Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன,இலங்கை உறவால் இந்தியாவிற்கு இருக்கும் ஆபத்தை பிரதமருக்கு உணர்த்திய வைகோ.

Featured Replies

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது பிரதமர் மன்மோகன் சிங் - வைகோ சந்திப்பு!

ஐந்து நிமிடங்களுக்கு முன்பே வாயிலில் வந்து நின்ற பிரதமர், வைகோவைக் கட்டி அணைத்து வரவேற்றுள்ளார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். அதன் பிறகு நடந்த உரையாடல் சீரியஸ் ரகம்.

வைகோ, ''நான் டாக்டர் மன்மோகன் சிங் மீது மிகுந்த அன்புகொண்டு உள்ளேன், மதிக்கிறேன். ஆனால், இந்தியப் பிரதமரை கடுமையாக விமர்சிக்கிறேன்!'' என்று கூற, ''உங்கள் நிலைப்பாட்டை நான் பாராட்டுகிறேன்!'' என்றாராம் மன்மோகன்.

பேச்சின் இடையே வாக்குவாதமும் நடந்திருக்கிறது. ''இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யாதீர்கள் என்று நான் பலமுறை கேட்டுக்கொண்டும், அதைப் பொருட்​படுத்தாமல் நீங்கள் செய்தீர்கள். லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை, சிங்கள அரசு கொன்று குவித்துவிட்டது. இப்போது தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுடுவதும் கொல்வதும் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது!'' என்று வைகோ சொல்ல, ''தமிழக மீனவர்களும் எல்லை தாண்டிச் சென்றுவிடுகிறார்களே?'' என்றாராம் மன்மோகன்.

''குஜராத்தி மீனவர்களும் எல்லை தாண்டி பாகிஸ்​தான் எல்லைக்குச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் ஒருமுறையாவது குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அடித்தது உண்டா? தாக்கியது உண்டா? துப்பாக்கிச் சூடு நடத்தியது உண்டா? ஒரு உயிரையாவது பறித்தது உண்டா? ஆனால், 1980 முதல், இதுவரை 1,000 தடவைகளுக்கும் மேல் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கி இருக்கிறது. 500 பேர்களுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்டனர். இந்தியக் கடற் படையோ, கடலோரக் காவல் படையோ, இலங்கைக் கடற் படையின் தாக்குதலைத் தடுக்கவும், தமிழக மீனவர்களைக் காக்கவும், ஒரு தடவையாவது முயற்சித்தது உண்டா?'' என்று பதிலுக்கு சற்று காட்டமாகவே கேட்டிருக்கிறார், வைகோ.

அப்போது அங்கே இருந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், ''கடைசியாக நடந்த துப்பாக்கிச்சூட்டை, நாங்கள் நடத்தவில்லை என்று இலங்கை அரசு மறுக்கிறதே?'' என்றிருக்கிறார்.

''என்றைக்குத்தான் அவர்கள் ஒப்புக்​கொண்டார்கள்? எப்போதுமே அவர்கள் பழியை வேறு யார் மீதாவது​தான் போடுகிறார்கள். இந்திய அரசு அதைக் கண்டிப்பதே இல்லை. அதனால்தான், இப்படித் திமிரோடு பொய் சொல்கிறார்கள். பிரதமரே இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும்!'' என்று கூறியபடி மீனவர் படுகொலை தொடர்பாக வைகோ கொடுத்த மனுவை வாங்கிய மன்மோகன், அந்த இடத்திலேயே முழுமையாகப் படித்தாராம்.

''இலங்கையில் சீனா வலுவாகக் கால் பதித்துவிட்டது. 'எதிர்காலத்தில் சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையில் தளம் அமைத்துக்கொண்டு இந்தியாவுக்குக் கேடு செய்யும். அப்போது ராஜபக்ஷே கூட்டம் இந்தியாவுக்கு எதிராகத்தான் செயல்படப் போகிறது. ஈழத் தமிழர்கள் அங்கு வலுவாக இருந்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களோடு ரத்த பந்த உறவு காரணமாக இந்தியாவுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்!'' என்று வைகோ சொன்னதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன், ''நானும் அந்த ஆபத்தை உணர்கிறேன்!'' என்றாராம்.

அதுசரி, எல்லாம் தெரிந்தவர்தானே அவர்!

படங்கள் பார்க்க.....

http://www.thedipaar.com/news/news.php?id=23644

Edited by easyjobs

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் எத்தனை நாளைக்கு அடுத்தவன் உறவு பற்றி கோள்மூட்டப்போகின்றோம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.