Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் கடந்த 8 தினங்களில் 10 கொலை- ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் கடந்த 8 தினங்களில் 10 கொலை- ரணில் :

வன்னியில் இடம்பெறும் மீள்குடியேற்றங்கள் வெற்றியளிக்கவில்லை எனவும் கிளிநொச்சியில் நாளாந்தம் 4 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண சம்பவங்கள் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் முன்னர் அமைதியான நிலைமை காணப்பட்டது. அப்போது, விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இருந்தன. எனினும் தற்போது யாழ்ப்பாணத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதி சீர்குலைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் போல், கொழும்பு அல்லது கண்டியில் இடம்பெற்றிருந்தால், ஊடகங்கள் அது பற்றி பெரிதாக செய்திகளை வெளியிட்டிருக்கும்.

இந்த சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதால், அது குறித்து எவரும் பேசுவதில்லை. அரசாங்கம் அது பற்றி கவனிப்பதில்லை. சிங்கள ஊடகவியலாளர்கள் அது குறித்து எழுதுவதில்லை. யாழ்ப்பாண சம்பவங்கள் குறித்து பேசினால் பிரச்சினை ஏற்படும் என சிலர் அது பற்றி கதைப்பதில்லை. வடக்கில் காணப்படும் வீதி தடைகள் மற்றும் காலரண்கள் அந்த பிரதேசத்தில் உள்ள மக்களின் போக்குவரத்துக்கு தடையாக அமைந்துள்ளன. இராணுவ நடமாட்டங்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன. இவ்வாறான நிலைமையில் ஏன் அங்கு இடம்பெறும் சம்பவங்களை தடுக்க முடியாது. யாழ்ப்பாண பெண்கள் தங்க ஆபரணங்களை அணிய அஞ்சுகின்றனர். அரசாங்கத்திற்கு இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், இந்த சம்பவங்களில் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக நாங்கள் கூறுகின்றோம். பாதுகாப்பு படையினருக்கு இவற்றில் ஒரு பங்கு செல்கிறது.

இராணுவத்தில் இருந்து ஒய்வுப்பெற்றவர்கள் சிலரும் போராளிகள் சிலரும் இணைந்து இந்த வன்செயல்களில் ஈடுபடுவதாக சிலர் கூறுகின்றனர். அரசாங்கம் இது தொடர்பாக தேடி பார்க்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுமானால் நாம் எப்படி வடபகுதி மக்களின் மனத்தை வென்றெடுப்பது?. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி அங்கு நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக தேடிபார்ப்போம் என நான் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தேன். அப்போது எவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அரசாங்கத்திற்கு அதில் விருப்பமில்லை. எம்மை தனியாக போய் ஆராயயுமாறு கூறுகின்றனர். அனைவரும் ஒன்றிணைந்தால், அது குறித்து தேடிபார்க்க முடியும். சர்வக் கட்சி நாடாளுமன்ற குழுவொன்றை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி அங்கு இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் ஆராய வேண்டும்.

அப்படி நடந்தால், முழு நாட்டுக்கும் நல்லது. இல்லாவிட்டால், நாட்டுக்கு நல்லதல்ல.சர்வதேச நாடுகள் எமக்கு எதிராக வரும். ஏன் அவ்வாறான நிலைமையை நாம் ஏற்படுத்த வேண்டும்?.வடக்கில் உள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட வேண்டும் என நாம் கூறுகிறோம். அசோக சக்கரவர்த்தி யுத்தத்தின் பின்னர், நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். இலங்கையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் காலம் வந்துள்ளது. இதனால் நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 8 தினங்களில் 10 கொலை- ரணில் :

யாழ்ப்பாணத்தில் கடந்த 8 தினங்களில் 10 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் 30 வீதமான பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக இருக்கும் நிலையில் இந்த கொலை சம்பவங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கொலை சம்பவங்கள் நாட்டின் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும் எனவும் கொலைகள் சம்பந்தமாக எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் உடனடியாக அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் ரணில் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த பிரதமர் டி.எம்.ஜயரத்ன, நாட்டில் இமடம்பெறும் முழு சம்பவங்களுடன் ஒப்பிடும் போது, யாழ்ப்பாண சம்பவங்கள் சிறியளவிலானது என தெரிவித்தார். எனினும் யாழ்ப்பாண சம்பவங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/56823/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.