Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாதுகாப்புக் காரணங்களால் மறைந்து வாழும் 28 வயதான தேவரத்தினம் யோகேந்திரா

Featured Replies

பாதுகாப்புக் காரணங்களால் மறைந்து வாழும் 28 வயதான தேவரத்தினம் யோகேந்திரா தான் கடத்தப்பட்டு, மயிரிழையில் உயிர் தப்பியமை குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் 53 நிமிட நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும்படி சிறிலங்காவின் பொலிஸ், மனித உரிமைகள் ஆணையம், தேசிய பொலிஸ் ஆணையம் ஆகியவற்றிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வந்துள்ளதாவது:

'ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பொலிஸ் கண்காணிப்பாளர் விஜேசூர்யா இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியவர். இவர் மீது தேவரத்தினம் யோகேந்திரா வழக்குத் தொடுத்திருந்தார்.

நவம்பர் 6, 2010 அன்று யோகேந்திரா கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் விஜேசூர்யா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, இலஞ்ச ஊழல் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தான் கையூட்டுப் பெற்றதாக விஜேசூர்யா ஒப்புக் கொண்டதால் கைது செய்யப்பட்டார்.

ஆனால் பொலிஸ் கண்காணிப்பாளர் விஜேசூர்யா கைது செய்யப்பட்ட நாள் முதற்கொண்டே அவரின் மீது முறைப்பாடு தெரிவித்திருந்த தேவரத்தினம் யோகேந்திராவின் வாழ்க்கையில் பல மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் ஆரம்பித்துள்ளன.

சிறிலங்காவின் பொலிஸ் உயரதிகாரிகள், சிறிலங்கா மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட பல இடங்களிலும் விஜேசூர்யா குறித்த முறைப்பாட்டை தேவரத்தினம் யோகேந்திரா அளித்துள்ளார். இது தொடர்பாக பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இது போன்று விஜேசூர்யா மீது தேவரத்தினம் யோகேந்திரா தொடுத்த வழக்கு ஒன்று ஜனவரி 11, 2011 அன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு வழக்கு மார்ச் 1, 2011 அன்று விசாரிக்கப்பட உள்ளது.

தேவரத்தினம் யோகேந்திரா தொடுத்த முதல் வழக்கு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பின், அவர் வாழ்க்கையில் பல மிரட்டல்களை எதிர்கொண்டு வருகிறார். இந்த மிரட்டல் சம்பவங்களின் விபரங்கள் பின்வருமாறு:

ஜனவரி 15, 2011 தைப்பொங்கல் தினத்தன்று அதிகாலை 01.30 மணியளவில் சீருடை அணிந்த ஐந்து பொலிஸார் தேவரத்தினம் யோகேந்திராவின் வீட்டுக்குச் சென்று அவரை எழுப்பி விசாரணை செய்ய வேண்டியிருப்பதாகக் கூறி கைது செய்துள்ளனர்.

யோகேந்திராவின் தந்தை தேவரத்தினம் தனது மகனின் கைதுக்கான காரணத்தைக் கேட்ட போது அவர் மீது முறைப்பாடு இருப்பதால் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக சிறிலங்காப் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்பின், யோகேந்திராவை வெளியே நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற ஜீப் ஒன்றில் இழுத்துச் சென்று தள்ளியுள்ளனர். அது காவல்துறை வாகனமும் அல்ல. இதெல்லாம் நடந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்ததுடன் பொங்கலை கொண்டாடும் விதத்தில் வானவேடிக்கைகளும், வெடிச் சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன.

இவ் வாகனத்திற்குள் கண்கள் கட்டப்பட்டு, கைவிலங்கிடப்பட்ட நிலையில் யோகேந்திரா இருந்துள்ளார். பின்னர் 200 மீட்டர் தொலைவில் உள்ள தனியான மயானத்திற்கு யோகேந்திராவை சிறிலங்காப் பொலிஸார் கொண்டு சென்று, அவரை வாகனத்தை விட்டு இறக்கிய பின்னர் அவர் கண்ணில் கட்டப்பட்டிருந்த துணி அவிழ்க்கப்பட்டு முழங்காலிடச் செய்துள்ளனர்.

தமக்கு எதிராகச் செயல்பட்டால் கொன்று விடுவோம் எனவும் அப் பொலிஸார் யோகேந்திராவை மிரட்டியுள்ளதுடன், அவரின் தோள்பட்டையிலும், உடம்பிலும் கடுமையாகத் தாக்கியுள்ளதுடன், அவரை மிரட்டும் பாணியில் தங்களிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை நோக்கி சுட்டதுடன் தொடர்ந்தும் போலிஸாருக்கு எதிரான முறைப்பாடு கொடுத்தால் மயானத்திற்குத் தான் யோகேந்திரா செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும் மிரட்டியுள்ளனர்.

ஒரு மணித்தியால மிரட்டல்களுக்குப் பின்னர் யோகேந்திராவின் கைவிலங்கை அகற்றிய சிறிலங்காப் பொலிஸார் மீண்டும் அவரை வாகனத்தில் சென்று விட்டுள்ளனர்.

இச் சமயத்தில் தன்னைத் தாக்கிய பொலிஸாரில் ஒருவர் சார்ஜன்ட் சரத் என்பதை பெயர் அடையாளத்தை பார்த்து யோகேந்திரா கண்டுபிடித்துள்ளதுடன், தன்னைக் கடத்தியது ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளே என்பதை நிருபிக்க அவர்கள் பயன்படுத்திய வெற்றுத் துப்பாக்கி ரவைகள் இரண்டினையும், மழையில் நனையாமல் இருப்பதற்காக சிறிலங்காப் பொலிஸாரால் பயன்படுத்தப்பட்ட கவச மேலாடையையும் யோகேந்திரா எடுத்து மறைத்து வைத்துள்ளார்.

இந் நிலையிலேயே, பாதுகாப்புக் காரணங்களுக்காக மறைந்து வாழும் தேவரத்தினம் யோகேந்திரா தான் சிறிலங்காப் பொலிஸாரால் கடத்தப்பட்டமை குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் 53 நிமிட நேர்காணல் ஒன்றை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={FE817F06-6875-46E1-A635-95342D0FD990}

  • தொடங்கியவர்

மாதிரி கடிதம் மற்றும் யாருக்கு உங்கள் கோரிக்கையை அனுப்ப வேண்டும்:

http://www.ahrchk.net/ua/support.php?ua=UAC-007-2011

கட்டுரை: http://www.ahrchk.net/ua/mainfile.php/2010/3628/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.