Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளுக்கு வானொலி உபகரணங்களை வழங்கியது யார் என்பதில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு வானொலி உபகரணங்களை வழங்கியது யார் என்பதில் வெளியாகியுள்ள புதிய தகவல்கள்!

புதன், 19 ஜனவரி 2011 17:21

2002 பெப்ரவரி 22 இல் ஒஸ்லோவின் ஏற்பாட்டில் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையின் கீழ் புலிகளின் குரல் வானொலி சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்ற தேவை உண்மையில் யாருக்கு இருந்தது.

சிங்கப்பூரிலிருந்து இதற்கென தருவிக்கப்பட்ட உபகரணங்களுக்கான 90, 000 டொலர் கொடுப்பனவைச் செய்தது யார்?

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உட்பட ஏனைய அரச நிறுவனங்களைப் பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்டிருந்த தகவலை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒஸ்டின் பொர்ணான்டோ மறுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகமே இந்த உபகரணங்களைத் தருவித்திருந்தது. இந்த வானொலி உபகரணங்களைத் தருவிக்கும் விடயத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்று அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதில் வேறு எந்த அமைச்சும் சம்ந்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்பும் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க சமாதானச் செயலகம் தான் இந்த உபகரணங்களை அவர்களிடம் ஒப்படைத்தது.

இதிலும் பாதுகாப்பு அமைச்சு எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை. எந்த உதவிகளையும் வழங்கவும் இல்லை. இதேவேளை அப்போதைய இலங்கை அரசு இந்த வானொலி உபகரணங்களைக் கொண்டுவர கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உதவியை நாடியதாக முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஏஷ்லிவில்ஸ் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த உபகரணங்களை அரச சமாதானச் செயலகத்திடம் நேரடியாக ஒப்படைக்கவே நோர்வே தூதரகம் விரும்பியது. புலிகளிடம் அதைக் கையளிக்க அவர்கள் விரும்பவில்லை என்றும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களை மட்டம் தட்டிவிட்டு நேரடியாக புலிகளுக்கு உதவ நோர்வே தூதரகம் விரும்பியதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று முன்னாள் நோர்வே தூதுவரும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ள கருத்து ஏற்கனவே முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக இருந்த பிரட்மன் வீரக்கோன் எழுதிய ஒரு புத்தகத்தில் மறுக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பக் குழுவின் ஊடாக பாதுகாப்பு அமைச்சே இந்த விவகாரத்தைக் கையாண்டது என்று அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2002 நவம்பரில் இந்த உபகரணங்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. நோர்வே தூதரகம் அதை இலங்கை சமாதானச் செயலகத்திடம் ஒப்படைத்தது.

பின்னர் அவை பாதுகாப்பு அமைச்சின் ஊடாக புலிகளிடம் கையளிக்கப்பட்டன என்று அமெரிக்கத் தூதரக வட்டாரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

tamilcnn.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.