ஒன்றை வன்னியில் கட்டியவர்கள்.

இப்படி அனைத்துலக தொடர்பகத்தின் இரகசியங்கள் தெரிந்த இவர்களை முகாமில் வைத்து சிறீலங்கா படையினர் இனங்காணவில்லையா?

நிச்சயமாக இனங்கண்டார்கள்.

அப்படி என்றால் ஏன் இவர்கள் மூத்த போராளிகள் தடுத்த வைக்கப்பட்டுள்ள வதை முகாங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை?

இவர்களும் அந்த வதை முகாங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அடித்து உதைத்து சித்திரவதை செய்ப்பட்டார்கள்.

அப்படி என்றால் எப்படி இவர்கள் அங்கிருந்து தப்பினார்கள்?எப்படி இவர்களால் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு ஊடாக வெளிநாட்டுக்கு அதுவும் குடும்பத்தினருடன் வரமுடிந்தது?

இந்தக் கேள்விகளுக்கான விடையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்

ஆதை நான் பின்பு சொல்கிறேன

நாங்கள் திரட்டிய நம்பகமான தகவலின்படி 1999 ம் ஆண்டு மே மாதம் 29 ம் திகதி நந்தகோபனும் அறிவும் அனைத்துலக தொடர்பகத்தின் முக்கியஸ்த்தர்கள் என்றும் அந்தப் பிரிவின் அனைத்து இரசியங்களும் தெரிந்தவர்கள் என்று சிறீலங்கா இரானுவப் புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார்கள்.;

மே 30,31 இரண்டு நாட்களும் இவர்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்

யூன் முதலாம் திகதி இவர்கள் இருவரும் அனைத்துலக தொடர்பகம் பற்றிய தகவல்களை தருவதாகவும் அது தொடர்பான ஆவணங்கள் இருக்கும் இடத்தை காட்டுவதாகவம் ஒப்புக் கொண்டார்கள்.

இந்தத் தகவல் கோத்தபாகவுக்கு அன்றே தெரிவிக்கப்பட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.