Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜிவ் கொலையில் வெளிவராத ரகசியங்கள் அடங்கிய புத்தகம். கதிகலங்கும் காங்கிரஸ்காரர்கள்.

Featured Replies

இந்திரா, ராஜிவ் கொலை வழக்கில் வெளிவராத மர்மங்களை இன்னும் மூன்று மாதங்களில் புத்தகமாக வெளியிடப் போவதாக பரபரப்பை ஏற்படுத்தி இ ருக்கிறார் தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் எஸ். துரைசாமி. தேர்தல் நேரத்தில் வெளிவரப்போகும் இந்தப் புத்தகம் காங்கிரஸ் தலைவர்கள் பலரின் தூக்கத்தைக் கெடுக்கும் என்று ஆரூடம் கூறுகின்றனர் அக்கட்சியினர்.

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளை படகு மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்ததாக புதுச்சேரியைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகுஐயப்பன், தி.மு.க., கவுன்சிலர் சக்திவேல், காரைக்கால் பா.ம.க., மாநில அமைப்பாளர் தேவமணி ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் கைது செய்யப்பட்ட மூன்று பேருமே 27 நாட்களிலேயே விடுதலையானார்கள். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மிகக் குறைந்த நாட்களில் வெளியே வந்தது இந்தியாவிலேயே இவர்கள் மட்டும்தான்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்ட நாராயணசாமியைத் தோற்கடிக்க, லோகுஐயப்பன் கருஞ்சட்டை படையுடன் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். இதற்குப் பழிவாங்கவே, நாராயணசாமியின் தூண்டுதல்பேரில் ஈழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதாக பெரியார் திராவிடர் கழகம் குற்றம்சாட்டியது.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி அரியாங்குப்பம் என்ற இடத்தில், தேசிய பாதுகாப்புச் சட்டமும், தமிழர் உரிமையும் விளக்கப் பொதுக்கூட்டமும், தேசிய பாது காப்புச் சட்டத்தைத் தகர்த்த உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமிக்கு பாராட்டு விழாவையும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் துரைசாமி, லோகு ஐயப்பன் ஆகியோர் பேசிய பேச்சுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கூ ட்டத்தில் பேசிய அத்தனை பேருமே காங்கிரஸ் கட்சியையும், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியையும் விளாசினர்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி விடுதலையான லோகு ஐயப்பன் பேசும்போது, “‘சின்னச் சின்ன வழக்குகள் போட்டு என்னை அசிங்கப்படுத்தாதீர்கள். பெரியார் திராவிடர் கழகத்துக்கும், அதன் தலைவர் கொளத்தூர் மணிக்கும் ஒரு தனி மரியாதை இருக்கிறது. எனவே, குறைந்தபட்சம் தேசிய பாதுகாப்புச் சட் டத்திலாவது கைது செய்யுங்கள்’ என்று சொன்னேன்.

நான் சொன்னதை ஏற்றுக்கொண்டு நாராயணசாமி என் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் போட்டார். என் கோரிக்கையை நிறைவேற்றிய அவர் மீது எனக்கு எப்படி கோபம் வரும்? எத்தனை முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் போட்டாலும், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதிலோ, ஈழத்தமிழர்களை ஆதரிப்பதிலோ எங்கள் நிலையை மாற்றிக்கொள்ள மாட்டோம்’’ என்று ஆவேசப்பட்டார்.

அடுத்து பேச வந்த வழக்கறிஞர் துரைசாமி, இந்திரா மற்றும் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் வெளிவராத ரகசியங்களை புத்தகமாக வெளியிடப்போவதாகக் கூறி பரபரப்பை அதிகப்படுத்தினார்.

“லோகுஐயப்பனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கு புதுச்சேரியின் ‘லெப்டினன்ட் கவர்னர்’ உத்தரவு வாங்கித்தான் போட்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். அரசியல் சட்டத்தில் ‘லெப்டினன்ட் கவர்னர்’ என்ற பதவியே கிடையாது. ‘அட்மினிஸ்ட்ரேட்டர்’ என்ற வார்த்தைதான் உள்ளது. சட்டப்படி இதுவே தவறு.

லோகுஐயப்பனை கடந்த மாதம் 13-ம் தேதி விடுதலை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவு கிடைத்தும் இவர்கள் 15-ம் தேதிதான் விடுதலை செய்தார்கள். ‘முப்பது மணி நேரம் சட்டவிரோதமாக உள்ளே வைத்ததற்காக எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்’ என்று லோகு ஐயப்பன் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளார். ஒரு கோடி ரூபாயை நாராயணசாமி தருகிறாரா அல்லது மற்றவர்கள் தருகிறார்களா என்று பார்ப்போம்.

ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு ஏறக்குறைய இருபது ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இந்த வழக்கில் உள்ள பல வெளிவராத ரகசியங்கள் இப்போது புத்தகமாக தயாராகிக்கொண்டிருக்கிறது. வரும் ஏப்ரல் அல்லது மார்ச் மாத கடைசியில் நான் இதை புத்தகமாக வெளியிடப்போகிறேன். இந்திரா காந்தி கொலை வழக்கிலும் வெளியே வராத ரகசியங்களும் இதில் இடம் பெற இருக்கிறது. பல காங்கிரஸ்காரர்களின் தூக்கத்தை இது கெடுக்கும்.

ராஜிவ் படுகொலையை சிவராசனும், தனுவும் செய்திருந்தாலும், இதிலும் சில ரகசியங்கள் இருக்கின்றன. தனு எடுத்துச் சென்ற ‘ஆர்.டி.எக்ஸ்’ என்ற வெடிம ருந்து அமெரிக்க ராணுவத்தில் உள்ள ஃபேக்டரியில் தயாரிக்கிறார்கள்.

அமெரிக்க ராணுவத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் நாட்டுக்கு மட்டும்தான் ‘ஆர்.டி.எக்ஸ்’ என்ற மருந்தைக் கொடுப்பார்கள். இதை விடுதலைப் புலிகள் விலை கொடுத்து வாங்க முடியாது. இந்திய ராணுவத்தில் மட்டுமே கிடைத்த இந்த வெடிமருந்தை சிவராசனிடம் கொடுத்தது யார்? இதற்கெல்லாம் என் புத்தகம் விடை அளிக்கும்’’ என்று சொல்லிவிட்டு அமர்ந்தார் வழக்கறிஞர் துரைசாமி.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களுக்காக வாதாடியவர் துரைசாமி. எனவே, அவர் போடும் குண்டு யார் யாரை பதம் பார்க்கப்போகிறதோ தெரியவில்லை.

இச்செய்தி குறித்த படங்கள் மற்றும் வீடியோ பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=23063

பிரதான சூத்திரதாரிகள் இந்தியர் பலர், இத்தாலியர் சிலர். முதலில் முஸ்லிம் குழுக்களை அணுகிய கும்பல், ஈற்றில் சில உதிரித் தமிழரை பயன்படுத்திக் கொண்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.