Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டின் ஒரு கோடி நாடார்களும் ஜெயலலிதாவை ஆதரிப்பார்கள்.பாலபிரஜாபதி அடிகளார்

Featured Replies

தேர்தல் வரப்போவதால், தன்னிடம் வைக்கப்படும் கோரிக்கைகளை ஆராயாமல், அதை நிறைவேற்றி வைப்பதாக வாக்குறுதி கொடுத்து, வம்பில் சிக்கி வரு கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

கடந்த மாதம் 23-ம் தேதி குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற ஜெயலலிதா, ‘‘நான் ஆட்சிக்கு வந்தால், குமரியில், பட்டா நிலங்களில் மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்க இருக்கும் தடைகளை நீக்குவேன்’’ எனப் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

உண்மையில் 1982-ல் மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அமைத்த நீதிபதி வேணுகோபால் கமிஷன்தான் குமரியில் புதிதாக மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமலே ஜெயலலிதா பேசிச் சென்றதை அ.தி.மு.க.வினரே ரசிக்கவில்லை.

ஜெயலலிதா பேச்சுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த பா.ஜ., ஜெயலலிதாவின் சாமித்தோப்பு வருகையின்போது, ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. சாமித்தோப்பு கோயில் நிர்வாகியான பாலபிரஜாபதி அடிகளார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்தப் போராட்டத்தை பா.ஜ. ரத்து செய்தது.

இதையடுத்து, கடந்த ஒன்பதாம் தேதி சாமித்தோப்பு வைகுண்டர் பதிக்கு வருகை தந்தார் ஜெயலலிதா. கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார் அவர். ஜெயலலிதாவுக்கு முன்னதாகப் பேசிய பாலபிரஜாபதி அடிகளார், கோயில் வளாகம் என்பதை மறந்து தாராளமாகவே அரசியல் பேசினார்.

‘‘தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்ட இந்தக் காலத்திலும் கடிதம் எழுதக்கூடிய ஒரே நபர் கருணாநிதிதான். ஆளுக்கொரு செல்போனை அவருக்கு அனுப்பி வையுங்கள். காமராஜருக்குப் பிறகு இரண்டு கிறிஸ்துவ நாடார்களை அமைச்சராக்கிய தலைவர் ‘அம்மா’தான். சிறிய மாவட்டமான குமரிக்கு ஒரே நேரத்தில் இரண்டு அமைச்சர் பதவிகளைத் தந்தவரும் அவரே. எனவே, எனது உறவுமுறைகளான கிறிஸ்துவ சங்கத்தினர் இனி எந்த பிஷப் சொன்னாலும் தி.மு.க.வுக்கு ஆதரவாகப் போக மாட்டார்கள்’’ என்றவர், திடீரென மொத்த நாடார்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தி பேசத் தொடங்கினார்.

‘‘தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மீட்பு போராட்டக்குழுத் தலைவராக பணியாற்றியவன் நான். ‘அம்மா’ ஆதரவு கொடுத்த பிறகுதான் அந்த வங்கி மீட்கப்பட்டு, நாடார்களின் கைக்கு வந்தது. தென்னக தேரி மண்ணை கபளீகரம் செய்ய வந்த டாடா நிறுவனம், ‘அம்மா’வின் ஆதரவுடன்தான் சாத்தான்குளத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது.

அதனால் வருகிற தேர்தலில் ஒரு கோடி நாடார்களும் உணர்வுபூர்வமாக ‘அம்மா’வை ஆதரிப்பார்கள். நான் ‘அம்மா’வை இங்கு அழைத்திருப்பதால் எனக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள இரண்டாவது பதியில் அரசு வேலி அமைத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் தொண் ணூறே நாளில் ஓர் ஆணை மூலமாக ‘அம்மா’வே அந்த வேலியை அகற்றுவார்கள்’’ என்றவர், ‘‘தமிழன் தலைநிமிர்ந்து, தன்மானத்தோடு வாழ எங்கள் அம்மாவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தித் தாரும் அய்யா’’ என உரத்த குரலில் சொல்லி, மொத்த கூட்டத்தையும் அதே வாசகத்தை திரும்பச் சொல்ல வைத்தார்.

அடிகளாரின் அரசியல் ஆதரவுப் பேச்சால் உற்சாகமான ஜெயலலிதா, கருணாநிதியை ஏகமாய் வாரினார். ‘‘வாழும்போதே பிறருக்கு உதவவேண்டும் என்கிற கருத்தை மக்கள் மனதில் பதிய வைத்தவர் அய்யா வைகுண்டர். ஆனால், இன்று தனது சொத்திலிருந்து ஒரு விழுக்காடைக்கூட மக்களுக்கு கொடுக்க வி ரும்பாமல், ‘எனக்குப் பிறகு, எனது மனைவிக்குப் பிறகு’ என்றெல்லாம் சொல்பவர்களும் நாட்டில் இருக்கிறார்கள்.

இன்று கொலை, கொள்ளை, சூது என பல்வேறு இன்னல்களுக்கு தமிழகம் ஆளாகியுள்ள சூழலில், அய்யாவழி மக்களாகிய நீங்கள் தர்மத்தை நிலைநாட்ட எனக்கு பக்கத் துணையாக நிற்க வேண்டும்’’ என்றவர், இறுதியாகக் கொடுத்த ஒரு வாக்குறுதிதான் மறுபடியும் சர்ச்சையாகிப் போனது. ‘‘இந்தப் பதியைச் சுற்றி ஏதோ வேலி அமைக்கிறார்களாம். கழக ஆட்சி அமைந்ததும் அந்த வேலிகள் எல்லாம் தகர்க்கப்படும்’’ என்றார் அதிரடியாக.

உண்மையில் வேலி அமைக்கப்பட்டிருப்பது, அய்யா வைகுண்டரின் இரண்டாவது பதி உள்ள ராஜாக்கமங்கலம் முருங்கவிளை கடற்கரையில்தான். பதியை ஒ ட்டிய கடற்கரைப் பகுதியில் மத்திய அரசு மூலமாக இறால் மீன் குஞ்சுகள் உற்பத்தி மையம் ஒன்று அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக வ ருவாய்த் துறையினர் அந்த இடத்தை சர்வே செய்து வேலி போட்டிருக்கிறார்கள். இது புரியாமல் ஏதோ சாமித்தோப்பிலேயே வேலி போடப்பட்டிருப்பது போல பேசிவிட்டுப் போய்விட்டார் ஜெயலலிதா.

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வினர், “இதுபோன்ற பிரச்னைகளைப் பற்றி பேசும் முன்பு, மாவட்டத்திலுள்ள கட்சி நிர்வாகிகளை அழைத்து அதன் பி ன்னணியை அம்மா தெரிந்து கொண்டிருக்கலாம். அருமனையில் கொடுத்த வாக்குறுதியால் இந்து அமைப்புகளின் எதிர்ப்பை சம்பாதித்த அம்மா, மீனவர்களின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும்’’ என்றனர் கவலையுடன்.

இந்த சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், சாமித்தோப்பில் ஜெ. பேச்சைக் கேட்க ஆரவாரத்துடன் திரண்டு வந்திருந்த கூட்டம்தான் அ.தி.மு.க.வினருக்கு பெரிய உற்சாகத்தை அளித்தது.

படங்கள் பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=23061

சாதி அரசியல் நடத்தும் ஈனப்பிறவி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.